search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை"

    • சின்ன வெங்காய பயிரில் இலைப்பேன் நோய் தாக்கும் பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
    • இலைப்பேன் நோய் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சின்ன வெங்காயத்தில் இலைப்பேன் நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்து பொங்கலூர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கூறியதாவது:-

    சின்ன வெங்காய பயிரில் இலைப்பேன் நோய் தாக்கும் பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள் இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும். அப்போது இலைகள் நுனியிலிருந்து வாடும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருக்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும். மேலும் சின்ன வெங்காயத்தில், வெங்காய ஈ தாக்குதலும் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.

    இதனை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் 25 சி 1 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். அதுபோல் சின்ன வெங்காயத்தில் வெட்டுப்புழு நோய் தாக்குதலும் காணப்படுகிறது. இந்த புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும். இதனை கட்டுப்படுத்த குளோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் சந்தனப் பொட்டு போன்ற முட்டைக் குவியல்களையும், கூட்டமாகக் காணப்படும். இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்கவேண்டும்.இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×