search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டறையில் இருப்பு வைத்தும் சின்னவெங்காயத்திற்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
    X

    திருப்பூர் அல்லாளபுரம் அருகே வடுகபாளையம் பட்டறையில் இருப்பு வைத்திருந்த வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட விவசாய கூலி தொழிலாளர்கள்.

    பட்டறையில் இருப்பு வைத்தும் சின்னவெங்காயத்திற்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

    • கடந்த 2 வருடமாக விவசாயிகளின் பொருட்களுக்கு ஏற்றவிலை கிடைப்பதில்லை.
    • 5மாதங்களுக்கு முன் 10டன்னாக இருந்த வெங்காயம் தற்போது 3முதல் 4டன்வரை எடை குறைந்து உள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாய தொழில் இருக்கிறது. கடந்த 2 வருடமாக விவசாயிகளின் பொருட்களுக்கு ஏற்றவிலை கிடைப்பதில்லை.

    குறிப்பாக சின்ன வெங்காயத்திற்கு பயன்படுத்தப்படும் உரத்தின் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு மற்றும் உழவு கூலி உயர்வு இப்படி அனைத்தும் விலையேறியுள்ள நிலையில் சின்ன வெங்காயம் கடந்த 5 மாதங்களுக்கு முன் கிலோ 10ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விலை விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லாததால் பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். பட்டறை அமைப்பதற்கு 1ஏக்கருக்கு 40000ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு இருப்பு வைத்தார்கள். ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை. மாறாக 5மாதங்களுக்கு முன் 10டன்னாக இருந்த வெங்காயம் தற்போது 3முதல் 4டன்வரை எடை குறைந்தும் உள்ளது. மேலும் இனியும் இருப்பு வைக்கமுடியாத சூழ்நிலையில் பட்டறையில் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு செல்லும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

    தற்போது சின்ன வெங்காயத்தின் விலை ஆட்களின்கூலிக்கு கிடைக்கும் என்று நினைத்தால் எதுவும் மிஞ்சாது என்ற நிலைதான் உள்ளது. மேலும் விவசாய விலை பொருட்களுக்கு ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்வதுடன் , சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×