search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Onion"

    • கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் வெங்காயம் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.
    • வெளி மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி தற்போது அதிகளவில் உள்ளது.

    நெல்லை:

    வீட்டு சமையல் மட்டுமின்றி ஓட்டல்கள், சுபநிகழ்ச்சிகள் பரிமாறப்படும் சமையலில் அத்தியாவசிய இடத்தை பிடிப்பது வெங்காயம் ஆகும். வெங்காயம் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதன் பங்கு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

    உற்பத்தி குறைவு

    இதனால் அதன் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெங்காயம் குளிர்கால பயிராகும். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் அதன் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் வெங்காயத்தின் உற்பத்தி வழக்கத்தைவிட குறைந்தது.

    ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி தற்போது அதிகளவில் உள்ளது. இதனால் தேவையை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெங்காயம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் மூலமும் சிறிய வியாபாரிகள் தெருத்தெருவாக சென்று வெங்காயம் விற்பனை செய்து வருகிறார்.

    விலை வீழ்ச்சி

    வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த ஒரு வாரமாகவே வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. அதன்படி ரூ. 15 முதல் ரூ. 18 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நெல்லை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 12 முதல் ரூ. 17 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. விலை சரிந்துள்ளதால் பொதுமக்களும் போட்டி போட்டு அதிகளவில் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.

    • மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
    • எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    மதுரை:

    வெங்காயம் இல்லாத உணவை வீடுகளில் பார்க்க முடியாது. சமையலின் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் தமிழகத்தில் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    மதுரையில் கீழவெளி வீதியில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயம் பல்வேறு பகுதிகளுக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    வெங்காயம் குளிர்கால பருவ பயிராகும். தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பதால் வெங்காய பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.

    அவ்வாறு வரும் வெங்காயம் இங்கு நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு லாரிகளில் வந்த சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் அழுகிவிட்டன. இதன் காரணமாக அதனை வைத்துக் கொள்ள முடியாமல் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இங்கு நிலவும் வெப்பம் காரணமாக வெங்காயம் தாக்குபிடிக்க முடியாமல் அழுகி விடுகிறது. இதனால் எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.

    • பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரம்தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோ ரூ.15 அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் வரும் நாள்களில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா். 

    • விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர்.
    • கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது.

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயி ராசு கூறியதாவது;- குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் வரை செலவாகிறது.

    சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு எந்த பயிர்களையும் உற்பத்தி செய்யமுடியாதநிலை ஏற்பட்டுவிடும். இதனால் அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். உரம், இடுபொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேசெல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை. தண்ணீர் கிடைத்து நல்ல விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை.

    எனவே அரசு முன்வந்து விவசாயிகளை பாதிக்காதவகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
    • இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    பரமத்திவேலூர்:

    வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை கடந்து செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை, பரமத்திவேலூர் காவிரியின் இரட்டை பாலத்தை கடந்தும் செல்கிறது.

    ஏராளமான போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், காவிரி பாலம் அருகே பெங்களூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெரிய வெங்காயம் பாரம் ஏற்றி லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் உதவியுடன் கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். லாரி பள்ளத்தில் விழாதபடி தடுத்து, வெங்காய பாரத்தை வேறு லாரிக்கு மாற்றினர். அதன் பிறகு லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

    • வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது.
    • சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக தினமும் 40 லாரிகள் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. சந்தைக்கு இன்று 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஆந்திரா வெங்காயம் ரகத்தை பொறுத்து ரூ.12 வரை விற்கப்பட்டது. நாசிக் மற்றும் கர்நாடகா வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ15 வரை விற்பனை ஆனது. பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சென்னையில் முக்கிய தெருக்களில் தள்ளுவண்டி மூலம் வியாபாரிகள் பலர் கூவி, கூவி வெங்காய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து வெங்காய வியாபரிகள் கூறும்போது, 'ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக வெங்காயம் உற்பத்தி வழக்கத்தை விட 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் நாட்களிலும் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பு இல்லை' என்றனர்.

    • சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது.
    • தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது.

    சேலம்:

    மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில் அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து வழக்கத்தை விட அதிகமாக வெங்காயம் லோடு சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனால் சேலம் லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, ஆற்றோர காய்கறி, உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள், தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக அளவில் வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்.

    சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை பெரிய வெங்காயம் கடைகளில் விற்கப்படுகிறது. அதேபோல் முதல் ரகம் 3 கிலோ ரூ.100-க்கும், 2-ம் ரகம் 4 கிலோ ரூ.100-க்கும், 3 ரகம் 5 கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    • தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.
    • 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் கடைவீதி ,ஆற்றோரம் தெரு, ஆனந்தா காய் மார்க்கெட், பால் மார்க்கெட் பகுதிகளில் கடந்த மாதம் தினமும் 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது பெரிய வெங்கா யத்தில் சிறிய அளவு 1 கிலோ ரூ.25-30 எனவும், பெரிய அளவு ரூ.35-40 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15-20 வரை விற்பனை ஆன தற்போது ரூ.40-60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறது.
    • பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ. 100 என்ற அளவுக்கு விலை குறைந்திருந்தது.

    நெல்லை:

    சாம்பாரில் தொடங்கி பொரியல், அவியல், ஆம்லெட், பிரியாணி என சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத உணவு பொருளாக இருந்து வருகிறது.

    வெங்காயம்

    அதேசமயம் வெங்காயம் உற்பத்தி என்பது குறைந்து வருகிறது. எனவே வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறது.

    நெல்லை மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    ஆனால் கடந்த சில நாட்களாக வரத்து இல்லாததால் மிகக் குறைந்த அளவே வருகிறது. இதனால் திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவு உற்பத்தியானதால் விலை குறைந்து காணப்பட்டது.

    குறிப்பாக பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ. 100 என வியாபாரிகள் கூவி கூவி விற்கும் அளவுக்கு விலை குறைந்திருந்தது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ. 30 முதல் ரூ. 40 ஆக இருந்து வந்தது.

    விலை உயர்வு

    இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ. 40-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ரூ. 67-க்கும், நேற்று ரூ. 75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. 100 வரை விற்கப்படுகிறது. இதேபோல் டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட நெல்லை மாநகர மற்றும் மாவட்ட பகுதியில் வெங்காயத்தின் விலை ரூ. 100- ஐ தொட்டு உள்ளது.

    இந்த விலை உயர்வை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பாளை மார்க்கெட் வியாபாரி செய்யது அலி கூறும்போது,

    பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் தாராபுரம், துறையூர் பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறோம். அதன்படி பாளை மார்க்கெட்டிற்கு நாள்தோறும் சுமார் 100 மூட்டைகளில் சின்ன வெங்காயம் வரும்.

    ஆனால் இன்று 20 மூட்டை தான் வந்துள்ளது. எனவே வரத்து குறைவால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

    அதேசமயம் பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
    • வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய விவசாயமாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது.இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

    இந்தநிலையில் மழையால் சின்னவெங்காயத்தில் ஏற்படும் பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது 40 - 50 நாள் வயதுடைய சின்னவெங்காய பயிர்கள் சாகுபடியில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் குளிர்ந்த காற்றுடன் தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் சின்னவெங்காய பயிர்களில் பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.நோய் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் 10 லிட்டர் நீரில் டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலஸ் சப்டிலிஸ் 50 மி.லி. என்ற அளவில் கலந்து வேர் பாகம் நனையுமாறு தெளிக்கவேண்டும்.

    கார்பெண்டாசிம், மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை 20 மி.லி. ஐ, 10 லிட்டருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இதற்கு மாற்றாக, புரோபிகோனசோல், 25 ஈசி, 20 மி.லி., ஐ 10 லிட்டர் வீதம் தெளிக்கலாம். ஏழு நாட்கள் இடைவெளியில், இருமுறை தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் தீவிரம் அடைந்திருந்தால் ஏக்கருக்கு, 500 கிராம் கார்பெண்டாசிம் மற்றும் மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை, 25 கிலோ அமோனியம் சல்பேட் உடன் கலந்து அடி உரமாக போட வேண்டும். இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சின்ன வெங்காய பயிரில் இலைப்பேன் நோய் தாக்கும் பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
    • இலைப்பேன் நோய் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சின்ன வெங்காயத்தில் இலைப்பேன் நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்து பொங்கலூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கூறியதாவது:-

    சின்ன வெங்காய பயிரில் இலைப்பேன் நோய் தாக்கும் பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள் இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும். அப்போது இலைகள் நுனியிலிருந்து வாடும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருக்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும். மேலும் சின்ன வெங்காயத்தில், வெங்காய ஈ தாக்குதலும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.

    இதனை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் 25 சி 1 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். அதுபோல் சின்ன வெங்காயத்தில் வெட்டுப்புழு நோய் தாக்குதலும் காணப்படுகிறது. இந்த புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும். இதனை கட்டுப்படுத்த குளோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் சந்தனப் பொட்டு போன்ற முட்டைக் குவியல்களையும், கூட்டமாகக் காணப்படும். இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்கவேண்டும்.இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 2 வருடமாக விவசாயிகளின் பொருட்களுக்கு ஏற்றவிலை கிடைப்பதில்லை.
    • 5மாதங்களுக்கு முன் 10டன்னாக இருந்த வெங்காயம் தற்போது 3முதல் 4டன்வரை எடை குறைந்து உள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாய தொழில் இருக்கிறது. கடந்த 2 வருடமாக விவசாயிகளின் பொருட்களுக்கு ஏற்றவிலை கிடைப்பதில்லை.

    குறிப்பாக சின்ன வெங்காயத்திற்கு பயன்படுத்தப்படும் உரத்தின் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு மற்றும் உழவு கூலி உயர்வு இப்படி அனைத்தும் விலையேறியுள்ள நிலையில் சின்ன வெங்காயம் கடந்த 5 மாதங்களுக்கு முன் கிலோ 10ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விலை விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லாததால் பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். பட்டறை அமைப்பதற்கு 1ஏக்கருக்கு 40000ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு இருப்பு வைத்தார்கள். ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை. மாறாக 5மாதங்களுக்கு முன் 10டன்னாக இருந்த வெங்காயம் தற்போது 3முதல் 4டன்வரை எடை குறைந்தும் உள்ளது. மேலும் இனியும் இருப்பு வைக்கமுடியாத சூழ்நிலையில் பட்டறையில் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு செல்லும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

    தற்போது சின்ன வெங்காயத்தின் விலை ஆட்களின்கூலிக்கு கிடைக்கும் என்று நினைத்தால் எதுவும் மிஞ்சாது என்ற நிலைதான் உள்ளது. மேலும் விவசாய விலை பொருட்களுக்கு ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்வதுடன் , சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ×