என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்13 Dec 2018 4:38 PM GMT (Updated: 13 Dec 2018 4:38 PM GMT)
துறையூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தா.பேட்டை:
துறையூர் தாலுகா முத்தையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமல்பிரகாஷ். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது உறவினர் மகள் அபிநயா (19). நர்சிங் படித்து விட்டு திருப்பூரில் தனியார் மருத்துவ மனையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து நிலையில் அபிநயாவிற்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
இதையடுத்து கமல் பிரகாசும், அபிநயாவும் கடந்த சிலதினங்களுக்குமுன்பு பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடி கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீசில் நேற்று முன்தினம் மணக்கோலத்தில் இருவரும் பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த கமல்பிரகாசின் பெற்றோர்கள் இருவரையும் பார்த்து கொள்வதாக போலீசாரிடம் தெரிவித்து அழைத்து சென்றனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X