search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pchidambaram"

    பாராளுமன்ற தேர்தலுக்குள் ப.சிதம்பரம் சிறை செல்வார் என்று எச்.ராஜா கூறினார். #hraja #PChidambaram

    சிவகங்கை:

    சிவகங்கையில் பாரதீய ஜனதா சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

    மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி போய் விடும் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஆனால் உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு மட்டுமே நடைபெற்றுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் ஒப்புக்கொள்ளாமல் எந்தவொரு அணையும் கட்ட முடியாது. இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிபுணர்கள் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒருவிதமாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருவிதமாகவும் வாக்களிப்பது எப்போதும் இருக்கின்ற வழக்கம்.

    சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்பது அரசியல் அறியாமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் உதயா, பொது செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #hraja #PChidambaram

    புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். #gajacyclone #pchidambaram #CentralCommittee

    காரைக்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி. இங்கு மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    பாதிப்புகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ராமசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது. இது பாராட்டுக்குரியது.

    உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை குறைவாக இருந்தாலும் அது நல்ல தொகை தான்.


    புயல் பாதிப்பு குறித்து மாநில அரசு அறிக்கை அனுப்பிய பிறகே மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்கும். அந்த குழு சேத மதிப்பீட்டை கணக்கீட்டு அறிக்கை அளிக்கும். அதன் படி நிவாரணம் வழங்கப்படும்.

    ஆனால் மத்திய குழுவை தற்போது உடனே அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழக அரசும் இதனை வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #gajacyclone #pchidambaram #CentralCommittee 

    திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தால் வரவேற்போம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #dmk #congress #pchidambaram #rajinikanth

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அதிகாரிகளின் பனிப் போருக்கு காரணம் மத்திய அரசு தான். எல்லா அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அணுகுமுறை தான் இதற்கு காரணம்.

    என்றாவது ஒருநாள் உள்நாட்டு போர் வெடிக்க போகிறது என்பது ஓராண்டு காலமாகவே எல்லோருக்கும் தெரியும்.

    ரபேல் விமான பேரம் தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனர் முடிவு எடுக்கும் நேரத்தில் அதிகாரிக்களுக் கிடையே பனிப்போர் வெடித்து இருவரையும் நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

    அதிகாரம் உள்ள குழு, தலைமை நீதிபதி, எதிர்கட்சி தலைவர் ஆகியோர்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுப்பது இதுவரை நடந்ததே கிடையாது.

    பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த துன்பமும், சுமையும் மக்களுக்குத்தான் தெரியும். இதற்கு அரசு நீங்கள் துன்பப் பட்டாலும் பரவாயில்லை விலையை குறைக்க முடியாது. இது என்னுடைய முடிவு என்கிறார்கள். அதை எப்படி ஒரு அரசு சொல்ல முடியும்.

    மக்களின் வேண்டு கோளுக்கேற்ப பெட்ரோல் - டீசல் விலையை ஓரளவு கட்டுப்படுத்தி விட்டு வேறு வகைகளில் செலவுகளை குறைக்க வேண்டும்.

    இன்றைக்கும் தமிழகத்தில் தி.மு.க.தான் தேர்தலில் வெற்றி பெறும். 10 மாநிலங்களில் மாநில கட்சிகள் தான் முதன்மை கட்சிகளாக இருக்கின்றன. எஞ்சியுள்ள மாநிலங்களில் காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் முதன்மை கட்சிகளாக இருக்கின்றன.

    230 பாராளுமன்ற தொகுதிகளிலும் மாநில கட்சிகள் முதன்மை கட்சிகளாக உள்ளன. மீதமுள்ள 315 இடங்களில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சி முதன்மை கட்சிகளாக உள்ளன.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிக, மிக குறைவு. உத்தரபிரதேசத்தில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தால் பா.ஜனதாவுக்கு வெற்றி கிடைக்காது.

    தேசிய அளவில் கூட்டணி அமையாதது போன்ற தோற்றம் இருந்தாலும் பல மாநிலங்களில் மாநில கூட்டணிகள் அமையும். அந்த கட்சிகள் வெற்றி பெற்ற பிறகு பா.ஜனதா கூட்டணியா? அல்லது மாற்று கூட்டணியா என்பது தெரியும்.

    காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதை விட தனிப்பெரும் கூட்டணியாக அமைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

    இந்த தேர்தலில் எங்களின் நோக்கம் கூட்டணி அமைப்பது, கூட்டணி ஆட்சி அமைப்பது என்று ராகுல்காந்தி தெளிவாக சொல்லி விட்டார். கூட்டணி ஆட்சி அமைக்கின்ற நேரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்தலில் மாநில கட்சிகளின் முக்கிய பங்களிப்பு இருக்கும். மாநில கட்சி தலைவர்களுக்கும் பிரதமராக விருப்பம் இருக்கலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதி. தி.மு.க. தலைமையில் கூட்டணி அமையும் போது அதில் காங்கிரஸ் கட்சி இருக்கும் அதில் மாறுதல் என்பது கிடையாது. அந்த கூட்டணி அமையும் போது வேறு யாராவது அந்த கூட்டணியில் வர விரும்பினால் அவர்களை வேண்டாம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து. எங்களை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டியது மற்ற கட்சிகளின் விருப்பம்.

    தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி வர விரும்பினால் அதை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அதில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சிகள் இருக்கும். கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒன்றோ இரண்டோ இருக்கலாம், தெரியாது. ஆனால் தி.மு.க. -காங்கிரஸ் என்பது உறுதியான கூட்டணி.


    டி.டி.வி. தினகரன் மதசார் பற்ற கட்சிகளோடு கூட்டணி வைக்கட்டும். எங்களை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். இன்னொரு கூட்டணி அமைக்கக்கூடாது என்று நாங்கள் சொல்ல வில்லை.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட கூடாது என்று ஒரு சட்டப் பிரிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தேர்தல் சட்டத்தின்படி ஊழல் குற்றச் சாட்டில் தண்டனை பெற்ற வர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியாது.

    தமிழ்நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் இந்த ஆட்சி போக வேண்டும் என்பது ஏகமனதான கருத்து. திருப்பரங்குன்றத்திலும், திருவாரூரிலும் தேர்தல் அறிவிக்க போவதற்கு முந்தைய நாள் தலைமை செயலாளர் இது மழைக் காலம் வைக்கக்கூடாது என்கிறார். மழைக்காலத்தில் தேர்தல் நடக்கவில்லையா? மழைக்காலத்தில் பாராளு மன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவை நடந்துள்ளன.

    2 தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்கு புயல்வரப் போகிறது, சுனாமி வரப் போகிறது என்பது வேடிக்கை. 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதை விட சட்டமன்றத்துக்கு தேர்தலை நடத்துவதுதான் முறை. 20 தொகுதிகளுக்காவது தேர்தலை உடனடியாக வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #dmk #congress #pchidambaram

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நியமனம் செய்து ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #PChidambaram #RahulGandhi
    புதுடெல்லி :

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் முயற்சிகளில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. பாஜகவிற்கு எதிராக உள்ள மாநில கட்சிகளை ஒன்றினைத்து மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளிலும் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு மற்றும் ஒருங்கினைப்பு குழு என்ற மூன்று குழுக்களை கடந்த மாதம் அமைத்தார். இந்த குழுக்களில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

    இந்நிலையில், அந்த குழுக்களுக்கு தலைவர் மற்றும் ஒருங்கினைப்பாளர்களை நியமித்து ராகுல் காந்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அதில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் அறிக்கை குழு ஒருங்கினைப்பாளராக ராஜீவ் கௌடா, விளம்பர குழு தலைவராக ஆனந்த் சர்மா, விளம்பர குழு ஒருங்கினைப்பாளராக பவன் கேரா, தேர்தல் ஒருங்கினைப்பு குழு தலைவராக முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே அந்தோனி, ஒருங்கினைப்பு குழுவின் ஒருங்கினைப்பாளராக முன்னாள் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். #PChidambaram #RahulGandhi
    பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பீடு செய்து பாஜக விளக்கப்படம் ஒன்று வெளியிட்டது. அதில் காட்டப்பட்ட கணக்கு விவரங்களை நெட்டிசன்கள் கலாய்த்து டிரெண்ட் ஆக்கினர். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #Congress
    புதுடெல்லி :

    நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக பா.ஜ.கவும், வெற்றி பெற்றுவிட்டதாக காங்கிரசும் கூறியுள்ளன.

    இதற்கிடையே பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பீடு செய்து பாஜக விளக்கப்படமும், அதே விளக்கப்படத்தை மாற்றம் செய்து காங்கிரஸ் வெளியிட்ட விளக்கப்படமும் சமூக வளைதளங்களில் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகி டிரெண்டானது.

    அதில், 2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சமயம் ரூ.21.74 ஆக இருந்த பெட்ரோல் விலை 2009-ம் ஆண்டு ஆட்சிக்காலம் முடியும் போது 42 சதவிகதம் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30.86 க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரசின் இரண்டாவது ஆட்சிக்காலம் முடிவடைந்த 2014-ம் ஆண்டு 83.7 சதவிகதம் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 56.71 க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதற்கிடையே, 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்ற போது ரூ 56.71 இருந்த பெட்ரோல் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் 28 சதவிகதம் மட்டுமே அதிகரித்து 72.83 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது காங்கிரசின் ஆட்சிக் காலங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு என்பது போல் அந்த விளக்கப்படத்தில் பாஜக நவீன கணக்கு காட்டியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக விளக்கப்படத்தையே சற்று மாற்றி அமைத்து காங்கிர்ஸ் கட்சி மற்றொறு விளக்கப்படத்தை வெளியிட்டது.



    அதில் கடந்த 2009-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 71.9 அமெரிக்க டாலராக இருந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 44 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 2018-ம் ஆண்டு அதே கச்சா எண்ணெய் விலை மீண்டும் 71.9 டாலராக குறைந்த பின்னரும் பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் இரண்டு மடங்காக உயர்ந்து ரூ. 80.73 க்கு விற்பனை செய்யப்படுவது ஏன் ? என்பது போல் காங்கிரஸ் வெளியிட்ட விளக்கப்படம் அமைந்தது.



    இவை இரண்டும் நெட்டிசன்கள் கைகளில் சிக்கவே இதை கேலி கிண்டல் செய்து சமூக வளைதளங்களில் பதிவிட தொடங்கினர். இதனால் இந்த இரண்டு விளக்கப்படங்களும் சமூக வளைதளங்களில் டிரெண்ட் ஆக தொடங்கியது. அதில் சில பதிவுகள் :-

    #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #Congress
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். #BharathBandh #PChidambaram #PetrolDieselPrice
    புதுடெல்லி :

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியது.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தன்னுடைய கருத்தை டுவிட்டரில் வரிசையாக பதிலிட்டுள்ளார்.

    அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை!. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள்.

    பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது? கச்சா எண்ணெய் விலை ரூ.107 ஆக இருந்த போது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை ரூ. 78 ஆக இருக்கும் போது விலை உயர்வு! ஏன்? ஏன்? என கேள்வியை எழுப்பியுள்ளார். #BharathBandh #PChidambaram #PetrolDieselPrice
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் தனித்து 150 இடங்களை பெற முடியும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PChidambaram #Congress
    புதுடெல்லி:

    டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு தனது கருத்தை வெளியிட்டார். அவர் பேசும் போது கூறியதாவது:-

    தற்போது காங்கிரஸ் 12 மாநிலங்களில் வலுவாக உள்ளது. இப்போது காங்கிரசுக்கு உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையை விட வரும் தேர்தலில் 3 மடங்கு எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதாவது காங்கிரஸ் தனித்து 150 இடங்களை பெற முடியும். மற்ற மாநிலங்களில் நாம் பிராந்திய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைப்பது முக்கியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே ராகுல்காந்தி கூறி இருந்தார். அந்த கருத்தை முன்வைத்து பலரும் இந்த கூட்டத்தில் பேசினார்கள்.

    சில தலைவர்கள் பேசும் போது, எதிர்க்கட்சிகள் பலவற்றையும் சேர்த்து வலுவான கூட்டணி அமைப்பதற்கு நமது கட்சி எந்த தயக்கமும் காட்ட கூடாது.

    நமது வியூகம் சரியான நிலையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ராகுல்காந்தியை முன்னிலைப்படுத்திதான் இந்த கூட்டணி அமைய வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். #PChidambaram #Congress #ParliamentElection2019
    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் போலீசில் கொடுத்த புகாரை திடீர் என வாபஸ் பெற்றுவிட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசிக்கின்றனர். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி நேற்று முன்தினம் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி மறைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த திருட்டு வழக்கில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வெண்ணிலா, விஜி ஆகியோர் உடன்பிறந்த சகோதரி ஆவார்கள். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், நகைகள் மற்றும் பொருட்கள் திருடிய குற்றத்தை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று பிற்பகலில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும், வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #pchidambaram #AircelMaxisCase #CBI
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்க துறையும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.

    என்றாலும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் அலுவலகம், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்து இருந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக பலமுறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மனை கார்த்தி சிதம்பரம் நிராகரித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் நேரில் ஆஜராவது தேவையற்றது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் 2ஜி தொடர்பான வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் ஏர்செல் மேக்சிஸ் நிறுவனத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கான பங்குகள் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.


    இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ப.சிதம்பரத்தை ஜூன் 5-ந்தேதிவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்.

    ஜூன் 5-ந்தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அன்று ப.சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார்.
    ×