search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police security"

    • பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

    கோவை:

    குடியரசு தின விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கி உள்ளன.

    கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மேலும் காவல்துறையில் சிறப்பாக வேலை பார்த்த போலீசாருக்கு பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

    குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகர அளவில் 1500 போலீசாரும், மாவட்ட அளவில் 1000 போலீசாரும் என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் தற்போது மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை பீளமேடு விமானநிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி நேற்று ஒரு மர்ம கார் வெள்ளை மாளிகை நோக்கி வந்தது. திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர் வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற நுழைவு வாயில் மீது பயங்கரமாக மோதினார்.

    இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இது தற்செயலாக நடந்த விபத்தா?அல்லது சதி செயலில் ஈடுபடும் வகையில் அவர் காரை மோதினாரா? என்பது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. அவர் வெளியூரில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.

    வெள்ளை மாளிகையில் இது போன்ற அத்துமீறல்கள் அவ்வப்போது நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு பராக் ஒபாமா அதிபராக இருந்த போது ராணுவ வீரர் ஒருவர் வெள்ளை மாளிகை புல்வெளி பகுதியில் சட்டைப்பையில் கத்தியுடன் நுழைந்து பரபரப்பாக்கினார்.

    இதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகை வேலியை அளந்த ஒருவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
    • 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நவம்பர் 17-ந்தேதி கோவில் சாமி சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப திருவிழா தொடங்கியது.

    10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர்.

    கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    இதற்காக 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து சென்றனர்.

    இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • தசரா விழா கடந்த 14-ந்தேதி பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விஜய தசமியையொட்டி இன்று காலையில் இருந்து அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு தொடங்கியது.

    நெல்லை:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்ததாக நெல்லை மாவட்டத்தில் பாளை யங்கோட்டையில் நடை பெறும் தசரா விழா மற்றும் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆகியவை ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தசரா விழா கடந்த 14-ந்தேதி பிரதான கோவிலான பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தினந்தோறும் பல்வேறு பூஜைகள், நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து பாளையில் உள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வ கர்மா உச்சினிமாகாளி, புதுப் பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார் பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில்களிலும் தசரா பண்டிகை தொடங்கி யது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது.

    விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த 3 நாட்கள் லெட்சுமிக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதிக்குமாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.

    விஜய தசமியையொட்டி இன்று காலையில் இருந்து அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு தொடங்கியது. மதியம் உச்சிக்கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு 12 அம்மன் கோவில்களிலும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 12 மணிக்கு 12 அம்மன்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வரு கிறார்கள்.

    நாளை(புதன்கிழமை) காலை பாளை ராஜகோபாலசுவாமி கோவில் திடலில் 12 அம்மன் சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தப்படுகிறது. அப்போது ஆயிரக்க ணக்கான பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை நிறைவேற்ற தேங்காய்கள் உடைத்தும், புடவை, பழ வகைகள் வைத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

    பி்ன்னர் நாளை மாலை 12 சப்பரங்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக பாளை மார்க்கெட் திடலில் அணிவகுத்து நிற்கும். அதன்பின் நள்ளிரவில் பாளை எருமைகிடா மைதானத்தில் 12 சப்பரங்கள் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    இதனையொட்டி நெல்லை மாநகரில் டவுன் பகுதியில் 36 சப்பரங்கள் அணிவகுப்பு நடக்கிறது. பின்னர் அவை தேரடி திடலில் அணிவகுத்து நிற்கிறது. மாநகர் பகுதி முழுவதும் மொத்தம் 63 சப்பரங்கள் அணிவகுப்பானது இன்றும், நாளையும் நடக்கிறது.

    இதனையொட்டி மாநகர் பகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் எருமைகிடா மைதானமும் சூரசம்கா ரத்திற்கு தயார்படுத்தப்பட்டு உள்ளது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பச்சமலையான்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் புதுச்சத்திரத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதத்தால் போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் புதுச்சத்திரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் தீர்மான நகலை வாசித்தார்.

    அப்போது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள், கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் நடைபெற்ற பணிகள் விவரங்களை கேட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரிடம், வார்டு உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒருதரப்பினரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை சமாதானம் செய்தனர். வார்டு உறுப்பினர்கள் தரப்பில் கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தாங்கள் புறக்கணித்து செல்வதாக கூட்டத்தில் இருந்து திடீர் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு இடையில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற திட்டப்பணிகளை தலைவர் காளிதாஸ் தெரிவித்தார். அப்போது புதுகாமன்பட்டியை சேர்ந்தவர் ஒருவர் தனிநபர் ஒருவரிடம் வார்டு உறுப்பினர்கள் ரூ. 10 ஆயிரம் பெற்றுக்கொண்டு தனக்கு சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க ஆதரவாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

    இதனால் வார்டு உறுப்பினர்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

    • சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன.

    இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் இரவு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வாகன சோதனையின் போது சந்தேக நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    திருவல்லிக்கேணி, பெரியமேடு, எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான லாட்ஜூகளில் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய திடீர் சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    வணிக வளாகங்கள், கோவில்கள் ஆகியவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
    • விபத்தில் லாரியில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்தன.

    திருப்பதி:

    நாடு முழுவதிலும் பலத்த மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து உள்ளது. கடந்த மாதம் முதல் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டி உள்ளது.

    இதனால் டெல்லியை சேர்ந்த தக்காளி வியாபாரிகள் தென்னிந்தியாவிலிருந்து தக்காளியை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து 638 பெட்டிகளில் 16 டன் எடையுள்ள தக்காளியை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று டெல்லியை நோக்கி புறப்பட்டது. தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் மாவாள மண்டல் ஐதராபாத், நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்தன. இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்கள் சாலையில் விழுந்து கிடந்த தக்காளிகளை எடுத்துச் செல்ல முயன்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மாவால போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் துப்பாக்கியுடன் அங்கு வந்தனர். லாரியை சுற்றி நின்று தக்காளியை பொதுமக்கள் எடுத்துச் செல்லாதவாறு மாலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாற்று லாரி கொண்டுவரப்பட்டு தக்காளிப் பெட்டிகளை அதில் ஏற்றி பத்திரமாக டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் கூறுகையில்:-

    டெல்லியில் ஒரு கிலோ தக்காளி 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. லாரியில் கொண்டுவரப்பட்ட 16 டன் தக்காளி விலை ரூ.22 லட்சம் ஆகும்.

    தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுவதால் தக்காளியை பொதுமக்கள் எடுத்துச் செல்லாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அடிலாபாத் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அமித்ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.
    • 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு காலம் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே. சிங் மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் மத்திய சி.ஆர்.பி.எப். கமாண்டோ அசோக்குமார் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனையொட்டி 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் உள்துறை மந்திரி வருவதையொட்டி அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    அமித்ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.

    வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதற்கு ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் 13 கிராம மக்களும் கிராம சபை கூட்டத்தின்போது பரந்தூர் புதிய விமான நிலையம் வருவதை எதிர்த்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது.

    இதைத்தொடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் 13 கிராமங்களை சேர்ந்த விமானநிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் 300-வது நாள் போராட்டத்தை இன்று காலை திடீரென வயலூர் பகுதியில் உள்ள ஏரியில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • 5 நுழைவு வாயில்களில் தலா 2 போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டார்.

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் கோகுல். ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது.

    கடந்த மாதம் 13-ந் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இவர் கோவை கோர்ட்டிற்கு வந்தார்.

    கோர்ட்டில் தனது வழக்கு வர சிறிது நேரம் ஆகும் என தெரிந்ததால், தனது நண்பர் ஒருவருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அவரை 5 பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாலிபரை வெட்டி கொன்று விட்டு, கொலையாளிகள் சர்வ சாதாரணமாக நடந்து சென்றது கோவை மாநகர் மக்களிடம் பதற்றத்தை உருவாக்கியது.

    கோர்ட்டு அருகே நடந்த கொலையை தொடர்ந்து இதில் ஈடுபட்டவர்களை தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க ரவுடிகளை களையெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதனால் மாநகரில் இருந்த ரவுடிகள் பலரும் கலக்கம் அடைந்தனர்.

    போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், ரவுடிகள் கொட்டம் அடங்கி, மாநகரில் குற்றங்கள் குறைந்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வந்த கவிதா என்ற பெண் மீது அவரது கணவரே ஆசிட் வீசிய சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை கூட்டியுள்ளது. கோவை கோர்ட்டு பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்த 2 துயர சம்பவங்களும் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது.

    கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு இருக்கும். அதனை மீறி எதுவும் நடக்காது என நம்பியே தினந்தோறும் பொதுமக்கள் உள்பட பலரும் கோர்ட்டிற்கு வருகிறார்கள். ஆனால் அப்படி பாதுகாப்பு நிறைந்த கோர்ட்டிலேயே இது போன்ற சம்பவங்கள் நடந்தது தான் உரிய பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    கொலை நடந்த உடனேயே கோர்ட்டில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் எந்தவித சோதனையும் செய்யாமல் உள்ளே அனுமதித்து வந்துள்ளனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் கோர்ட்டில் அரங்கேறியதை அடுத்து கோவை கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை கோர்ட்டில் உள்ள 5 நுழைவு வாயில்களில் தலா 2 போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன் பக்க நுழைவு வாயிலில் மட்டும் 10க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்பக்க கேட்டில் நிறுத்தப்பட்டுள்ள போலீசார் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி எதற்காக வருகிறீர்கள். இங்கு என்ன வேலை காரணமாக வந்துள்ளீர்கள் என விசாரிக்கின்றனர். உரிய காரணங்களை கூறிய பிறகு அவர்கள் கொண்டு வந்துள்ள உடைமைகள் முழுவதும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.

    அதன்பின்னரே மக்களை உள்ளே அனுமதித்து வருகிறார்கள். இதுதவிர கோர்ட்டு ஊழியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    மற்ற 5 நுழைவு வாயில்களிலும், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களை தவிர மக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. அந்த வழியாக வந்த மக்கள் அனைவரையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உங்களுக்கு இந்த வழியாக அனுமதியில்லை.

    முன் நுழைவு வாயிலுக்கு சென்று கோர்ட்டுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தி வருகின்றனர். கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் வழக்கம் போல அனைத்து நுழைவு வாயில் வழியாகவும் சென்று வருகின்றனர்.

    இதற்கிடையே கோர்ட்டு வளாகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் போலீசாருக்கு பாதுகாப்பு தொடர்பான சில ஆலோசனைகளையும் வழங்கி சென்றார். ஆசிட் வீச்சு சம்பவம் நடந்ததை தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டதற்கு வக்கீல்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • மாசி மாதத்தில் மாசி மகதிருத்தேர் திருவிழாவானது வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • முன்புறமுள்ள வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மாசி மகதிருத்தேர் திருவிழாவானது வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவாலின் காரணமாக பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேர் திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனையொட்டி எம்பெருமான் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். மார்ச் மாதம் 4 -ந் தேதி ஸ்ரீ பெட்டத்தம்மன் அழைப்பு , 5-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமக திருத்தேரோட்டம் மார்ச் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர் திருவிழா நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் காரமடை அரங்கநாதர் கோவில் வளாகத்தில் சுதர்சன பட்டர் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, செயல் அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட தலைவர் சிவப்புகழ் பங்கேற்று பேசுகையில் தேர்வடம் பிடித்து இழுக்கும் இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சொர்க்கவாசல் வீதி,கோவிலின் முன்புறமுள்ள வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். அதேபோல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆலோசனை கூட்டத்தில் காரமடை நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், இந்து முன்னணியின் நிர்வாகிகள், பாரதீய ஜனதா நகர தலைவர் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஆயுதப்படை போலீசார் 51 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பணி செய்து வருகிறார்கள்.
    • பகலில் 30 போலீசார் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் 21 போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்வதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து ஓ.பி.எஸ். அணியினர் தாக்குதல் நடத்திய பின்னர் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு 24 மணிநேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    ஆயுதப்படை போலீசார் 51 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பணி செய்து வருகிறார்கள். பகலில் 30 போலீசார் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் 21 போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்த சீலை அகற்றக் கோரி கோர்ட்டு உத்தரவிட்ட நேரத்தில் உரிய பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. தலைமை கழக சாவியை கொடுத்த பின்னர் அ.தி.மு.க. கட்சி பணிகள் அங்கேயே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக கோர்ட்டு உத்தரவு இருந்த போதிலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பாதுகாப்பு தொடர்ச்சியாக போடப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்கிற எதிர்பார்ப்பும் போலீசார் மத்தியில் நிலவுகிறது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க.வில் இரு தரப்புக்கும் இடையே மோதல் சம்பவங்கள் சமீபகாலமாக நடைபெறவில்லை. இதனை கருத்தில் கொண்டு படிப்படியாக பாதுகாப்பை குறைக்கலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    ×