என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும்- சேவாக்
Byமாலை மலர்11 Nov 2018 10:31 AM GMT (Updated: 11 Nov 2018 10:31 AM GMT)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார். #AUSvIND
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. டி20 தொடர் முடிந்த உடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டு தடையால் பங்கேற்க இயலாது. இதனால் இந்திய அணிக்கு அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் எந்தவொரு அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் ரன்கள் குவிக்கலாம். அதன்மூலம் அணி வெற்றியை ருசிக்கும்.
ரோகித் சர்மா கட்டாயம் ஆடும் லெவன் அணியில் இடம்பெற வேண்டும். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்தவர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாமல் வெளியே இருக்கக்கூடாது. இந்த கருத்தை நான் நீண்ட காலமாக தெரிவித்து வருகிறேன்’’ என்றார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் எந்தவொரு அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் ரன்கள் குவிக்கலாம். அதன்மூலம் அணி வெற்றியை ருசிக்கும்.
ரோகித் சர்மா கட்டாயம் ஆடும் லெவன் அணியில் இடம்பெற வேண்டும். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்தவர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாமல் வெளியே இருக்கக்கூடாது. இந்த கருத்தை நான் நீண்ட காலமாக தெரிவித்து வருகிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X