search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tarboy"

    • ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுகிறது.
    • பனைஓலை மற்றும் தார்பாய்களை கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை 9 மாத காலம் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகம் முழுவதும் லாரி மூலம் அனுப்பிவைக்கபடுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி துவங்கி முதல் செப்டம்பர் மாதம் வரை விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முனபு பெய்த மழைக்கு பின்பு கடந்த ஒரு வாரத்திற்கு பின் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் துவங்கபட்டது கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கபட்டது.

    மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்க சத்தியமில்லாத நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க பனைஓலை மற்றும் தார்பாய்களைக் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    குறைந்த அளவே உப்பு கையிருப்பில் உள்ளதால் நல்ல விலை போகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    ×