search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்குள் ப.சிதம்பரம் சிறை செல்வார்- எச்.ராஜா பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலுக்குள் ப.சிதம்பரம் சிறை செல்வார்- எச்.ராஜா பேச்சு

    பாராளுமன்ற தேர்தலுக்குள் ப.சிதம்பரம் சிறை செல்வார் என்று எச்.ராஜா கூறினார். #hraja #PChidambaram

    சிவகங்கை:

    சிவகங்கையில் பாரதீய ஜனதா சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

    மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி போய் விடும் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஆனால் உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு மட்டுமே நடைபெற்றுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் ஒப்புக்கொள்ளாமல் எந்தவொரு அணையும் கட்ட முடியாது. இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிபுணர்கள் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒருவிதமாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருவிதமாகவும் வாக்களிப்பது எப்போதும் இருக்கின்ற வழக்கம்.

    சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்பது அரசியல் அறியாமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் உதயா, பொது செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #hraja #PChidambaram

    Next Story
    ×