என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harvesting"

    • தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டிருந்தாலும் உள்ளே நெல்லின் ஈரப்பதம் மேலும் அதிகரித்து வருகிறது.
    • மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் 5.32 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தற்போது அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. கடந்த மாதம் சில நாட்கள் பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.

    மீண்டும் மழை இன்றி காணப்பட்டதால் அறுவடை பணிகள் வேகம் எடுத்தது. மேலும் சம்பா, தாளடி நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கி உள்ளது. தஞ்சை, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, நாகை, திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. இன்றும் சில இடங்களில் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

    மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் குறுவை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் 670 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் தொடர் மழையால் 19 முதல் 25 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளதால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த நெல்லை பகல் நேரத்தில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஏராளமான விவசாயிகள் ஒரு வாரத்துக்கு மேலாக நெல்லைக் கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர். தேவையான அளவில் நெல் உலர்த்தும் எந்திரங்கள் இல்லாத காரணத்தால் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் புறவழிச் சாலை, நெடுஞ்சாலைகளில் நெல்லை காய வைத்தனர்.

    ஆனால் மழை பெய்து வருவதால் தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டிருந்தாலும் உள்ளே நெல்லின் ஈரப்பதம் மேலும் அதிகரித்து வருகிறது.

    தரை வழியாக தார்ப்பாயை கடந்து தண்ணீர் உள்ளே செல்வதால் அடி பாகத்தில் உள்ள நெல்மணிகள் நனைந்து வருகின்றன.

    தொடர்ந்து மழை பெய்வதால் ஒவ்வொரு நாளும் கிலோ கணக்கில் நெல்மணிகள் மீண்டும் முளைத்து வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனால் நெல்லை எப்படி விற்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    இது தவிர பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் சாய்ந்தன.

    ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்த நிலையில் மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    எனவே அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

    இதேபோல் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் சம்பா, தாளடி நடவு பணிகளும் பதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குறுவை அறுவடை பணிகள் மேலும் பாதிப்பு அடைவதோடு நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே உடனடியாக ஈரப்பத தளர்வை தளர்த்தி 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் . தேவையான அளவு நெல் உலர்த்தும் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது உலர்கள வசதியோ இல்லை.
    • நெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால் தான் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை கிராமத்தில் 1600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது உலர் களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் ஈரப்ப தம் உள்ள நெல்லை அரசு கொள்முதல்நிலையம் அருகே உள்ள கிராம சாலையில் கொட்டிவைத்து தினசரி உலர்த்தி வருகி ன்றனர்.

    கிராமசாலையில்நெல் உலர்த்துவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து விவசாயி கள் கூறும்போது, ராராமு த்திரகோட்டை பகுதியில் 1500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் உள்ளன.

    இங்கு விளையகூடிய நெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் நெல்லை காயவைக்க போதுமான இடவசதி இல்லை .

    அதனால அறுவடை செய்த விவசாயிகள் கிராம சாலைகளில் கொட்டி நெல்லை காய வைக்க வேண்டி உள்ளது வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேற வழியில்லை நெல்லை உலர்த்த அரசு களம் அமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றனர்.

    • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றிய பகுதியில் 2 நாள் மழையால் 100 ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

    நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமருகல் வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை அறுவடை பணிகள் துவங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவில் பெய்த கனமழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ண புரம், திருப்–புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, அம்பல், பொறக்குடி, மருங்கூர், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல் மழைநீர் சூழ்ந்தது.நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கோ.46,1009,பிபிடி நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.தற்போது மழை நீர் வடிய தொடங்கி வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்

    ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் இப்படி ஆகி விட்டது என்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.

    கும்பகோணம்: மீது போலீசார் வழக்கு

    கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரம் பகுதி சதாம்உசேன் தெருவை சேர்ந்தவர் நிஜாமுதீன் (வயது 52). இவருக்கு சொந்தமான நஞ்சை நிலம் மருத்துவகுடி கிராமத்தில் உள்ளது.

    இதில் நிஜாமுதீன் விவசாயம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக கடன் வாங்கி குறுவை சாகுபடி செய்து வந்தார். தற்போது குறுவை நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று காலை வயலுக்கு சென்ற நிஜாமுதீன் நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதை கண்டு அதற்கான பணிகளில் ஈடுபட்ட நினைத்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் நேற்று மதியம் மேலமருத்துவக்குடி பட்டவெளி தெருவை சேர்ந்த பழனிச்சாமி(38) என்பவர் சிலருடன் அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.

    இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதுபற்றி நிஜாமுதீனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.

    அங்கு எந்திரத்தை கொண்டு தனது வயலில் தன் உழைப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெல்லை பழனிசாமி மற்றும் சிலர் மும்முரமாக அறுவடை செய்தது தெரியவந்தது.

    இதுபற்றி நிஜாமுதீன் பழனிச்சாமி யிடம் சென்று எப்படி என் வயலில் நீங்கள் அறுவடை செய்யலாம் என்று தட்டிக் கேட்டுள்ளார்.

    அப்போது பழனிசாமி மற்றும் அவருடன் வந்த கும்பல் நிஜாமுதீனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் செய்வதறியாது தவித்த நிஜாமுதீன் உடனடியாக சென்று திருநீலக்குடி போலீசில் புகார் செய்தார்.

    இதுபற்றி போலீசார் பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மற்றொருவர் உழைப்பில் விளைந்த நெல்லை ஒரு கும்பல் அறுவடை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் ஆயிரம் அடிக்கு மேலாகத்தான் நீர் கிடைக்கும் நிலை இருந்து வந்தது.
    • நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நகரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் முதலிபாளையம் பிரிவு அருகே பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் எனும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2014ம் வருடம் இரு ஆழ்துளை கிணறுகள் 1100 அடி மற்றும் 800 அடி ஆழத்திற்கு நீர் தேவைக்காக அமைக்கப்பட்டது‌.ஆனால் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் கோடை காலத்தில் வறண்டு போவதும் மழை காலத்தில் மட்டும் தண்ணீர் இருந்ததால், இதனை மூடிவிட பள்ளி நிர்வாகம் முடிவெடுத்தது.

    இப்பள்ளி அமைந்துள்ள சுற்று வட்டாரப் பகுதி மிக மேடான பகுதியாகவும்,ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் ஆயிரம் அடிக்கு மேலாகத்தான் நீர் கிடைக்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் முடிவு குறித்து அறிந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன்,இந்த ஆழ்துளை கிணறுகளை மழை நீரை சேமிக்க பயன்படுத்தலாம் என எடுத்துரைத்தார்.

    இதனை அடுத்து மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் பயன் குறித்து செய்முறையாக அளிக்கும் வகையில் திட்டம் ஒன்றை அப்பள்ளி செயல் படுத்தியது.அதன்படி பள்ளி வளாகத்தில் உள்ள சுமார் ஆயிரம் அடி ஆளமுள்ள இரு ஆழ்துளை கிணற்றையும் மழை நீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக பள்ளிக் கட்டிட கூரைகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் விழும் மழை நீரை ஆழ்துளை கிணற்றில் சேகரமாகும் வகையில் மாற்றி அமைத்தது.மேலும் மழைநீர் மட்டும் சென்று சேரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்‌.

    கடந்த 2015 முதல் இரண்டு ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீர் முழுமையாக சேகரிக்கப்பட்டது‌.இதனால் பள்ளி வளாகத்தில் பெய்யும் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் ஆழ்துளை கிணற்றில் சேகரிக்கப்பட்டது‌. தொடர்ச்சியாக இவ்வாறு மழை நீர் பல வருடமாக உரிய வழிமுறைகளுடன் சேகரிக்கப்பட்டதால் இன்று அப்பள்ளியை சுற்றி உள்ள சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இது பள்ளி மாணவர்களால் ஆதாரப்பூர்வமாக ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அருகாமையில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணறு ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு கோடையில் வெறும் 5 அடிக்கு மட்டுமே தண்ணீர் மட்டம் இருந்தது.தற்போது அந்த கிணற்றில் தற்போது 40 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.மேலும் நீர் மாசடையாமல் கண்ணாடி போல் தெளிவாகவும்,உப்புத்தன்மை முற்றிலும் இன்றி உள்ளது.இதேபோல் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லிலும் கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும்,3 ஆண்டாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 7 ஆண்டுக்கு மேலாக பல கோடி லிட்டர் மழை நீரை இப்பள்ளியில் கைவிடப்பட இருந்த ஆழ்துளை கிணற்றில் சேகரிக்கப்பட்டதால் இன்று பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.இப்பள்ளியின் மாணவர்கள் இந்த திட்டம் குறித்து மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் அறிவியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்து பரிசுகளையும் பெற்றுள்ளனர்.

    இதை பின்பற்றி தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் கண்டறிந்து, நிலத்தடி நீர் சேமிப்பு மையங்களாக மாற்றி,வருடம் ஒரு முறை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் என்.எஸ்.எஸ் முகாம் மூலம்,இந்த கட்டமைப்புகளை பராமரித்து மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

    ×