search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protection"

    • தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை (21-ந்தேதி) தை அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும்.

    பகல் 11 மணிக்கு அக்னி தீர்த்தக்கரைக்கு ராமர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி 12 மணிக்கு காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக தை அமாவாசையை முன்னிட்டு பகல் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும். அக்னிதீர்த்தக்கடல் பகுதியி லுள்ள மண்டகப்படியில் இருந்து இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்சமுர்த்திகளுடன் கருட வாகனத்தில் ராமர் புறப்பாடு நடைபெறும் என்று கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.

    தை அமாவாசை முன்னிட்டு ராமேசுவ ரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வசதிக்காக ராமேசுவரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி பாம்பன் முதல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை வரை ஆயிரம் போலீசாரை நியமித்து பாதுகாப்பு அளிக்கவும், நகர் முழுவதும் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவில் 4 ரத வீதிகளில் காமிரா அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    • விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்.
    • சந்தனம், குங்குமமிட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டார ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சூலமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை திமுக பேரூர் செயலாளர் வக்கீல் துளசி அய்யா, அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணைத் தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லதா வரவேற்று பேசினார். இந்த வளைகாப்பு விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் மாலை அணிவித்து தட்டில் பழங்கள் இனிப்பு வைத்து சீர் வழங்கப்பட்டது அனைவருக்கும் இனிப்புடன் கூடிய ஐந்து வகை சித்ரானங்கள் உணவு விருந்து வழங்கப்பட்டது.

    விழாவில் அய்யம்பேட்டை பேரூராட்சி அதிகாரி ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
    • அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

    அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மை அலுவலர் ரசிகப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், மாலதி, திலீப்குமார் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் ரமேஷ், கவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் காங்கயத்தில் நடைபெற்றது.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து இப்பகுதியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம கோவில்களில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி, மகளிா் திட்ட நிா்வாகிகள், காங்கயம் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
    • கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசுமருந்து அடிக்கும் பணி.

    வேதாரண்யம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுரைபடியும், தலை ஞாயிறு வட்டார மருத்துவர் (பொஅலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதல்படியும், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் நாகை.செல்வன் தலைமையில், அவரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் முன்னிலையில் கொசுக்களை கட்டுப்படு த்தும் வகையில் கொசும ருந்து அடிக்கும் பணியை அவரிக்காட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் மற்றும் களப்பணி யாளர் குழுக்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் தினசரி குறிப்பிட்ட விகிதத்தில் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் உடனடியாக குடிநீர் தொட்டி இயக்குபவர்களை கொண்டு குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் அடங்கிய விரைவு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது.
    • ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் சிறப்புறையாற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வித்துறை சார்பில் உலக ஒற்றுமை நாள் சுடர் ஓட்டமானது பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். நகர்மன்ற துணை தலைவர் மா. சுப்பராயன் முன்னிலை வகித்தார்.

    ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் சிறப்புறை யாற்றினார்.ஜோதி ஓட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாட்டினை காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்

    உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல் ஹரிஹரன், ராகேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    • ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுகிறது.
    • பனைஓலை மற்றும் தார்பாய்களை கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை 9 மாத காலம் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகம் முழுவதும் லாரி மூலம் அனுப்பிவைக்கபடுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி துவங்கி முதல் செப்டம்பர் மாதம் வரை விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முனபு பெய்த மழைக்கு பின்பு கடந்த ஒரு வாரத்திற்கு பின் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் துவங்கபட்டது கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கபட்டது.

    மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்க சத்தியமில்லாத நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க பனைஓலை மற்றும் தார்பாய்களைக் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    குறைந்த அளவே உப்பு கையிருப்பில் உள்ளதால் நல்ல விலை போகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பணிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோரின் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் விலக்கி கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முறையான அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு 2 ஆண்டு களுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தற்போதே முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மாநிலம் முழுவதும் இந்து இயக்கங்களை சேர்ந்த 89 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இந்து இயக்கங்களை சேர்ந்த 5 பேருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.சென்னை வேப்பேரி, சூளை கூட்டான்குளம் பகுதியில் வசித்து வரும் பாரத் இந்து முன்னணி அமைப்பின் கிளை தலைவர் ஆர்.டி.பிரபு, பாரத் முன்னணியை சேர்ந்த அகில பாரத இந்து அமைப்பை சேர்ந்த விருகை சிவகுமார், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முகுந்தன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான பாத்திமா ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்து இயக்க பிரமுகர்கள் 89 பேருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் தனிப்பட்ட பாதுகாப்பு பணியை காவலர்கள் தொடங்கியுள்ளனர். இந்த பாதுகாப்பு பணிக்காக 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள 89 பேரில் பெரும்பாலானோரின் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் விலக்கி கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நல்ல முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். சிலைகள் அமைக்கப்படும் இடங்களிலும், அவர்கள் இதர ஏற்பாடுகளை செய்வ தற்காக வெளியில் செல்லும் இடங்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், இதனால் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருதியும் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.
    • கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர், போலி ஆதார் ஆவணங்களை தயாரித்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.

    இந்நிலையில் பாதிக்க ப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கருமுட்டை தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கருமுட்டை தான செயல்முறைக்கு என புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    அப்போது கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர்கள் எஸ். எம்.செந்தில், ஈஸ்வரமூர்த்தி, வேதா னந்தம், வக்கீல் அணி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சின்னத்துரை, குணசேகரன், பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி,

    தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்தி சுப்பிரமணி, செல்வமணி, இந்திரகுமார், ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன், துணைத் தலைவர் ரவீந்திரன் உள்பட பா.ஜனதா கட்சி பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • தன்னார்வலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். உதவி ஆய்வாளர் லிங்க கனி, தொழிலாளர் நல ஆய்வாளர், தன்னார்வலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை யூனியன் சேர்மனிடம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் வழங்கினார்.

    • குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
    • குழந்தைகளுக்கு குழந்தைகள் மூலமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் 2-வது மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி தலைமையில் நடந்தது.

    குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சோபனா, மதுரை வடக்கு துணை தாசில்தார் தனமூர்த்தி, மாநகராட்சி மண்டல அதிகாரி அகமத்இப்ராகிம், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 2-வது மண்டலத்தில் உள்ள கவுன்சிலர்கள் மாநகராட்சி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை ஒருங்கிணைந்து கல்வி இடைநிற்றலை தடுத்தல், குழந்தைகள் பாலியல் தீங்கிழைப்பில் இருந்து தடுத்தல் தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருமண மண்டப உரிமையாளர்கள், கோவில் நிர்வாகங்களில் கூட்டம் நடத்தி மணமக்கள் அரசு நிர்ணயம் செய்த வயதை பூர்த்தி செய்துள்ளனரா? என்பதை சான்றிதழ் மூலம் உறுதி செய்த பிறகே திருமணத்துக்கு அனுமதிக்க வேண்டும், குழந்தைகளுக்கு குழந்தைகள் மூலமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×