என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பணியாளர் தேர்வாணையம்"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- செப்டம்பர் 8-ந்தேதி முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பொது அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட தொகுதி 1-ல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து. கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 79,940 நபர்களுக்கும் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 38,110 நபர்களுக்கும், என மொத்தம் 1,18,050 நபர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1-க்கான முக்கிய பணியிடங்களுக்கான பணிகளில் 15 துணை ஆட்சியர்கள், 23 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 14 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 21 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள், 14 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் ஒரு மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்) என மொத்தம் 89 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள், முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
அகில இந்திய பணிகள் மற்றும் ஒன்றிய அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு நடத்தப்படும் அடிப்படை பயிற்சியை போன்றே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1-ல் அடங்கிய பல்வேறு பணி யிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்க ளுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில், கடந்த ஆண்டு முதல், தொகுதி-I அலுவலர்க ளுக்கு பொது அடிப்படை பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள 89 தொகுதி-1 அலுவலர்க ளுக்கு வருகிற செப்டம்பர் 8-ந்தேதி முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பொது அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து கொடுக்கிறது.
அந்த வகையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. 6,244 காலி பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர் 2442 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பத்தினை அளிப்பதற்கு மார்ச் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் 441 பணியிடங்கள், தட்டச்சர்-1653, வனக் காவலர்-526, பல்வேறு துறை பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்வர்கள் 1.7.2024 அன்று 18 வயது நிரம்பியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனகள் விதிக்கப்பட்டுள்ளன.
- டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறையாக நடத்தப்படும்.
- கால தாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி.
சென்னை:
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் புதிய டி.என்.பி.எஸ்.சி.தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறையாக நடத்தப்படும். தேர்வுக்கு பிறகு முடிவுகள் உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு ஏராளமானவர்கள் அரசு தேர்வுகளை எழுதி வருகி றார்கள். அதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை தயாரித்து நடத்தி வருகிறது.
இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்த தலைவர் என்ற முறையில் நான் உறுதி யளிக்கிறேன். தேர்வு முடிவு கள் உடனடியாக வெளியிட அனைத்து நடவடிக்கை களும் எடுப்போம்.
இந்த தேர்வுகளைத் தாண்டி மற்ற போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுதுகிறார்கள். இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம்.
தேர்வுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் இருக்கும் இடைவெளியை நிச்சயம் குறைக்க நடவடிக்கை எடுப்போம். கால தாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகள் நடத்தி வருகிறது. இதை மேம்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.
- தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் 3, தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இந்த வரிசையில், கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்தப் பட்டியல் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 6 வேலை நாட்களில் இந்த பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை வருகிற 21-ந்தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.






