search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officer"

    • உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ள நாடு இந்தியா.
    • யானைகள் பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

    திருப்பூர் :

    சூழலியல் கல்வியின் மற்றொரு அங்கமான வனம், அதுசார்ந்த விலங்கினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டுபேசினார். அவர் பேசுகையில், உலகில், இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ள நாடு இந்தியா. நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினமான யானைகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

    தினமும், பல கி.மீ., தூரம் பயணிக்கும் யானைகள், பல்வேறு மரங்களின் இழை, தழைகளை உண்பதன் மூலம் வெளியேற்றும் சாணம் மூலம், மரம், செடி, கொடிகளை வளரச் செய்து வன வளத்தை பெருக்குகிறது. இந்த உயிரினத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. அரசியலமைப்பு சட்டப்படி பொறுப்பும் கூட என்றார். பொருளியல் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட, 'களிறாற்றுப்படை' என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டது.யானைகள் 50 முதல் 70 ஆண்டு வரை வாழும். பெண் யானைகளின் கர்ப்ப காலம் 24 மாதம். மனிதர்களின் குரலை அடையாளம் காணும் ஆற்றல், நினைவாற்றல் யானைகளுக்கு உண்டு. கேட்பதிலும், மனிதர்களை போன்றே உணர்ச்சி வசப்படக்கூடியது.

    தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுகின்றன. மின் வேலியில் சிக்கியும் பலியாகின்றன. வனப்பரப்பு குறைந்ததால் பட்டினி சாவுகளை எதிர்கொள்கின்றன. 3 நிமிடத்திற்கு ஒரு வன விலங்கு வேட்டையாடப்படுகிறது என்ற பட்டியலில் யானைகளும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2017ன் கணக்கெடுப்புபடி இந்தியாவில் 29 ஆயிரத்து 864 யானைகள் உள்ளன. ஒரு யானை தினமும் 300 முதல் 500 விதைகளை தன் சாணத்தின் மூலம் விதைக்கிறது. ஓராண்டுக்கு 36 ஆயிரத்து 500 மரங்கள் வளர மறைமுகமாக உதவுகின்றன. அழியும் பேருயிர்களை காப்பது நம் வளங்களையும், வருங்காலத்தையும் காப்பதற்கு சமம்.இவ்வாறு அந்த ஆவணப்படத்தில் அழுத்தமாக சில புள்ளி விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  

    • சுதந்திர தின விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சிறந்த வட்டார வளர்ச்சி அலுவலராக கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைமுருகனை தேர்வு செய்து விருது வழங்கினார்.
    • இதனை பாராட்டி கூட்டமைப்பு சார்பில் பி.டி.ஓ. திருமலை முருகனை சால்வை அணிவித்து அவருக்கு குத்து விளக்கு பரிசளிக்கபட்டது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டம் கடையம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி.கே .பாண்டியன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பூமிநாத், அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சிறந்த வட்டார வளர்ச்சி அலுவலராக கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைமுருகனை தேர்வு செய்து விருது வழங்கினார். இதனை பாராட்டி கூட்டமைப்பு சார்பில் பி.டி.ஓ. திருமலை முருகனை சால்வை அணிவித்து அவருக்கு குத்து விளக்கு பரிசளிக்கபட்டது. நிகழச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன், முதலியார்பட்டி முகைதீன் பீவி அசன், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி,மேலாம்பூர் குயிலி லட்சுமணன்,பாப்பான்குளம் முருகன், வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாகூப், அடைச்சாணி மதியழகன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், திருமலையப்பபுரம் மாரியப்பன், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன், வெங்காடம்பட்டி ஸாருகலா ரவி, கீழாம்பூர் மாரிசுப்பு, தர்மபுரமடம் ரூஹான் ஜன்னத் சதாம், மந்தியூர் கல்யாணசுந்தரம், பொட்டல்புதூர் கணேசன் மற்றும் யூனியன் ஒபந்ததாரர்கள், யூனியன் பணியாளர்கள், தெற்கு கடையம் வார்டு உறுப்பினர்கள் , ஊராட்சி செயலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். தெற்கு கடையம் ஊராட்சி செயலர் பழனியப்பன் நன்றி கூறினார்.

    கூட்டமைப்பு கூட்ட ஏற்பாடுகளை தெற்கு கடையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்து லெட்சுமி ராமதுரை செய்திருந்தார்.

    • திருச்செங்கோடு வட்டத்தில் வரகூராம்பட்டி பகுதியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டம் அணைப்பாளையம், நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிபட்டி நில வங்கி திட்டப்பகுதி 3, நில வங்கி திட்டப்பகுதி 4, நாமக்கல் திருச்சி ரோடு ரெட்டிப்பட்டி நாகராஜபுரம், குமாரபாளையம் வட்டம் ஆலாம்பாளையம் அன்னை சத்யா நகர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1,856 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. திருச்செங்கோடு வட்டத்தில் வரகூராம்பட்டி பகுதியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருச்செங்கோடு வட்டத்தில் வரகூராம்பட்டி பகுதியில் பட்டேல் நகர் திட்டப்பகுதியில் 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும், ராசிபுரம் வட்டத்தில் அணைப்பாளையம், நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிபட்டி நிலவங்கி திட்டம் 3 பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக ளையும் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கொண்டிசெட்டிபட்டி திட்டப்பகுதியில் வீடுஒதுக்கீடு பெற்று குடியிருந்து வரும் பயனாளிகளிடம் குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை சீராக பெறப்படுகின்றதா என்றும் மேலும் தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அனைத்து குடியிருப்புகளிலும் குடியிருப்போர் சங்கம் அமைத்து அதனை பதிவு செய்திட வேண்டும், அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் வாரியத்தின் மூலம் சீர் செய்து தரப்படும் என்று வாரிய வீடுகளில் குடியிருப்போரிடம் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்  அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகளின் தற்போதைய நிலை, குடியிருப்பு ஒதுக்கீடுகள், பயனாளிகள் தேர்வு ஆகியவை குறித்து கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங் முன்னிலையில் துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளில் ஆர்.டி.ஓ.க்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் சுந்தரராஜன், மேற்பார்வை பொறியாளர் ரவிக்குமார், நிர்வாகப் பொறியாளர் தனசேகரன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி வனச்சரகத்தின் கீழ், சென்றாயன் பாளை யத்தில் நாற்றங்கால் அமைத்து 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
    • இந்த நாற்றங்காலை சேலம் மாவட்ட வன அலுவலர் நேற்று ஆய்வு செய்தார்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு அரசு வனத்து றையின் பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் கீழ், வாழப்பாடி பகுதியில் பசுமை பரப்பை அதிகரிக்க வனத்துறை மூலமாக, பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்திற்காக வாழப்பாடி வனச்சரகத்தின் கீழ், சென்றாயன் பாளை யத்தில் நாற்றங்கால் அமைத்து 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த நாற்றங்காலை சேலம் மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) எஸ். கவுதம் நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் மற்றும் வனத்துறை பணி ணயாளர்கள் உடனிருந்த னர்.

    வாழப்பாடி வனச்சர கத்திற்கு உட்பட்ட பகுதியில், மரத்தோட்டம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், சேசன்சாவடியிலுள்ள வாழப்பாடி வனச்சரக அலுவலகத்தில், தங்களது நிலத்திற்கான பட்டா, சிட்டா, ஆதார் நகல்களை கொடுத்து, பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தெரிவித்தார்.

    • வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நிலத்தொகுப்பு குறித்து திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்தி, கபிலர்மலை ஆகிய வட்டாரங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்.
    • நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    தமிழ்நாடு விவசாய நிலங்களில் பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு வட்டாரத்தில் மோடமங்கலம் அக்ரஹாரம், அத்திமரத்தூர், எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் உஞ்சனை, நாமக்கல் வட்டாரத்தில் எர்ணாபுரம் ஆகிய கிராமங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இவற்றை குடுமியான்மலை சமிதி-ஸ்டாமின் இயக்குநர், சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை, டான்சிடா விதைப்பண்ணை திட்டத்தின் கீழ் எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் மாவுரெட்டிப்பட்டி கிராமத்தில் பாசிபயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகளையும், புதுச்சத்திரம் வட்டாத்தில் ச.உடுப்பம், பரமத்தி வட்டாரத்தில் மேல்சாத்தம்பூர், கபிலர் மலை வட்டாரத்தில் பெருங்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள நிலக்கடலை மற்றும் உளுந்து விதைப்பண்ணைகளையும் ஆய்வு செய்தார்.

    2022-23 ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நிலத்தொகுப்பு குறித்து திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்தி, கபிலர்மலை ஆகிய வட்டாரங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது விவசாயிகளுக்கு கோடைஉழவு, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட உரங்கள் பயன்படுத்துதல், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு,பருவத்திற்கேற்ற பயிர் சுழற்சி, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    திருச்செங்கோடு வட்டாரம், புதுச்சத்திரம் வட்டாரம் புதன்சந்தை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆய்வு செய்து பயிர் சாகுபடி பரப்பு பதிவேடுகள் பராமரித்தல், கிடங்க இருப்பு பதிவேடுகள், விதை முளைப்புத்திறன் பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் எலச்சிபாளையம் வட்டாரத்தில் வேலகவுண்டம்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்) ராஜகோபால் (மாநிலத்திட்டம்) ஆகியோர் உடனிருந்தனர். அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணைவேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்து ஆய்விற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    • ரநத்தத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
    • 27-ந் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    கோவை

    கோவை பீளமேடு அருகே உள்ள காந்திமாநகரை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 28). இவர் கீரநத்தத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ந் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தந்தை இறந்தால் அர்ஜூன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அர்ஜூனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இந்தியாவிலேயே முதன்முறையாக மின் நுகர்வோர்கள் நேரடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னையில் அமைக்கப்பட்ட மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இதற்காக மின்னகம் என்ற பெயரில் தொலைபேசி எண் 94987 94987 அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழக மின்சார துறையின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே முதன்முறையாக மின் நுகர்வோர்கள் நேரடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னையில் அமைக்கப்பட்ட மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதற்காக மின்னகம் என்ற பெயரில் தொலைபேசி எண் 94987 94987 அறிவிக்கப்பட்டது.

    அதில் நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மின்தடை குறை கேட்கும் மையத்தின் இளநிலை மின் பொறியாளராக பணிபுரியும் கோவிந்தராஜ் மின்னகத்திலிருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு மின் நுகர்வோர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்தமைக்காக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • பின்னர் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தார்.

    திருச்செங்கோடு:

    நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா அவர்கள் ஆய்வு செய்தார். முதலில் திருச்செங்கோடு அம்மன் குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நகராட்சி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் முன்னுரை மையத்தில் விளைந்த பொருட்களை பார்வையிட்டு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டி னார். பின்னர் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பில் ராஜாகவுண்டம்பாலையம் மற்றும் சூரியம்பாலையம் பகுதியில் உள்ள ஏரிகளை நீர்நிலை பராமரித்தல் பணிகளை பார்வை யிட்டார்,மேலும் அனிமூர் உரகிடங்கினை ஆய்வு செய்தார். இந்த வளர்ச்சித் திட்டப் பணிகளின் ஆய்வின்போது நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், நகர்மன்றத் துணைத் தலை வர் கார்த்திகேயன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார், இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
    • மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆத்தூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார், இதை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் நாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. மாணவி மர்ம சாவு தொடர்பாக பள்ளி தாளாளர், 2 ஆசிரியைகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வன்முறை காரணமாக இந்த பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, 2 மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையால் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு படிக்கின்றவர்கள், படித்து முடித்தவர்களின் அசல், நகல் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து சேதமகியுள்ளன. அவற்றை கணக்கிட்டு புதிதாக வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அங்கு படித்துவந்த மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில்வதற்காக சிறப்பு அதிகாரியை அரசு நியமித்து உள்ளது. அதன்படி ஆத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி ராஜூ கூடுதல் பொறுப்பாக சின்னசேலம் பள்ளி குழந்தைகள் கல்விக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கபப்ட்டு உள்ளார். இதை தொடர்ந்து இன்று சின்னசேலம் பள்ளிக்கு சென்ற அவர் அங்கு கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பள்ளியில் வன்முறையால் சேதமான பொருட்கள், சான்றிதழ்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    வருகிற 24-ந்தேதி தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதையொட்டி சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 1200 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதற்கிடையே கலவரத்தில் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு நடக்க இருந்த தேர்வை வேறு பள்ளிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் டி.என்.பி.எஸ்.சி. சேர்மனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி கனியாமூர் பள்ளியில் குரூப்-4 தேர்வு எழுத இருந்த 1200 தேர்வர்களுக்கும் அங்குள்ள ஏ.கே.டி. பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு அங்குள்ள 60 அறைகளில் அவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விபரம் வரு மாறு:- (அடைப்புக்குறியில் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ள பகுதிகள்)

    சுதாராணி (அல்லம் பட்டி), ராஜு (விருதுநகர்), உமா கணேசன் (கோட்டைப் பட்டி), சந்திரசேகரன் (ரோசல்பட்டி), கருப்பசாமி (கூரைக்குண்டு), ராஜலட்சுமி (முத்துராமன் பட்டி), செல்வி (சின்ன மூப்பன் பட்டி), லதா (நாட்டார்மங்கலம்), சர்மிளா (கோவில் வீரார் பட்டி), ராமு கார்த்திக் ராஜா (கடம்பன்குளம்), கார்த்தி கேயன் (சீனியாபுரம்), பார்த்த சாரதி (எல்லிங்க நாயக்கன் பட்டி), விஜயகுமார் (மெட்டுக்குண்டு), சுப்பு லட்சுமி (ஆமத்தூர்), லாவண்யா (வாய்பூட்டான் பட்டி), மதன்குமார் (பெரிய பேராளி), முத்துமணி (மருளூத்து), கார்த்திகேயன் (துலுக்கப்பட்டி), பெத்துராஜ் (வலையப்பட்டி), கற்பக செல்வி (எண்டப்புளி), கதிரேசன் (செங்கோட்டை), சமயன் (அப்பைய நாயக்கன் பட்டி), பழனி (சின்ன வாடி), மாரிமுத்து (ஒண்டிப்புலி நாயக்கனூர்) ஆகிய 24 கிராம நிர்வாக அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் உடனே தற்போதுள்ள பொறுப்பி லிருந்து விடுவிக்கப்பட்டு நாளை (1-ந் தேதி) முதல் புதிய பகுதிகளில் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.

    சட்ட விரோதமாக லஞ்சம் பெற்ற வழக்கில் தமிழரசு, வன்னிய திலகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விரைவில் அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமி‌ஷனராக இருப்பவர் தமிழரசு (வயது 55). அதே கோவிலில் தலைமை எழுத்தராக பணி புரிபவர் வன்னியர் திலகம் (48).

    கடந்த 15-ந் தேதி கோவில் அறையில் காண்டிராக்டர் லஞ்சமாக வைத்த பணத்தை தமிழரசு எடுத்தபோது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரமவுலி மற்றும் போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். அதில் ஒரு கவரில் தமிழரசு என எழுதி 60 ஆயிரம் ரூபாயும், மற்றொரு கவரில் வன்னிய திலகம் என்று எழுதி 10 ஆயிரம் ரூபாயும் இருந்தது.

    இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது கணக்கில் வராத பணம் என்பதை உறுதி செய்தனர். மேலும் நூதன முறையில் கோவில் அதிகாரிகளுக்கு பணத்தை லஞ்சமாக டேபிளில் கொண்டு வைத்த 2 பேர் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில் திருப்பணி தற்போது நடைபெறுவதால் அந்த கோவில் கட்டுமான பணிகளை காண்டிராக் எடுத்த நபர்கள் இந்த பணத்தை லஞ்சமாக மேஜை டிராயரில் கொண்டு வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பினர்.

    இதற்கிடையே தமிழரசு மற்றும் வன்னியர் திலகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து சட்ட விரோதமாக லஞ்சம் பெற்றதாக தமிழரசு மற்றும் வன்னிய திலகம் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து 2 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுத்து விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ஓமலூரில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் பட பேனர்களை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Viswasam
    ஓமலூர்:

    ஓமலூரில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியானது இதற்கு வரவேற்பு தெரிவித்தும், படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கபட்டுள்ளது.

    இந்த நிலையில் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில் பேனர்கள் வைக்க அஜித்குமார் ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஓமலூர் பேரூராட்சி வணிக வளாகத்தின் மேலே உள்ள விளம்பர தட்டிகள் மீதும் வைக்கப்பட்டது. இதனிடையே ஓமலூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அஜித் பேனர் வைக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓமலூர் பேரூராட்சி அதிகாரிகள் பேனர் வைக்கப்பட்ட வணிக வளாகத்திற்கு சென்று ஆய்வுகள் செய்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்றனர்.

    அப்போது அங்கே வந்த திமுக சமூக ஊடாக பிரிவு நிர்வாகிகள் பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரும், அஜித் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். பேனரை அகற்றகூடாது என்றும் அகற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி வணிக வளாக பகுதிகளில் அனுமதின்றி பேனர் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொடர்ந்தே இங்கே வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

    இதனை திமுக நிர்வாகிகள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏற்க மறுத்த தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை விரட்டி அடித்தனர். தொடர்ந்து வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டு, அதற்காக அமைக்கபட்டிருந்த இரும்பு தூண்களும் அகற்றப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Viswasam
    ×