search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் அதிகாரி ஆய்வு
    X

    திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்த காட்சி.

    திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் அதிகாரி ஆய்வு

    • நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • பின்னர் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தார்.

    திருச்செங்கோடு:

    நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா அவர்கள் ஆய்வு செய்தார். முதலில் திருச்செங்கோடு அம்மன் குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நகராட்சி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் முன்னுரை மையத்தில் விளைந்த பொருட்களை பார்வையிட்டு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டி னார். பின்னர் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பில் ராஜாகவுண்டம்பாலையம் மற்றும் சூரியம்பாலையம் பகுதியில் உள்ள ஏரிகளை நீர்நிலை பராமரித்தல் பணிகளை பார்வை யிட்டார்,மேலும் அனிமூர் உரகிடங்கினை ஆய்வு செய்தார். இந்த வளர்ச்சித் திட்டப் பணிகளின் ஆய்வின்போது நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், நகர்மன்றத் துணைத் தலை வர் கார்த்திகேயன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×