என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகள்
Byமாலை மலர்28 Jan 2019 10:06 AM GMT (Updated: 28 Jan 2019 10:06 AM GMT)
வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடிகளை பெற்றோருடன் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 19). எம்.வி.எம். கல்லூரியில் பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வேடசந்தூர் அடைக்கனூரைச் சேர்ந்தவர் கோபிசரவணன் (21). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பஸ்சில் செல்லும்போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே நேற்று பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
மற்றொரு சம்பவம்...
குஜிலியம்பாறை அருகே உள்ள கூம்பூரைச் சேர்ந்தவர் பெருமாள் (23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கூம்பூரைச் சேர்ந்த தேன்மொழி (19) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
பெற்றோருக்கு பயந்து நேற்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் தனத்தனியாக வரவழைத்து சமரசம்பேசி அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்கும்படி அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 19). எம்.வி.எம். கல்லூரியில் பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வேடசந்தூர் அடைக்கனூரைச் சேர்ந்தவர் கோபிசரவணன் (21). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பஸ்சில் செல்லும்போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே நேற்று பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
மற்றொரு சம்பவம்...
குஜிலியம்பாறை அருகே உள்ள கூம்பூரைச் சேர்ந்தவர் பெருமாள் (23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கூம்பூரைச் சேர்ந்த தேன்மொழி (19) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
பெற்றோருக்கு பயந்து நேற்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் தனத்தனியாக வரவழைத்து சமரசம்பேசி அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்கும்படி அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X