search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
    X

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

    வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். (வயது 20). இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது பதிவு திருமண விபரம் தெரிய வரவே பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமலைக்கேணியில் திருமணம் செய்து கொண்டனர்.

    தங்களுக்கு பெற்றோர்களால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்த அவர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித தடையும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×