search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Panneerselvam"

    • பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம்.
    • பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் டி.டி.வி.தினகரனும் சேர முடிவு செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு காய் நகர்த்தி வந்தனர்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருவருக்கும் தலா 4 தொகுதிகள் வரையில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கட்சியும், கொடியும் இல்லாமல் தவித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் பெரிய கேள்வியாக மாறி இருந்தது.

    பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் 4 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் வேறு சின்னத்தை நீங்கள் விரும்பினால் 2 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்றும் பாரதிய ஜனதா சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஓ.பி.எஸ். இதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். அ.தி.மு.க.வை மீட்க இப்போதும் போராடி வருகிறோம். இந்த சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எதிர்கால அரசியலை பாதிக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருப்பதால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு மட்டும் தெரிவிக்க ஓ.பி.எஸ். அணி அதிரடியாக முடிவெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி விரைவில் அது தொடர்பான முடிவை அறிவிக்க உள்ளார். இரட்டை இலை சின்னம் கேட்டு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதில் தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகு அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளார்.

    இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவு அவரது ஆதரவாளர்களை சோர்வடைய செய்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, தற்போது எங்களிடம் கட்சி, சின்னம் என எதுவும் இல்லை. இந்த சூழலில் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எங்களது எதிர்கால நலனை பாதிக்கும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என முடிவெடுத்து இருக்கிறோம்.

    விரைவில் அது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிடுவார். இருப்பினும் பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம். பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார் என்றார்.

    • சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.
    • பா.ஜனதா கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது ஓ.பன்னீர்செல்வத்திடம் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் அவரோ, நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி வருகிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.

    இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி பழனிசாமியிடமே உள்ளது. எனவே பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதைவிட தாமரை சின்னத்திலேயே களம் இறங்குவது நல்லது என்றும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சந்தித்து பேசினார்கள். இரண்டாம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது போட்டியிடும் தொகுதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.


    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை எடுத்துக் கூறி அந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். பா.ஜனதா கூட்டணி மெகா கூட்டணியாக மாறி இருக்கிறது. பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் நாங்கள் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக வெளியாகி இருக்கும் தீர்ப்பு தற்காலிகமானதுதான். சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

    வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதே என்று கேட்கிறீர்கள்.

    என்னையும்தான் ஒருங்கி ணைப்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான சாதகம், பாதகங்களை தேர்தல் ஆணையம் விசா ரித்து முடிவை அறிவிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    கூட்டணி என்று வந்து விட்டால் ஒரே தொகுதிகளை இரண்டு, மூன்று கட்சிகள் கேட்பது இயல்பானதுதான். அவற்றையெல்லாம் பேசி சரி செய்து போட்டியிடு வோம். பா.ஜனதா கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    • சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
    • பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, தங்கள் அணிக்கு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு பாரதிய ஜனதா கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் எத்தனை தொகுதிகளை உங்களுக்கு ஒதுக்குவது என்பது பற்றி பேசி முடி வெடுத்துக் கொள்ளலாம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருந்தவர். அ.தி.மு.க.வை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகிறார்.

    அதனால் அவர் 15 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று எண்ணியிருக்கலாம் என்றார். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தற்போது கட்சியும் இல்லை. கொடியும் இல்லை. எனவே அவருக்கு 15 தொகுதிகளை கொடுப்பது என்பது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.

    4 அல்லது 5 இடங்களை ஓ.பி.எஸ்.சுக்கு ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.

    இதுதொடர்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது பா.ஜனதா நிர்வாகிகள் அவரிடம் நேரடியாகவே வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.


    அ.தி.மு.க. விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளது. நாங்கள் தான் உண்மையான அ.தி. மு.க. என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை பாதித்துவிடும் என்றும் எனவே பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியினர் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து அதுபற்றி ஆலோசித்து கூறுகிறேன் என்று ஓ.பி.எஸ். தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். குழப்பத்தில் உள்ளார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணிக்கு சசிகலாவின் ஆதரவை கேட்டுப் பெற வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

    சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார். ஆனால் இதனை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றால் டி.டி.வி. தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர் கேட்கும் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சியினரிடம் வலியுறுத்தி உள்ளார்.

    இதனை ஏற்றுக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் டி.டி.வி. தினகரனுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

    • முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.
    • மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, வி.கே.சிங் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும்.

    * பாஜக பொறுப்பாளர்கள் எங்களுடைய கோரிக்கைகளை தெளிவாகக் கேட்டுள்ளனர்.

    * தொகுதிகள் குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.

    * மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.

    * டிடிவி தினகரன் தனியாக அரசியல் கட்சியை நடத்துகிறார். அவரையும் அழைத்துப் பேச இருக்கிறார்கள் என்று கூறினார்.

    • கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.
    • எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதாக முன்னாள் முதலமைச் சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் அறிவித்தனர்.

    தொகுதி பங்கீடு குறித்து இதுவரையில் வெளிப்படையான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர்.

    தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஒரு வாரத்தில் 2 முறை சுற்றுப் பயணம் செய்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜனதாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

    இந்நிலையில் பா.ஜனதா தொகுதி பங்கீடு குழுவினர் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனை விரைவில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர். பா.ஜ.க. விடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 10 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளனர். அதே போல் டி.டி.வி. தினகரன் தரப்பிலும் 10 தொகுதிகள் கேட்கின்றனர்.

    கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகிய இருவருக்கும் சேர்ந்து பா.ஜ.க. 10 தொகுதிகளை ஒதுக்க முன் வருவதாக தெரிகிறது. அதை இருவரும் சமமாக தலா 5 தொகுதிகள் வீதம் பிரித்து கொள்ளும்படி கூறி உள்ளனர்.

    இது குறித்த பேச்சு வார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகள் கேட்கப்படுகிறது என்ற விவரம் வருமாறு:-

    1.தேனி-ப.ரவீந்திர நாத்குமார், 2. ஸ்ரீபெரும்புதூர், 3.திருச்சி, 4.மதுரை, 5.சிவகங்கை, 6.தஞ்சை, 7.வட சென்னை, 8.காஞ்சிபுரம், 9.கிருஷ்ணகிரி, 10.கோவை

    அ.ம.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள்: 1.ராமநாதபுரம், 2.திருநெல்வேலி, 3.திருச்சி, 4.தென்சென்னை, 5.வேலூர், 6.நீலகிரி, 7.நாகப்பட்டிணம், 8.விழுப்புரம், 9.திண்டுக்கல், 10.திருவள்ளூர்

    தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனும் தனி சின்னத்தில் நிற்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.

    • அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அறிக்கை வெளியீடு.
    • குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக நியமனம்.

    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்துள்ளார்.

    இதில், மாநிலத் தலைவர், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பான அறிக்கையில், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுவதாக" குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன
    • ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது அவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ரூ.5 கோடி கொடுத்து விட்டார். அதை கொண்டு வந்தவரை போடா ராஸ்கல் என்று சொல்லி திருப்பி அனுப்பினேன். உடனே எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இந்த தகவலை தெரிவித்தேன். அவர் அண்ணே நானும் கேள்விப்பட்டேன். நீங்கள் இனிமேல் வீட்டில் இருக்க வேண்டாம்.

    நான் ஒரு இடம் ஏற்பாடு செய்கிறேன் அங்கே போய் இருங்கள் என்றார். எனக்காக லாட்ஜில் தனியாக அறை எடுத்துக் கொடுத்து 15 பேரை பாதுகாப்புக்காகவும் வைத்தார்.

    எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. செல்போனில் தலை எடுப்பேன். உயிரை எடுப்பேன் என்று பல அறைகூவல்கள் வந்தன. அத்தனையையும் தாங்கிக் கொண்டேன். பணத்திற்காகவோ அல்லது என் உயிர் போகும் என்பதற்காகவோ பதவிக்காகவோ இந்த இயக்கத்தில் வாழ்பவன் தமிழ் மகன் உசேன் அல்ல.

    மக்களுக்காக செயல்படுகிற பாடுபட ஏற்றமிகு தொண்டர்கள் உள்ள இயக்கம் அ.தி.மு.க. அதனை எண்ணிப் பார்த்து இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளித்தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தனக்கு சாதகமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வம் ரூ.5 கோடி அனுப்பி வைத்ததாக தமிழ் மகன் உசேன் பேசியது தற்போது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 ஆண்டாக தொடர்ந்து நீடித்து வருகிறோம்.
    • எடப்பாடி அணி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 ஆண்டாக தொடர்ந்து நீடித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியிலிருந்து சென்றுவிட்டார்.

    இரட்டை இலையில் எப்படி போட்டியிடுவோம்? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லா தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக தீர்ப்பாகத்தான் வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் சிவில் சூட்டில் வழங்கப்படும் தீர்ப்பே இறுதியானது.

    எடப்பாடி பழனிசாமியை எந்த சூழ்நிலையிலும், யாரும் நம்ப தயாராக இல்லை என்ற நிலை அரசியலில் ஏற்பட்டுள்ளது. அவருக்கு யாரெல்லாம் நல்லது செய்தார்களோ, அவர்களுக்கு நன்றியில்லாமல் அவர் நடந்து கொண்டுள்ளார். இதனால் அவருடன் கூட்டணி அமைக்க, அரசியல் கட்சிகள் தவிர்த்து வருகின்றன.

    பா.ஜனதாவுடன் தொகுதி பங்கீடு முடித்தவுடன் தகவல் தெரிவிப்போம். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், நாங்களும் இணைந்து பணியாற்றுகிறோம். சசிகலாவுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.

    நடிகர் ரஜினி மனிதாபிமானமிக்கவர். அவர் அழைப்பின்பேரில் சசிகலாவை சந்தித்துள்ளார். மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை.

    தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். எடப்பாடி அணி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்களையும் இந்த மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பா.ஜனதா டெல்லி தலைவர்கள் இன்னும் அ.தி.மு.க. உறவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

    பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டுகிறார்கள்.

    இதற்கிடையில் பா. ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்களையும் இந்த மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பா.ஜனதாவுடன் கூட்டணி பேசி வரும் ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதே போல் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் பங்கேற்கவில்லை.

    இதுபற்றி கட்சி வட்டாரத்தில் இரு விதமான தகவல்கள் பரவி வருகிறது. அதாவது பா.ஜனதா டெல்லி தலைவர்கள் இன்னும் அ.தி.மு.க. உறவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு நாம் கூட்டணியை உறுதிப்படுத்தலாம் என்று இருவரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்னொரு தகவல், சிங்கிள் தொகுதி போதாது. குறைந்தபட்சம் இரண்டு தொகுதி வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் 'சீட்' உறுதியான பிறகு செல்லலாம் என்றும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் மோடியை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது.

    பா.ஜனதா-த.மா.கா. கூட்டணி உறுதியாகி இருப்பதால் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார். அதே போல் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், தமிழருவி மணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    • கடந்த பத்து நாட்களாக அனைத்துத்துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.
    • எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களான சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட வழங்கப்பட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து கடந்த பத்து நாட்களாக அனைத்துத்துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.

    பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாக தனக்குத் தானே கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்று சக்தியாக இருக்கும்.
    • அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தனது கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகள் ஆட்சி காலம் ஊழல், முறைகேடுகள் நிறைந்ததாக இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது பழைய நண்பர். நாங்கள் 2 பேரும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம். வருகிற 24ந் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவருடன் பங்கேற்பேன். அ.ம.மு.க. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்று சக்தியாக இருக்கும். வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் நாகராஜ், பேரூர் செயலாளர் ராஜா, அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்கள் கதிர்காமு, ரபீக், மாவட்ட செயலாளர்கள் முத்துச்சாமி, காசிமாயன், ஒன்றிய செயலாளர்கள் தவசெல்வம், திருமலை, நாகராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் அய்யணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடிய போது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியம னங்கள் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×