search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைப்பு"

    • கர்ப்பிணி பெண்கள் ஓய்வெடுக்கும் அறையும் ஏற்பாடு
    • உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதில் பெண் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதே போல மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களில் சிலர் கர்ப்பிணி தாய்மார்களாகவும், சிலர் கைக்குழந்தையுடனும் வந்து சாமி கும்பிட்டு விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் இட வசதி இல்லை. திறந்த வெளியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அவல நிலை இருந்து வந்தது. எனவே இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தை களுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் வரை அமைக்க வேண்டும் என்று பெண் பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதேபோல கர்ப்பிணிகள் தங்கி இளைப்பாறு வதற்கு வசதியாக ஓய்வறை வசதி செய்துதர வேண்டும் என்றும் பெண் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் தாய் மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வாசலுக்கு அருகில் தாய்மார்கள் பாலூட்டும் அறையும், கர்ப்பிணிகள் ஓய்வெடுக்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பெண் பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

    • கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள்.
    • முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடி மரமண்டபம், பிரகாரம், தேர்மண்டபம். கலையரங்கம் போன்ற அமைப்புக்களுடன் காணப்படுகிறது.

    கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள். அம்மன், சுவாமி இருவரின் சுயம்புவாகத் தோன்றிய பாறை வடிவங்களும் அவற்றின் பின்புறம் பீடத்தின் மேல் இருவரின் உருவச் சிலைகளும் அமைந்துள்ளன.

    கருவறையினை அடுத்து அர்த்தமண்டபமும் அதன் இருபுறமும் வழிபாட்டுக்குரிய பொருட்கள் வைக்கும் அறைகள் இரண்டும் அமைந்துள்ளன.

    அர்த்த மண்டபத்தினை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபம் கம்பித் தடுப்பால் இருபிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல்பிரிவில் பேச்சியம்மனும் கருப்பசாமியும் இரண்டாவது பிரிவில் பைரவரும் காணப்படுகின்றனர்.

    மகாமண்டபத்தை அடுத்துக் கொடிமர மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் நடுவில் மூன்று அடி உயரத்தில் பலிபீடமும் அதன் பின்புறம் கொடிமரமும் உள்ளன. பலிபீடத்தின் முன்பு சிம்மவாகனம் ஒன்று கருவறையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அருகில் ஐந்து அடி உயரச் சூலம் ஒன்று தரையில் பதிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் மகா வல்லப விநாயகரும் வாயிலின் இருபுறங்களிலும் இரு பூதத்தார்களும் உள்ளனர்.

    கொடிமர மண்டபத்தின் நடுவில் பலிபீடத்தை அடுத்து முப்பத்திரண்டு அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் பொதியப்பட்டுக் காட்சியளிக்கிறது. அடிப்பாகச் செப்புத் தகட்டில் வடபுறம் அம்மனும் சுவாமியும் தென்புறம் சூலமும் கீழ்ப்புறம் விநாயகரும் மேற்குப் பகுதியில் பாலசுப்பிரமணியரும் உருவங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளனர்.

    கொடிமரம் சந்தனமரத்தால் ஆனது. இது பதினெட்டுப் பாகங்களைக் கொண்டது. பதினெட்டு ஆகமங்கள் என்பதன் அடையாளமாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

    முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் முன்பக்கம் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கோவில் மண்டபங்களின் கிழக்கு, தெற்கு, மேற்குச் சுவர்களில் அர்த்தநாரீசுவரர், மீனாட்சியம்மன், துர்க்கை அம்மன் ஆகியோரின் புடை சிற்பங்கள் காணப்படுகின்றன. இப்பிரகார மண்டபத்தில் அழகிய தெய்வங்களின் ஓவியங்களும் துர்க்கையம்மன், மீனாட்சியம்மன் சிலைகளும் உள்ளன. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகருக்கெனத் தனிச் சந்நிதி உள்ளது.

    கருவறையின் மேல் சிறிய விமானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது முப்பத்தைந்து அடி உயரமாகும். இதில் அம்மன், சுவாமி சிற்பங்களும் காவல் தெய்வங்கள், சிம்மம் ஆகியவற்றின் சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் உச்சியில் மூன்று கும்பங்கள் உள்ளன.

    கோவில் முன்மண்டபத்தின் மேலே சிறிய மூன்று கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் அம்மன், சுவாமி உருவங்கள், மகிசாசுரமர்த்தினி, முருகன், விநாயகர், காவல் தெய்வங்கள், காளி, யானை, சிம்மன் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    முத்தாரம்மன் கோவிலுக்கு வடபுறம் சிறிது தொலைவில் மேற்கு நோக்கிய வண்ணம் தேர்மண்டபம் தேர் ஒன்று உள்ளது. விழா நாட்களில் அம்மன் இந்தத் தேரில் வீதி உலா வருகிறாள். இத்தேர் தவிர, சூரனைச் சுமந்து செல்வதற்குரிய சப்பரம் ஒன்றும் உள்ளது.

    தேர் விலை உயர்ந்த தோதகத்தி மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இரு குதிரைகள் தேரினை இழுத்துச் செல்லும் தோற்றத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சாரதியாகப் பிரம்மனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறமும் இரு மங்கையர் உருவங்கள் கவரி வீசுவது போன்று அமைக்கப்பட்டுள்ளன. அழகிய சிறிய தூண்களும் சிறிய கோபுர அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளன.

    முத்தாரம்மன் கோவிலின் மேற்கில் கிழக்கு நோக்கிய வண்ணம் கலையரங்கம் ஒன்று உள்ளது. இதனைக் கட்டிய நன்கொடையாளரின் பெயரால் 'சௌந்திர பாண்டிய நாடார் கலையரங்கம்' என்று இது வழங்கப்படுகிறது. இக்கலையரங்கில் கோவில் விழாக்களின் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிளக்குப் பூசையும் தசரா விழாவில் சூரனை வதம் செய்த பிறகு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றன. தவிர பொதுமக்கள் திருமணம், சடங்கு, பிறந்தநாள் விழாப் போன்ற தம் இல்ல நிகழ்ச்சிகளை இக்கலையரங்கில் குறைந்த வாடகையில் நடத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

    முத்தாரம்மன் கோவிலுக்குக் கீழ்ப்புறம் மேற்கு நோக்கி வண்ணம் பெரிய மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பல தூண்களுடன் கூடிய இம்மண்டபத்தின் உட்சுவரில் பார்வதியின் திருக்கல்யாணக் காட்சி அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இது திருமண மண்டபமாகவும் ஒவ்வொரு மாதப் பவுர்ணமியன்றும் திருவிளக்குப்பூசை நடத்துவதற்குரிய இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    தசரா விழாவின் போது சூரனைச் சம்ஹாரம் செய்வதற்காக முத்தாரம்மன் இம்மண்டபத்திலிருந்தே புறப்பட்டுச் செல்கிறாள்.

    கோவிலுக்கு வரும் மேற்குத்திசைச் சாலையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தோரண வாயில் ஒன்று காணப்படுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு முழுமையாக ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது.

    • ராஜபாளையத்தில் ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடந்தது.
    • வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் ராஐபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்றது. ராஜபாளையம் நகரச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மதியழகன் விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி கல்லத்தியானிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

    ராஜபாளையம் நகர அவைத்தலைவராக சேது.இன்பமணி, பொருளாளராக பிச்சைக்கனி, துணைச்செயலாளர்களாக அக்பர் அலி, லிங்கம், பூபதி மற்றும் மாவட்ட பிரதிநிதிகளாக புஷ்பவேல், ஞானசேகரன், குருமூர்த்தி ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ரகுராமன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கம்மாபட்டி ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது.
    • இதனால் யானைகள் விவசாய நிலங்களில் புகுவது குறையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வன காப்பகத்தில் தாளவாடி, டி.என்.பாளை யம் உள்பட 10 வனசரகங்கள் உள்ளன. மேலும் சத்திய மங்கலம் வனபகுதியில் புலிகள் காப்பகம் அமைந்து உள்ளது.

    இந்த வனப்பகுதிகளில் யானைகள், புலி, காட்டெ ருமை, மான், சிறுத்தை உள் பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது.

    திண்டுக்கல்- மைசூர் தேசிய நேடுஞ்சாலையில் அமை ந்துள்ள தாளவாடி வனப்பகுதியில் இருந்து யானை கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி ரோட்டில் உலவி வருகிறது.

    மேலும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவ சாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்பு, மக்கா ச்சோளம் உள்பட பல்வேறு பயிர்களை தின்றும், மிதி த்தும் நாசப்படுத்தி வருகிறது.

    இதை தடுக்கும வகையில் தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட வன கிராம பகுதிகளில் அகழி வெட்டியும், மின் வேலி அமைத்தும் கண்காணிக்கப் படுகிறது. ஆனால் இதையும் மீறி ஒரு சில யானைகள் மாற்று வழியில் கிராம ங்களில் புகுந்து வருகிறது.

    இந்த நிலையில் விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்கும் வகையில் தாளவாடி மல்குத்தி புரம் முதல் வீரப்பன் தொட்டி வரை வனப்பகுதியை யொட்டி உள்ள கிராம பகுதியில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழிகள் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து பராமரித்து வருகிறார்கள்.

    மேலும் யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் வெட்டப்ட்டு உள்ள அகழியையொட்டிய இரிபுரம் முதல் மல்குத்தி புரம் வரை மின் வேலி அமைக்க முடிவு செய்ய ப்பட்டது.

    இதையொட்டி அந்த பகுதியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் இணைந்து ரூ.16 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது.

    இதை ஆசனூர் வன அதிகாரி தேவேந்திரகுமார் மீனா தொடங்கி வைத்தார். இதனால் யானைகள் விவ சாய நிலங்களில் புகுவது குறையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தாள வாடி ரேஞ்சர் சதீஷ் மற்றும் வனத்துறையினர், விவசாயி கள் கலந்து கொண்டனர்.

    • அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வந்தனர்
    • வாகன தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதியான என்.ஜி.ஆர். ரோட்டில் நகராட்சி வணிகவளாகம், உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் அமைந்துள்ளன. எப்பொழுதும் வாகன போக்குவரத்து நிறைந்திருக்கும். இதில் கடைவீதி வழியாக சரக்கு வாகனங்களும் வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில்,என்.ஜி.ஆர்.ரோட்டில் அண்ணா சிலை அருகே, வாகன தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்தது
    • செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக திட்டமிடப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்படாமல் உள்ள நிலையில், ராஷ்ட்ர சேவிகா சமிதி-மகளிர் அமைப்பு சார்பில் வழக்க மாக நடைபெறுகின்ற அணிவகுப்பு ஊர்வலம் குலசேகரத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டிருந்து.

    இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தக்கலை டி.எஸ்.பி கணேசன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந் நிலையில் செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக காவல் ஸ்தலம், கூடத்தூக்கி தனியார் பள்ளியில் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் 1320 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாவறை ஊராட்சியில் உள்ள பொட்டக்குளம் முதல் இடஞ்சை வழி பாறப்பாட்டு விளை செல்லும் சாலை, தும்மங்கோடு முதல் மூலவிளை செல்லும் சாலை, புல்லுவிளாகம் முதல் மணிலி பள்ளிக்கல் சாலையில் ஆதார் ஜாண் வீடு முதல் ஜாண்சன் வீடு வரையும் உள்ள மூன்று சாலைகளும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.

    இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. இந்த மூன்று சாலைகளையும் சீரமைக்க பொட்டக்குளம் - இடஞ்சை வழி பாற்பாட்டு விளை சாலைக்கு ரூ.5 லட்சமும், தும்மங்கோடு முதல் மூலவிளை சாலை பக்கசுவர் அமைத்து காங்கிரீட் சாலை அமைக்க ரூ.3 லட்சமும், புல்லு விளாகம் முதல் மணலி பள்ளிக்கல் சாலையில் ஆதார் ஜாண் வீடு முதல் ஜாண்சன் வீடு வரை காங்கிரீட் சாலை அமைக்க ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகள் முடிவடந்ததையெடுத்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ மூன்று சாலைகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வாவறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னப்பர், முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் கிறிஸ்டோபர், கவுன்சிலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தில் முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவில்களின் நடை தினமும் காலை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

    இதே போல் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம் போல் கோவில்களை திறக்க வந்த பூசாரிகள் 2 கோவில்களின்

    உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ 25,000 திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்களும் வந்து பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் இதற்கு முன்பு கோவில்களில் கைவரிசை காட்டியவர்கள் பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×