என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prithvi Shaw"
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர், முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்து அசத்தினார். இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவருக்கு, ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுக்க விரும்பினார். அவரும் சளைக்காமல் ரசிகர்களுக்கு போஸ் கொடுத்தார். பயிற்சி போட்டியின் நேற்றைய ஆட்டம் மழையா் தடைபட்டது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
Young @PrithviShaw already managing to grab eyeballs here in Australia. Fans throng at The SCG for a selfie and autograph from the rising Star of #TeamIndia 🌟😎👌🏻🤙🏻 pic.twitter.com/EvYwGgEMTU
— BCCI (@BCCI) November 29, 2018
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.
அதன்படி நேற்று சிட்னியில் தொடங்க இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய லெவன் ‘டாஸ்’ வென்று இந்திய அணியை முதலில் விளையாட அழைத்தது. பிரித்வி ஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 3 ரன்னிலேயே வெளியேறினார்.
அடுத்து புஜாரா களம் வந்தார். இருவரும் ஆஸ்திரேலிய லெவன் பந்து வீச்சை விளாசி தள்ளினர். பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
கேப்டன் விராட்கோலி 4-வது வீரராக ஆடினார். அவரும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் எடுத்தனர்.
புஜாரா 89 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி), விராட்கோலி 87 பந்தில் 64 ரன்னும் (7பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி 204 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரகானே- விகாரி ஜோடியும் சிறப்பாக ஆடியது.
ரகானே 56 ரன் எடுத்து ரிட்டயர்ட் அவுட்டானர். விகாரி 53 ரன்னும், ரோகித்சர்மா 40 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி 92 ஓவரில் 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலிய லெவன் முதல் இன்னிங்சை விளையாடியது. #AUSvIND #ViratKohli
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் எந்தவொரு அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் ரன்கள் குவிக்கலாம். அதன்மூலம் அணி வெற்றியை ருசிக்கும்.
ரோகித் சர்மா கட்டாயம் ஆடும் லெவன் அணியில் இடம்பெற வேண்டும். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்தவர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாமல் வெளியே இருக்கக்கூடாது. இந்த கருத்தை நான் நீண்ட காலமாக தெரிவித்து வருகிறேன்’’ என்றார்.
இந்தியாவின் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார். அப்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. வருகின்ற நவம்பர் 1-ந்தேதி ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரித்வி ஷாவிற்கு இடம் கிடைக்கவில்லை. காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்றால் ரஞ்சி டிராபியில் விளையாடுவார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பிரித்வி ஷா ரஞ்சி டிராபியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் பிரித்வி ஷாவிற்கு இடமுண்டு. இந்நிலையில் இந்த காயம் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), 2. தவால் குல்கர்னி (துணைக் கேப்டன்), 3. சித்தேஷ் லாட், 4. ஜெய் பிஸ்ட்டா, 5. சுர்ய குமார் யாதவ், 6. குமார் யாதவ், 7. அஷாய் சர்தேசாய், 8. ஆதித்யா டரே, 9. ஏக்நாத் கெர்கார், 10. ஷவம் டுபே, 11. ஆகாஷ் பர்கர், 12. கர்ஷ் கோதாரி, 13. ஷாம்ஸ் முலானி, 14. அகில் ஹெர்வாத்கர், 15. துஷ்கர் தேஸ்பாண்டே, 16. ராய்ஸ்டன் தியாஸ்.
மற்றொரு இளம் வீரரான பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். தொடக்க வீரரான பிரித்வி ஷா ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஐதராபாத் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் விளாசினார். இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
ஐதராபாத் டெஸ்டில் வேகப்பந்தில் தனி ஒருவராக நின்று அபாரமாக பந்து வீசி 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். இந்த மூன்று பேரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா 73-வது இடத்தை பிடித்திருந்தார். ஐதராபாத் டெஸ்டில் (70, 33 நாட்அவுட்) சிறப்பான விளையாடியதன் மூலம் 60-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் ரிஷப் பந்த் 111-வது இடத்தில் இருந்தார். தற்போது இரண்டு இன்னிங்சிலும் தலா 92 ரன்கள் அடிக்க தற்போது 62-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ் 29-வது இடத்தில் இருந்து 25-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பும்ரா, முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முதல் 25 இடத்திற்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இளம் வீரரான பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 154 பந்தில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 53 பந்தில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காலும் இருந்தார். மூன்று இன்னிங்சில் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அறிமுக தொடரிலேயே ஆட்ட நாயகன் (முதல் டெஸ்ட்) மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்ற பிரித்வி ஷாவை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.
பிரித்வி ஷா குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘பிரித்வி ஷா கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர். அவர் மும்பை அணிக்காக 8 வயதில் இருந்தே விளையாடி கொண்டிருக்கிறார்.
அவர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். அவர் சில நேரம் சச்சினைப் போன்றும், சில நேரம் சேவாக் போன்று, ஆடுகளத்தில் விளையாடும்போது சில நேரத்தில் பிரையன் லாரா போன்றும் விளையாடுகிறார்.
தொழில் தர்மத்தை உணர்ந்து தலைநிமிர்ந்து நின்றால் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.’’ என்றார்.
இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரரான பிரத்வி ஷா அறிமுக இன்னிங்சிஸ்லேயே சதம் அடித்து அசத்தினார். அதுவும் 99 பந்தில் சதம் விளாசினார். அவரது ஸ்டைல், ஆட்டம் ஆகியவற்றை வைத்து சேவாக் மற்றும் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு நெருக்கடி அளிக்க வேண்டாம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாம் பிரித்வி ஷாவை யாருடனும் ஒப்பிடக் கூடாது. அவருக்கு நெருக்கடி உண்டாகும் வகையில் நாம் ஒரு இடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதில் இருந்து விலகி அவர் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். மெதுவாக அவர் வளர வேண்டும். அதில் நமக்கு நம்பிக்கை வேண்டும்.
இதுவரை அவரை ஒரு வீரருடன் ஒப்பிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், இளம் வீரர்களுக்கு அவருடைய திறமையில் வளர்ந்து வர நாம் இடம் அளிக்க வேண்டும். பிரித்வி ஷா அபாரமான திறமையை பெற்றுள்ளார். அதை நாம் எல்லோரும் பார்த்துள்ளோம்.
அவர் முதல் ஆட்டத்தில் என்ன செய்தாரோ அதை எல்லா போட்டிகளிலும் செய்ய வேண்டும் என்பதை நான் எல்லோரும் நினைக்க வேண்டும். அவர் சூழ்நிலையை நன்றாக அறிந்துள்ளார். அவருடைய விஷயத்தில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்’’ என்றார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரிஷப் பந்த் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 84 பந்தில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜடேஜா தனது சொந்த மைதானத்தில் ஆதிரடியை வெளிப்படுத்தினார். விராட் கோலி (139), அஸ்வின் (7), குல்தீப் யாதவ் (12), உமேஷ் யாதவ் (22) ஆதரவு கொடுக்க ஜடேஜா 128 பந்தில் 99 ரன்னை தொட்டார். 150-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல் சதத்தை அடித்தார் ஜடேஜா.
149.5 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 100 ரன்னுடனும், முகமது ஷமி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தேவேந்திர பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்த பிரித்வி ஷா ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து செஞ்சூரி அடித்தார். பெரிய போட்டி, முதல் ஆட்டம், அவருக்கு தெரிந்த விளையாட்டை எளிதாக ஆடினார். நேர்மறையான, சிறந்த மனோநிலை, திறமையான ஆட்டம் மிகவும் அபாரம். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும், இந்தியாவிற்கான போட்டியிலும் அவரது ஆட்டம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
பிரித்வி ஷா ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாட முடியும். இன்னும் ஒரு மாதத்தில் பிரித்வி ஷா ஆஸ்திரேலியா செல்ல வேண்டியுள்ளது. அவர் ஒரு சிறந்த பேக்-புட் வீரர் என்பதாபல் அங்கு சிறப்பாக விளையாடுவது உறுதி’’ என்றார்.
மும்பையை சேர்ந்த பிரித்விஷா அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். குறைந்த வயதில் அறிமுக போட்டியில் சதம் அடித்து இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
பிரித்விஷா பயமின்றியும், பதற்றமின்றியும் அருமையாக விளையாடினார். அவரது ஆட்டத்தை தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர்.
பிரித்விஷாவை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-
பிரித்வி ஷா அருமையாக விளையாடினார். அவர் அறிமுக போட்டியில் பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளார். அவரது பேட்டிங்கில் தெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்றார்.
பிரித்விஷாவுக்கு இது தனி சிறப்பு வாய்ந்த நாளாக இருந்திருக்க வேண்டும். அறிமுக டெஸ்டில் சதம் அடித்துள்ளார். ரஞ்சி கோப்பை, துலிப் டிராபி ஆகியவற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த அவர் சர்வதேச போட்டியிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார். ஆனால் அவரை ஷேவாக்குடன் ஒப்பிடக் கூடாது.
பிரித்விஷாவை அவரது உலகத்தை பார்க்க விட வேண்டும். அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. தென் ஆப்பிரிக்க மண்ணிலும் ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவர் ஷோவாக்குடன் ஒப்பிட கூடாது என்றார்.
சுரேஷ் ரெய்னா கூறும் போது, பிரித்விஷா கடினமாக உழைக்கும் வீரர். அவரது பேட்டிங் எனக்கு ஷேவாக்கை ஞாபகப்படுத்துகிறது. அவரது ஷாட்டுகள் உயர்தரமானது. அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. #PrithviShaw #ravishastri #sachin #sehwag
இருவருக்கும் பதில் உள்ளூர் தொடர் மற்றும் இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருவரில் ஒருவர் லோகேஷ் ராகுல் உடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அணியில் இடம்பிடிக்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில் இவர்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை வைத்துதான் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.
இந்நிலையில் புதுமுக வீரர்களான மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம் என்று துணைக் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கும். இது அவர்கள் திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு.
ப்ரித்வி ஷா இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவன் சிறுவனாக இருக்கும்போதே நான் பார்த்திருக்கிறேன். இருவரும் இணைந்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம். உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உள்ளூர் தொடரிலும், இந்தியா ‘ஏ’ அணிக்காகவும் ப்ரித்வி ஷா விளையாடிய ஆட்டத்தை பார்க்க விரும்புகிறேன். இந்த அணிக்காக சிறப்பாக விளையாடுவார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். ஆனால், எங்களுடைய ஆட்டம் மேம்படைய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம். எதிரணியை பார்ப்பதைவிட எங்களுடைய முக்கிய திட்டம், சிறப்பான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான்.
தனிப்பட்ட முறையில் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான சிறந்த பயிற்சி’’ என்றார்.
டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ப்ரித்வி ஷா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ப்ரித்வி ஷா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். அந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 61 பந்தில் சதம் அடித்த ப்ரித்வி ஷா 81 பந்தில் 14 பவுண்டரி, 6 சிக்சருடன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் அய்யர் 118 பந்தில் 8 பவுண்டரி, 10 சிக்சருடன் 144 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 55 பந்தில் 67 ரன்களும், லாட் 19 பந்தில் 30 ரன்களும் அடிக்க மும்பை அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்கள் குவித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்