search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நியமனம்"

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடிய போது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியம னங்கள் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுத் துறை மூலம் 1,021 புதிய டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக கூட்ட அரங்கில் நடந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுத் துறை மூலம் 1,021 புதிய டாக்டர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் 20 மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய டாக்டர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக கூட்ட அரங்கில் இன்று நடந்தது.

    மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள புதிய டாக்டர்கள் எண்ணிக்கை வருமாறு:-

    அறந்தாங்கி-62, அரிய லூர்-45, செய்யாறு-41, திண்டுக்கல்-44, கோவில்பட்டி-44, மயிலாடு துறை-47, நாகப்பட்டி னம்-41, பரமக்குடி-60, புதுக்கோட்டை-64, ராம நாதபுரம்-48, சிவ கங்கை-84, சிவகாசி-50, தென்காசி-52, தஞ்சாவூர்-70, நீலகிரி-55, தூத்துக்குடி-38, நெல்லை-53, திருவண்ணா மலை-71, திருவாரூர்-106, எருது நகர்-43.

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், டாக்டா் சங்கு மணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
    • பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் உள்ள அலுவலர்கள், நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலாஜி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சதீஷ்பாபு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் சிவக்குமார், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) துரைசாமி, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவராகவும் (கி.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உமாசங்கர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேடியப்பன், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சையத் பயாஸ் அகமது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுப்பிரமணி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஹேமலதா, கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராகவும் (வளர்ச்சி), கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராக (வளர்ச்சி) இருந்த முகமது சிராஜிதீன், தளி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ), சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவப்பிரகாசம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மகேஸ்வரன், கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவல வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.

    • சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.
    • தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் பிரியா ரவிச்சந்திரன்.

    கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தீயணைப்பு துறையில் திறம்பட பணியாற்றி வருகிறார்.

    மாநில அரசின் பரிந்துரையின்படி ஆண்டு தோறும் காலியாக இருக்கும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இதன்படி 2022-ம் ஆண்டு காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடத்துக்கு தீயணைப்பு இணை இயக்குனரான பிரியா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

    தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.
    • புதிய விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை செயலாளர் வெளியிட்டார்.

    புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன.

    ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.

    இதற்கு பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நடத்த வேண்டும் போன்ற புதிய விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை செயலாளர் வெளியிட்டார்.

    • 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
    • மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

    கடலூர்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த மகளிர் திட்டத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களும், மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த பல்வேறு இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

    இதில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதையடுத்து நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். இதில் வட்டார இயக்க மேலாளர் சத்திய நாராயணன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, வக்கீல் கார்த்திக், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், அருண் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செஞ்சியில் உள்ள அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குனர் லதா திட்ட விளக்க உரையாற்றினார். மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப் பட்ட வர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றி னார்.

    நிகழ்ச்சியில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு துறை நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், உதவி இயக்குனர்கள் பாலமுருகன், நடராசன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார் வல்லம் அமுதா ரவிக்குமார் ,மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன் ,ஒலக்கூர் சொக்கலிங்கம் திண்டிவனம் நகராட்சி தலைவர் நிர்மலா ரவிச்சந்தி ரன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, அகிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் சையத் ரிஸ்வான், பேரூ ராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாதம் ரூ.16000 சம்பளத்தில் பணிபுரிய 78 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
    • நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ப. மரியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி உலகநாத அரசினர் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதல் கட்ட பயிற்சிக்காக, வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) ஆகிய பாடங்களை கல்லூரியில் கணினி சாராத மூன்றாமாண்டு பயிலும் 122 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

    அவர்களுக்கு செப்டம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பயிற்சியளிக்கப்பட்டது. மாதிரி தேர்வு ஏப்ரல் 2023ல் நடத்தப்பட்டு (IIFL) சமஸ்தா, புளுசிப், பேங்க்பஸார் மற்றும் முத்தூட் நிதி நிறுவனங்களில் மாதம் ரூ.16000த்தில் பணிபுரிய 78 மாணவர்களுக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் மா.திருச்சேரன் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ப. மரியதாஸ், வணிக கூட்டுறவியல் தலைவர் தி.கிருபாநந்தன், பொருளியல் துறைத்தலைவர் முனைவர் பா.எழிலரசு, வரலாற்று துறைத்தலைவர் முனைவர் சு.ஜெகஜீவன்ராம், உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுருளி முருகாநந்தன் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை சண்முகப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியினை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மரிய இராயப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.

    • நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
    • பணி நியமனம் பெற்ற 17 டி.எஸ்.பி.க்களில் 13 பேர் பெண்கள் ஆவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புதிதாக 444 சப்-இன்ஸ்பெக்டர்கள், 44 டி.எஸ்.பி.க்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 டி.எஸ்.பி.க்களும், சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 444 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவர்களுக்கு பணி நியமனங்களை வழங்கிடும் அடையாளமாக 5 பேர்களுக்கு ஆணைகள் வழங்கினார். பணி நியமனம் பெற்ற 17 டி.எஸ்.பி.க்களில் 13 பேர் பெண்கள் ஆவார்கள்.

    இதே போல் சப்-இன்ஸ்பெக்டர்களில் 133 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.எஸ்.பி. சைலேந்திரபாபு உடன் இருந்தனர். 

    • விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
    • www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வரவேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டிஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள்

    16-ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வரவேண்டும்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளவேண்டும். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்ற வர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
    • நேர்காணல் முறையை பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் ,

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் பணி அனுபவ நேர்காணல் முறையை பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும்.

    ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதித் தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண்கள் உள்பட 79 பேரை பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • கோவில் நிர்வாகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது.

    மதுரை

    உலகப்புகழ் பெற்ற திருத்தலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் 6 பெண்கள் உள்பட 79 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான படிவத்தை www.tenders.tn.gov.in, www.tnhrce.gov.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், 5 கோபுர வாயில்களில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு வைப்பறை, அம்மன்-சுவாமி சன்னதி பிரகாரங்கள், தெற்கு நுழைவு வாயில் விபூதி விநாயகர் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், 4 ஆடி வீதிகள், மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எல்லீஸ் நகர் வாகன பாதுகாப்பு மையம், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், கொந்தகை, தெய்வநாயகப் பெருமாள் கோவில், செல்லூர் செல்லத்தம்மன் கோவில், திருவாப்புடையார் ஆலயம், கோச்சடை மற்றும் விளாங்குடி தோட்டங்கள், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரர் கோவில், மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதி வாகன பாதுகாப்பகம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தட்டச்சர்- கணினி பணியாளர், டிராக்டர் டிரைவர், பேட்டரி கார்- ஆம்புலன்ஸ் டிரைவர், பிளம்பர், குங்குமம் தயாரிப்பு மிஷின்களை இயக்க தெரிந்த மெஷினிஷ்ட், மின் உதவியாளர், கூடல் செங்குளம் பண்ணை, தெப்பக்குளம் கல் தூண் பாதுகாக்கும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், தெப்பக்குளம் பெரிய கிணறு, நாகமலை புதுக்கோட்டை சித்தி விநாயகர் கோவில், மீனாட்சி தியேட்டர் ஆகிய இடங்களில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    ×