search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Posted"

    • சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.
    • தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் பிரியா ரவிச்சந்திரன்.

    கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தீயணைப்பு துறையில் திறம்பட பணியாற்றி வருகிறார்.

    மாநில அரசின் பரிந்துரையின்படி ஆண்டு தோறும் காலியாக இருக்கும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இதன்படி 2022-ம் ஆண்டு காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடத்துக்கு தீயணைப்பு இணை இயக்குனரான பிரியா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

    தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    • போலீசார் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்ட குட்டி ராஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் பால் கட்டளையை சேர்ந்த பேச்சி ராஜா (வயது 26) நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் எந்த விதமான பதிவும் போடக்கூடாது என்று மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் போலீசார் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த ஒரு நபர் குட்டி ராஸ் என்ற பெயரில் தனது முகநூல் பக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் புகைப்படத்துடன் வாசகங்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்படும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் பதிவிட்ட குட்டி ராஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓட்டு போடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #VotingProcessRecord #PostedFacebook
    அவுரங்காபாத்:

    மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார். இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. அந்த நபர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

    தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்செயல், தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேஸ்புக்கில் வீடியோ நீக்கப்பட்டது. 
    ×