search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமரை சின்னம்"

    • புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
    • தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், இன்று லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகிழம்பாடி வடக்கு ஊராட்சியில் டாக்டர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர். தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து, புதூர் உத்தமனூர் மற்றும் தச்சன் குறிச்சி கிராமத்திலும், பெருவளநல்லூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

    பின்னர் குமுளூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கும்ப மரியாதை வழங்கியும், ஆரத்தி எடுத்தும் டாக்டர் பாரிவேந்தரை பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய அவர், நன்றியுள்ள இந்த ஊருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். குமுளூர் கிராமத்தில், 5 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி பயின்று வருவதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து, புஞ்சை சங்கேந்தி பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, வெங்கடாஜலபுரம் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, விவசாய சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெற்கதிர்கள், செங்கரும்பு வழங்கியும், பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். உழவு மாடுகளை ஏர் பூட்டி, டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதி அளித்தார்.

    இ.வெள்ளனூர் மற்றும் நஞ்சை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, பூவாளூர் பகுதியில் ஆதரவு திரட்டிய அவர், நல்லவர்கள் யார்? ஊழல்வாதிகள் யார்? என்பதை

    அறிந்து வாக்களியுங்கள் என்றும், மறந்தும் சூரியனுக்கு வாக்களிக்காதீர்கள் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து லால்குடிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தும், ஆரத்தி எடுத்து

    மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், மத்திய அரசு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடி ரூபாயை, முழுமையாக செலவு செய்து, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ததாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தாம் செய்த பணிகள், அமைச்சர்களை சந்தித்தது உள்ளிட்டவைகள் குறித்து, புத்தகமாக வழங்கியிருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • மருதூர் கிராமத்திற்கு சென்ற பாரிவேந்தர், காவிரி நீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாடக்குடி கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய டாக்டர் பாரிவேந்தர், ஆயிரத்து 200 ஏழை மாணவர்களுக்கு இலவச உயர் கல்வியும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் என உறுதி அளித்தார். பள்ளி விடை - பை பாஸ் சாலையில் சப்வே பாலம் கட்டி தரப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    இதனைத்தொடந்து, V. துறையூர் கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாரிவேநத்ர், தமிழ்நாட்டில் உள்ள 38 திமுக எம்பிகள் 75 சதவீதம் மத்திய அரசு வழங்கிய நிதியை செலவு செய்யாமல் மீண்டும் திருப்பி அனுப்பியதாகவும், ஆனால் MP நிதியை தொகுதி மக்களுக்கு, தாம் முழுமையாக செலவு செய்ததாகவும் தெரிவித்தார்.

    பின்னர் ரெத்தினங்குடி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து, மருதூர் கிராமத்திற்கு சென்ற பாரிவேந்தர், காவிரி நீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து, மேல பெருங்காவூர் கிராமத்திலும், கீழப்பெருங்காவூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர், பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    நகர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை, பரிவட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ் வழங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார், "ஜெயிக்கிறார் ஜெயிக்கிறார்" பாரிவேந்தர் ஜெயிக்கிறார்" என்று முழக்கமிட்டு வாக்கு சேகரித்தார்.

    இதனைத்தொடர்ந்து நகர் கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய டாக்டர் பாரிவேந்தர், 2019 தேர்தல் வாக்குறுதியின்படி, 118 கோடி ரூபாய் செலவில், ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாகவும், அந்தத் திட்டம் மீண்டும் தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த பாரிவேந்தர், இப்பகுதி மக்களின் கோரிக்கையான தடுப்பணை மற்றும் மயானப் பாதை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து, நெய்க்குப்பை ஊரில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், நாடு உயர, வளர தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த தேர்தலில் MP-ஆக செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டதாகவும், மக்களுக்கு உதவி செய்யவே மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏழை மக்களுக்கு தேடி தேடி உதவ வேண்டும் என்பதே தனது நோக்கம் எனக் கூறிய பாரிவேந்தர், மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி,118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார். ஜனநாயகம் காக்க குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்றும், அவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றும் தெரிவித்தார். ஆன்மீகத்திற்கு விவேகானந்தர். அரசியலுக்கு மோடி என புகழராம் சூட்டிய பாரிவேந்தர், உலக நாடுகள் மோடியை பார்த்து Boss என்று அழைக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

    • கல்வி, மருத்துவம், பாலம் கட்டி கொடுத்தல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார்.
    • பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள்.

    பெரம்பலூர் மக்களைவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, வேப்பந்தட்டை பகுதி பாண்டகபாடியில், IJK தலைவர் ரவி பச்சமுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், வேளாண்மை, ஆகியவற்றுக்கு முக்கியத்தும் அளித்து, பல்வேறு நலத் திட்டங்களை டாக்டர் பாரிவேந்தர் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். தற்போது, ஆயிரத்து 200 பேருக்கு இலவச உயர் கல்வியும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர்தர சிகிச்சையும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருப்பதாக டாக்டர் ரவிபச்சமுத்து சுட்டிக்காட்டினார்.10 லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு திட்டத்தையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் எனவும் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்துள்ளார் என டாக்டர் ரவிபச்சமுத்து தெரிவித்தார். தொகுதி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தர, டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு டாக்டர் ரவிபச்சமுத்து கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து, வேப்பந்தட்டை பகுதியின் சிறு நிலா ஊராட்சியில், டாக்டர் பாரிவேந்தருக்காக வாக்கு சேகரித்த IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் பாரிவேந்தர் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். கல்வி, மருத்துவம், பாலம் கட்டி கொடுத்தல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அமைச்சர்களுடன் நல்ல நட்புறவில் இருப்பதால், தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று பாரிவேந்தர் நிறைவேற்றி உள்ளார் என டாக்டர் ரவிபச்சமுத்து தெரிவித்தார். மீண்டும் அவரை வெற்றிபெறச் செய்தால், தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவார் என ரவிபச்சமுத்து உறுதி அளித்தார். இலவச உயர்கல்வி, இலவச உயர் சிகிச்சை, வேலைவாய்ப்பு முகாம் என பல்வேறு பொன்னான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள் என பொதுமக்களிடம் டாக்டர் ரவிபச்சமுத்து கேட்டுக்கொண்டார்.

    • மறந்தும் கூட இந்த முறை திமுக நிர்வாகிகளை அனுப்பினால் பாராளுமன்றத்தை முடக்கி விடுவார்கள்.
    • டும்ப ஆட்சி என்ற கருத்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இவை அனைத்து திராவிட திருவளார்கள் ஆரம்பித்தது தான்.

    பாராளுமன்ற தொகுதி தொட்டியம் பகுதியில் பாரிவேந்தர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    எனது உரையை துவக்குவதற்கு முன்னால் இங்கு வந்திருக்கிற சகோதர் ஒருவர் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார்.

    முதலாவதாக தொட்டியம் பகுதியில் வாழை மற்றும் வெற்றிலை விவசாசயத்திற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இரண்டாவது வாழைக்காய் மதிப்புக் கூட்டி விற்பனை தொழிற்சாலை அமைக்க வேண்டும். முன்னால் சொன்ன கோரிக்கை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது. இரண்டாவது கோரிக்கை நான் செய்ய வேண்டியது இதை நான் பார்த்துக் கொள்கிறேன். மூன்றாவதாக செயல்படாத காகிதம் செய்யும் ஆலையை சீர்செய்து தருமாறும் இந்த மூன்று கோரிக்கைகளை தொட்டியம் பகுதிக்காக கேட்டுள்ளார். ஒரு திட்டம் தமிழ்நாட்டை சேர்ந்தது மற்ற இரண்டும் மத்திய அரசை சேர்ந்தது இந்த கோரிக்கைகளை நான் வெற்றி பெற்ற பிறகு முடித்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன். இதை படித்தாலே கடந்த பாராளுமன்ற தொகுதிக்கு என்ன செய்தேன் என்பது உங்களுக்கு தெரியவரும்.

    மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. ஏதாவது செய்திருந்தால் தானே புத்தகம் போடுவார்கள் நான் செய்திருக்கிறேன் அதனால் புத்தகம் போட்டேன்.

     

    குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். நீர் தேக்க தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். அதேபோல் அரியலூர், பெரம்பலூர், துரையூர், நாமக்கல் இதை இணைக்கும் ரெயில் பாதை அமைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு பாதி வேலை முடிவடைந்துவிட்டது.

    இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன்.

    அரசியலுக்கு வருவோர் பெரும்பாலும் என்ன சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் வருவார்கள். நான் இங்கு வந்திருப்பது சம்பாதிப்பதற்றாக அல்ல. என்னால் முடிந்ததை என் மக்களுக்கு என் சொந்த பணத்தில் இருந்து உதவி செய்துதான் எனது கொள்கையாக வைத்திருக்கிறேன்.

    கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் அவரை யாரும் குறை கூற முடியுமா? மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு முதலமைச்சாராக இருந்தார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார். அவர் பணக்காரர் இல்லை. வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள ஏழை. அவரது அம்மா அவரை நன்கு படிக்க வைத்தார். தனது சொந்த உழைப்பால் அவர் பிரதமர் ஆகி இருக்கிறார்.

    நாட்டு மக்கள் என்னைப்போல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் பெண்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டுவது செயல்படுத்தியும் இருக்கிறார். மோடியை விட்டால் நமக்கு வேறு வழிகிடையாது, அவர் எதிர்பதற்கும் வேறு ஆள் கிடையாது.

    மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவை உலகநாடுகள் மதிக்கின்றனர். மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை. இந்தியா கூட்டணி இந்தியாவை காப்பாற்ற வருபவர்கள் அல்ல. இந்தியாவை உடைப்பதற்கு வருகிறார்கள். ஒற்றுமை என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரிப்பதற்கு வழிவகுக்கிறார்கள். எந்த ஒரு கேட்ட காரியத்தையும் முதலில் ஆரம்பிப்பது திராவிட திருவாளர்கள் தான். ஊழல் முதலில் ஆரம்பித்தது திராவிட திருவாளர்கள் தான். இவர்களுக்கு நீங்கள் வாக்களித்து இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க கூடாது. குடும்ப ஆட்சி என்ற கருத்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இவை அனைத்து திராவிட திருவளார்கள் ஆரம்பித்தது தான். ஆகவே எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன்

    மறந்தும் கூட இந்த முறை திமுக நிர்வாகிகளை அனுப்பினால் பாராளுமன்றத்தை முடக்கி விடுவார்கள், செயல்பட விடமாட்டார்கள், மோடியை திட்டுவதே குறியாக இருப்பார்கள். விவேகானந்தர் 100 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது போல் நமக்கு மோடி என்ற ஒரு நல்லவர் கிடைத்திருக்கிறார். இதை புரிந்து கொண்டு நாட்டினுடைய வளர்ச்சி அடைவதற்கு நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்று கூறினார்.

    • மனுவை பரிசீலித்து, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.

    சென்னை:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சி தலைவர் ரமேஷ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பா.ஜ.க.வுக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. வக்கீல்கள் வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    • கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.
    • எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதாக முன்னாள் முதலமைச் சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் அறிவித்தனர்.

    தொகுதி பங்கீடு குறித்து இதுவரையில் வெளிப்படையான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர்.

    தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஒரு வாரத்தில் 2 முறை சுற்றுப் பயணம் செய்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜனதாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

    இந்நிலையில் பா.ஜனதா தொகுதி பங்கீடு குழுவினர் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனை விரைவில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர். பா.ஜ.க. விடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 10 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளனர். அதே போல் டி.டி.வி. தினகரன் தரப்பிலும் 10 தொகுதிகள் கேட்கின்றனர்.

    கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகிய இருவருக்கும் சேர்ந்து பா.ஜ.க. 10 தொகுதிகளை ஒதுக்க முன் வருவதாக தெரிகிறது. அதை இருவரும் சமமாக தலா 5 தொகுதிகள் வீதம் பிரித்து கொள்ளும்படி கூறி உள்ளனர்.

    இது குறித்த பேச்சு வார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகள் கேட்கப்படுகிறது என்ற விவரம் வருமாறு:-

    1.தேனி-ப.ரவீந்திர நாத்குமார், 2. ஸ்ரீபெரும்புதூர், 3.திருச்சி, 4.மதுரை, 5.சிவகங்கை, 6.தஞ்சை, 7.வட சென்னை, 8.காஞ்சிபுரம், 9.கிருஷ்ணகிரி, 10.கோவை

    அ.ம.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள்: 1.ராமநாதபுரம், 2.திருநெல்வேலி, 3.திருச்சி, 4.தென்சென்னை, 5.வேலூர், 6.நீலகிரி, 7.நாகப்பட்டிணம், 8.விழுப்புரம், 9.திண்டுக்கல், 10.திருவள்ளூர்

    தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனும் தனி சின்னத்தில் நிற்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.

    ×