search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    X

    பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    துறையூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தா.பேட்டை:

    துறையூர் தாலுகா முத்தையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமல்பிரகாஷ். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது உறவினர் மகள் அபிநயா (19). நர்சிங் படித்து விட்டு திருப்பூரில் தனியார் மருத்துவ மனையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து நிலையில் அபிநயாவிற்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். 

    இதையடுத்து கமல் பிரகாசும், அபிநயாவும் கடந்த சிலதினங்களுக்குமுன்பு பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடி கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். 

    பின்னர் தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீசில் நேற்று முன்தினம் மணக்கோலத்தில் இருவரும் பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த கமல்பிரகாசின் பெற்றோர்கள் இருவரையும் பார்த்து கொள்வதாக போலீசாரிடம் தெரிவித்து அழைத்து சென்றனர். 

    காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×