search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
    X

    திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

    • குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • தன்னார்வலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். உதவி ஆய்வாளர் லிங்க கனி, தொழிலாளர் நல ஆய்வாளர், தன்னார்வலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை யூனியன் சேர்மனிடம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் வழங்கினார்.

    Next Story
    ×