search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Umesh Yadav"

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
    • குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இவருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு மே 29-ம் தேதி உமேஷ் யாதவ் - தன்யா வத்வாவுக்கு திருமணம் நடந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த தம்பதியினருக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குணார் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


    இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று உமேஷ் யாதவ் - தன்யா தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து உமேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


    மகளிர் தின நாளில் உமேஷ் யாதவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3- வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வேகப்பந்து வீச்சாளரின் தந்தை பிப்ரவரி 22 அன்று நாக்பூரில் காலமானார்.
    • பிரதமர் மோடி கடிதம் மூலம் கடந்த மாதம் 27-ந் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    உமேஷ் யாதவின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர் பிப்ரவரி 22 அன்று தனது 74 வயதில் காலமானார்.

    இதனையடுத்து உமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் கடந்த மாதம் 27-ந் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார். அதில் தனது மகனை வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக மாற்றியதில் திலக் யாதவின் பங்கைப் பாராட்டினார். உமேஷின் தந்தையின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் தந்தையில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடிக்குக்கு உமேஷ் யாதவ் நன்றி தெரிவித்தார். அதில், எனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நன்றி. இந்த கடிதம் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆறுதலாக உள்ளது என கூறினார். அந்த பதிவில் பிரதமரின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.


    உமேஷ் யாதவ் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார். இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் உமேஷ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உமேஷ் யாதவ் இதுவரை இந்தியாவுக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு டெல்லியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமானார். உமேஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • மறைந்த டிகல் யாதவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
    • டிகல் யாதவ் இளமை பருவத்தில் மல்யுத்த வீரராக திகழ்ந்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் தந்தை டிகல் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.

    இளமை பருவத்தில் மல்யுத்த வீரராக திகழ்ந்த டிகல் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்தார்.

    வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார். இவருடைய திடீர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

    மறைந்த டிகல் யாதவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கமலேஷ், கிரிக்கெட் வீரர் உமேஷ், ரமேஷ் மற்றும் ஒரு மகள். டிகல் யாதவின் இறுதிச்சடங்கு நாக்பூரில் உள்ள கோலார் ஆற்றங்கரையில் நடைபெற்றது. 

    • உமேஷ், ஷமி போன்ற வீரர்கள் தங்களை நிரூபித்துள்ளனர்.
    • இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் அணிக்கு அழைக்கப்படுவார்கள்

    மொகாலி:

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் இடம் பெறுவார் என்ற பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இது குறித்து மொகாலியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஒரு தரமான பந்து வீச்சாளர், தனது திறன் குறித்து பல முறை நிரூபித்தவர், இந்த தொடர் அவருக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று கூறினார். உமேஷ், ஷமி போன்ற சக தோழர்கள் மீண்டும் வெற்றிகரமாக செயல்பட ஒரு குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை நிரூபித்துள்ளனர் என்றும் ரோகித் கூறினார்.

    இதேபோல் இளம் வீரர்களும் தங்களை நிரூபிக்க வேண்டும், அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் அணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார். விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ரோகித், விராட் கோலி தான் எங்களின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர். #Prithvishaw
    இங்கிலாந்து தொடரின்போது இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் அறிமுகமானார். கடைசி டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ராஜ்கோட் மற்றும் ஐதராபாத் டெஸ்டில் இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    மற்றொரு இளம் வீரரான பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். தொடக்க வீரரான பிரித்வி ஷா ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஐதராபாத் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் விளாசினார். இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    ஐதராபாத் டெஸ்டில் வேகப்பந்தில் தனி ஒருவராக நின்று அபாரமாக பந்து வீசி 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். இந்த மூன்று பேரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா 73-வது இடத்தை பிடித்திருந்தார். ஐதராபாத் டெஸ்டில் (70, 33 நாட்அவுட்) சிறப்பான விளையாடியதன் மூலம் 60-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் ரிஷப் பந்த் 111-வது இடத்தில் இருந்தார். தற்போது இரண்டு இன்னிங்சிலும் தலா 92 ரன்கள் அடிக்க தற்போது 62-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ் 29-வது இடத்தில் இருந்து 25-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பும்ரா, முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முதல் 25 இடத்திற்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    உமேஷ் யாதவ் எப்போதும் 100 சதவிகிதத்திற்கு மேல் பங்களிப்பை கொடுப்பவர் என்று விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். #INDvWI #ViratKohli #umeshYadav
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. மூன்று நாட்களிலேயே முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது.

    ஷர்துல் தாகூர் காயம் அடைந்தாலும், தனி ஒரு மனிதனாக உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சில் 10 விக்கெட் கைப்பற்றி சாதித்து காட்டினார். வெற்றிக்குப்பின் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவருக்கு புகழாரம் சூட்டினார்.

    ஐதராபாத் டெஸ்டில் வெற்றி பெற்றபின் விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த போட்டி மூன்று நாட்களில் முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளினார்கள். அதில் இருந்து நாங்கள் மீண்டு விட்டோம். 56 முன்னிலைப் பெற்றது போனஸ்.

    நாங்கள் மிகப்பெரிய முன்னிலை வகிக்க முயன்றோம். ஆனால், மீண்டும் பேட்டிங்கில் நாங்கள் தொய்வு அடைந்து விட்டோம். அதில் இருந்து நாங்கள் மீண்டு வர வேண்டியிருந்தது. சொந்த மண்ணில் விளையாடியதால் சூழ்நிலையை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. சொந்த மண்ணில் எதிரணிக்கு எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

    அவர்கள் விளையாடிய ஆட்டத்தை வைத்து பார்க்கும்போது இந்த போட்டி ஐந்து நாட்கள் வரை செல்லும் என்ற நினைத்தோம். இன்று நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள்தான்.

    நீங்கள் மூன்று நபர்களை பார்த்தீர்கள் என்றால், அவர்களது வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஹனுமா விஹாரி இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ரிஷப் பந்த் மிடில் ஆர்டரில் அசத்தினார். பிரித்வி ஷா இந்த தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார்.



    ஆனால் நான் உமேஷ் யாதவை மட்டும் தனியாக வெளிப்படுத்த விரும்புகிறேன். முதல் 10 பந்திலேயே ஷர்துல் தாகூர் காயத்தில் வெளியேறிவிட்டார். இந்த போட்டியில் என்ன சாதித்தாரோ அதற்கு உமேஷ் யாதவ் முற்றிலும் தகுதியுடையவர். ஷமி மற்றும் ஷர்துல் இல்லாத இந்த போட்டியில் அவர் எப்படி முன்னின்று அணியை மேல்நோக்கி எடுத்துச் சென்றாரோ அதை பார்க்க எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

    ஆடுகளத்திற்குள் இறங்கி விட்டாலே உமேஷ் யாதவ் 100 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பங்களிப்பை அணிக்கு வழங்குவார். அவரது செயலால் நாங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம். மிகவும் கடினமாக உழைத்தார். அவர் வாய்ப்பிற்காக காத்திருந்து, அதை சிறப்பாக கைப்பற்றிக் கொண்டார்.

    உமேஷ் யாதவ் இங்கு 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். நாங்கள் இங்கிலாந்தில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினோம். இதனால் தற்போது பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
    இந்திய மண்ணில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கபில்தேவ், ஸ்ரீநாத் உடன் இணைந்தார் உமேஷ் யாதவ். #UmeshYadav #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. மூன்று நாட்களிலேயே முடிந்த இந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 10 பந்துகள் மட்டுமே வீசிய தாகூர் காயத்தால் வெளியேறினார்.

    இந்திய ஆடுகளத்தில் முதல் நாள் சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடாது. அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களாலும் சாதிக்க முடியாது. ரன்களை மட்டுமே கட்டுப்படுத்த முயற்சிக்க முடியும்.

    ஆனால் உமேஷ் யாதவ் தொடர்ந்து தனது வேகப்பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ரிவர்ஸ் ஸ்விங்கில் ‘கிங்’ ஆன உமேஷ் யாதவ் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை 311 ரன்னில் ஆல்அவுட் ஆக்க முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 26.4 ஓவர்கள் வீசினார்.



    2-வது இன்னிங்சிலும் பந்து வீச்சில் அசத்தினார். முதல் ஓவரிலேயே பிராத்வைட்டை டக்அவுட்டில் வெளியேற்றினார். அதன்பின் சேஸ், டவ்ரிச், கேப்ரியல் ஆகியோரை போல்டாக்கி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய மண்ணில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 3-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் கபில்தேவ் (1980 மற்றும் 1983) இரண்டு முறையும், ஜவகல் ஸ்ரீநாத் (1999) ஒரு முறையும் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளனர். தற்போது உமேஷ் யாதவ் அசத்தியுள்ளார்.
    ஐதராபாத் போன்ற ப்ளாட் ஆடுகளத்தில ரன்களை கட்டுப்படுத்துவது மிகக்கடினம் என்று வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் இடம்பிடித்திருந்தார். உமேஷ் யாதவ் உடன் புதுப்பந்தில் பந்து வீச்சை தொடங்கிய அறிமுக வீரரான ஷர்துல் தாகூர் 10 பந்துகள் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார்.

    இதனால் உமேஷ் யாதவ் மட்டுமே வேகப்பந்து வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்கள். இன்று இந்தியா 95 ஓவர்கள் வீசியது. இதில் உமேஷ் யாதவ் மட்டும் 23 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    பேட்டிங் செய்ய சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது மிகக்கடினம் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறந்த வழியில் இருந்தது. எங்களால் வழக்கமான ஸ்விங்கோ, ரிவர்ஸ் ஸ்விங்கோ செய்ய இயலவில்லை. ஆடுகளம் மிகவும் ஃப்ளாட்டாக இருந்தது.

    இதுபோன்ற ஆடுகளத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். எவ்வளவு முடியோ அந்த அளவிற்கு ரன்களை கட்டுப்படுத்த முற்சி செய்யும்போது, அவர்கள் ஒன்று இரண்டு என ரன்கள் எடுத்து விட்டார்கள்’’ என்றார்.
    இசாந்த் ஷர்மா 5 விக்கெட் அள்ளியதால் 180 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலன் ஜென்னிங்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் சாய்க்க இங்கிலாந்து 39 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    அதன்பின் இஷாந்த் ஷர்மா பந்து வீசினார். இவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. தாவித் மலனை 20 ரன்னில் வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவை 28 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸை 6 ரன்னிலும் ஒரே ஓவரில் வெளியேற்றினார். அப்போது இங்கிலாந்து 30.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது பட்லர் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. பட்லர் உடன் சாம் குர்ரான் ஜோடி சேர்ந்தார். முதல் பந்தில் சாம் குர்ரான் ஒரு எடுத்தார். அடுத்த பந்தில் பட்லர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    இங்கிலாந்து 87 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்து திணறியது. இதனால் 100 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாம் குர்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நேர்த்தியாக இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார். இஷாந்த் சர்மா பந்தில் இமாலய சிக்சர் விளாசி 54 பந்தில் அரைசதம் அடித்தார்.



    இவரது ஆட்டத்தில் இங்கிலாந்து ஸ்கோர் 200 ரன்னை நோக்கிச் சென்றது. அந்த வேளையில் இஷாந்த் சர்மா பந்தில் பிராட் ஆட்டமிழந்தார். பிராட்டை வீழ்த்தி ஐந்து விக்கெட்டை பதிவு செய்தார் இஷாந்த் ஷர்மா. அடுத்த ஓவரில் குர்ரான் 65 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 13 ரன்கள் அதிகம் பெற்றிருந்ததால், ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட 193 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    2-வது இன்னிங்சில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இந்தியா மற்றும் எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் எந்த அணிக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவடைந்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியை எதிர்த்து இந்தியா விளையாடியது.

    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முரளி விஜய் 53 ரன்னிலும், விராட் கோலி 68 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் 82 ரன்களில் அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 51 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இந்திய அணி 100.2 ஓவரில் 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    எசக்ஸ் அணி சார்பில் பால் வால்டர் 4 விக்கெட்டும், கோல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, எசக்ஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் வெஸ்லி, பெப்பர் மற்றும் பால் வால்டர்  ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். இறுதியில் எசக்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்து தனது முதல் இன்ன்னிங்சை முடித்துக் கொண்டது.

    இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதைத்தொடர்ந்து, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தவான் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா 23 ரன்களில் வெளியேறினார்.

    ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்தனர், லோகேஷ் ராகுல் 36 ரன்னும், ரகானே 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் இந்த பயிற்சி ஆட்டம் எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
    எசக்ஸ் அணிக்கெதிரான 2-வது இன்னிங்சிலும் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார். #ENGvIND #Dhawan
    இந்தியா - எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் செல்ம்ஸ்போர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 395 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. முரளி விஜய், விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்தார்கள்.

    அதேவேளையில் ஷிகர் தவான் டக்அவுட் ஆகியும், புஜாரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள்.

    பின்னர் எசக்ஸ் அணி முதல இன்னிங்சை தொடங்கியது உமேஷ் யாதவ் (4), இசாந்த் ஷர்மா (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் எசக்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் முதல் பந்திலேயே டக்அவுட் ஆன தவான், இந்த இன்னிங்சில் 3 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    இரண்டு இன்னிங்சிலும் ஒரு ரன்கூட அடிக்க முடியாமல் தவான் ஏமாற்றம் அளித்துள்ளார். புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
    தற்போதுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டுதான் முழுமையானது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #ENGvIND
    கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர், தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சு யூனிட்டே மிகவும் முழுமையானது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘தற்போதுள்ள வேகப்பந்து வீச்சு யூனிட்டுதான் இங்கிலாந்து தொடருக்கான மிகவும் முழுமையானது. என்னுடைய மதிப்பீட்டின்படி, இந்த யூனிட்டின் தாக்குதல் மிகவும் சிறந்ததாக இருக்கும். ஸ்விங் பவுலரான புவனேஸ்வர் குமார். மிகவும் உயரம் கொண்ட இசாந்த் சர்மா, பந்தை தரையில் பலமாக தாக்கும் பும்ரா, மிகவும் திறமை வாய்ந்த வேகமாக வீசும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நம் பெற்றுள்ளோம். பல்வேறு தரப்பட்ட பந்து வீச்சை கொண்டு சிறந்த காம்பினேசன்.



    தற்போதுள்ள இந்திய அணி தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பெரும்பாலான நேரத்தில் அதிக அளவில் பேட்டிங் செய்கிறார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் தற்போது அதிக அளவில் ரன்கள் அடிக்க உதவியாக இருக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் ஐந்தாறு ஓவர்கள் வீசுவது பெரிய விஷயம் அல்ல. முக்கியமான நேரத்தில் பந்து வீச்சாளர்கள் ரன்கள் அடிப்பது அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்’’ என்றார்.
    ×