search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naam tamilar katchi"

    • முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம்.
    • நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சீமான் 'மாலை மலர்' நிருபர் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் மீது மத்திய அமைப்புகளை ஏவிவிட்டு விசாரணை நடத்துவது புதிது அல்ல. அந்த வகையில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்கு தேசிய புலனாய்வு அமைப்பை ஏவி விட்டுள்ளனர்.

    முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம். சட்ட விரோதமாக பணம் வருவதாக கூறியே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற பொய்யான விஷயங்களை கூறி எங்களை மிரட்ட வேண்டும் என்கிற எண்ணத்திலேயே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றுள்ளது.

    இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழர் விரோத நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது.


    பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனையை பார்க்கிறோம்.

    நாங்கள் சரியான திசையில் பயணிப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

    எங்கள் கட்சி பிள்ளைகளை தொந்தரவு செய்வதன் மூலமாக அவர்களின் அரசியல் பணிகளை முடக்கிப் போட்டுவிடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏதாவது தகவல்கள் வேண்டும் என்றால் என்னிடமே கேட்கலாம்.

    நேரடியாக என்னை அழைத்து விசாரணை நடத்த வேண்டியதுதானே? அதில் என்ன தயக்கம் என்றும் தெரியவில்லை. இதுபோன்ற சோதனைகளால் நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைத்தால் அது பாரதிய ஜனதா கட்சி போடும் தப்புக்கணக்காகவே அமையும். நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.

    சென்னை:

    தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், நிதி திரட்டி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையிடுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தனர்.

    என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.

    • கோவை காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
    • வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் இருப்பவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக என்.ஐ.ஏ. என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கு முன்பு இது தொடர்பாக சென்னை உள்பட அனைத்து மாவட் டங்களிலும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பினரோடு தொடர்பில் இருப் பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென்று சோத னையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் சீமான் தலை மையிலான நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் களத்தில் தனியாகவே நின்று ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

    விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.

    இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் 2-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தற்போது பெங்களூரில் தங்கி இருந்து பணி புரிந்து வருகிறார்.

    நாம் தமிழர் கட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பாலாஜியின் மனைவியிடம் விசாரித்து விட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

    திருச்சி, வயலூர் ரோடு சண்முகா நகரில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீடு உள்ளது. இங்கு இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் சிம் கார்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

    சாட்டை துரைமுருகன் தனது சாட்டை வலைதளம் மூலமாக மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் தமிழக காவல்துறையினர் அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    2 மணி நேர சோதனைக்கு பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரி கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது பழ. நெடுமாறன் எழுதிய விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் மற்றும் திருப்பி அடிப்பேன் என்ற இன்னொரு புத்தகம் ஆகிய 2 புத்தகங்களை கைப்பற்றி சென்றனர்.

    வருகிற 7-ந்தேதி சாட்டை துரைமுருகன் சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர். அந்த சம்மனை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

    கடந்த 2022-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி தயாரிப்பது குறித்து வெளியான காணொளி குறித்து சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 7 நாம் தமிழர் கட்சியினர் மீது அப்போது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படை யில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி.நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். யூடியூபரான இவர் நாம் தமிழர் கட்சியின் தொழில் நுட்ப பாசறை பிரிவு உறுப்பினராக சில ஆண்டு கள் பணியாற்றி உள்ளார். அதன்பின்னர் அந்த கட்சி யில் இருந்து விலகிவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த படியே விளம்பர பேனர்கள் தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் பல்வேறு கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு 12 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் காரில் வந்து இறங்கினர். பின்னர் அவர்கள் ரஞ்சித்குமாரின் வீட்டிற்குள் சென்றனர்.

    வேறு யாரும் உள்ளே வராதபடி வாயில் கதவை அவர்கள் அடைத்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி கொண்ட னர். பின்னர் அவரது வீட்டில் உள்ள அறைகள் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் போது வீட்டில் சில ஆவணங்கள் இருந்ததாகவும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த அவரிடமும் விசாரித்தனர்.

    இவரது வங்கி கணக்கில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சிலருக்கு பணம் அனுப்பி உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. அதன்பேரி லேயே இவரது வீட்டில் சோதனை நடப்ப தாக கூறப்படுகிறது.

    கோவை காளப்பட்டி சரஸ்வதி கார்டனை சேர்ந்தவர் முருகன். இவருடைய வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி அது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் மதிவாணன். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். அப்பகுதி யில் ஸ்டூடியோவும், இ-சேவை மையமும் நடத்தி வருகிறார்.

    இவரது ஸ்டூடியோவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவினர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் மதிவாணனின் ஸ்டூடியோவிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை யொட்டி கட்சி பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந் தார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு தேசிய புலனாய்வுக்குழு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அதிரடியாக விஷ்ணு வீட்டில் சோதனை நடத்தினர்.

    மேலும் யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச் சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகா ரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், பேச்சாளருமான இடும்பாவனம் கார்த்திக் நேரில் ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த சம்மனை பெற்றுக் கொண்ட இடும்பாவனம் கார்த்திக் வருகிற 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராவதாக பதில் அனுப்பி உள்ளார்.

    சீமான் கட்சியினரின் வீடுகளில் இன்று நடை பெற்றுள்ள இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்?
    • முதலமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், முத்துக்குமார் 15-வது ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று முத்துக்குமார், பழனிபாபா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கட்சி தொடங்கிய அன்று முதல் இன்று வரை கூட்டணி இல்லை என்றும் தனித்து தான் எங்கள் பயணம் தொடர்கிறது. மக்களை நம்புகிறோம். எங்களை மக்கள் கைவிடமாட்டார்கள். தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தனித்து தான் என்று வரலாறு பேசும். நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர்.

    இது கொள்கைக்காக கூடும் கூட்டம். தி.மு.க. என்பது கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. கருணாநிதி குடும்பத்தின் சொத்து. ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் மற்ற கட்சிகளால் ஓட்டோ அல்லது கூட்டத்தையோ கூட்ட முடியாது. நாம் தமிழர் செய்வது தான் புரட்சி.

    தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் 2026-க்கு பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது. ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை 8 வழிச்சாலையில் அழைத்துச் செல்வது தி.மு.க., பா.ஜ.க. தான். ஒரு தீவிரவாதியாகவோ, பயங்கரவாதியாக என்னை மாற்றி விடாதீர்கள், ஜனநாயகவாதியாகவே என்னை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை (பனை-தென்னை பால்) திறப்போம். டாஸ்மாக் கடைகளை மூடுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா? கூட்டுறவு வங்கியில் வைத்த நகைக் கடன் தள்ளுபடி செய்து விட்டார்களா?.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்? கேலோ என்பது இந்தியில் விளையாட்டு என்று அர்த்தம். இந்தி தெரியாது போடா என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் இந்தியை வாடா என்கின்றனர். முதல்-அமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் நான் தனித்து தான் போட்டியிடுகிறேன்.
    • சங்கி என்பது இழிவான சொல் இல்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

    பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தொகுதி வாரியாக முக்கிய பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துக்கூறி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். இதனால் வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன். முதலமைச்சர் வெளிநாடு செல்வது தனிப்பட்ட பயணம். அதை எதுவும் சொல்ல முடியாது. பா.ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை துண்டு, துண்டாக உடைத்து விடும். இந்தியா கூட்டணியும் தொடர்ந்து நீடிக்காது.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் . 2026-ல் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவார். நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று கூறுவதாக, அவரது மகள் ஐஸ்வர்யா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். சங்கி என்பது இழிவான சொல் இல்லை.

    உங்கள் மீது வைக்கக்கூடிய விமர்சனம் உண்மை இல்லை என்றால் நீங்கள் கோபப்பட தேவையில்லை. கலைஞர்களை சுதந்திரமாக விட வேண்டும். உங்கள் விருப்பு, வெறுப்புக்கு பொருத்தி பார்க்க வேண்டாம். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நன்கு வளர்ந்துள்ளது. நிச்சயமாக மாறுதல் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தம்பி விஜய் அரசியலுக்கு முதலில் வரட்டும். அவரது கொள்கைகளை கூறட்டும்.
    • விஜயகாந்த் வலுவாக வந்தார். மாற்றம் என்று கூறியவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால் பின்னடைவை சந்தித்தார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வர தயாராவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-

    தம்பி விஜய் அரசியலுக்கு முதலில் வரட்டும். அவரது கொள்கைகளை கூறட்டும். எம்.ஜி.ஆரே அரசியலுக்கு வருவதற்கு முதலில் தயங்கினார். ஜெயலலிதா புதிதாக கட்சி தொடங்கி இருந்தால் வென்றிருப்பாரா என்பது தெரியாது. விஜயகாந்த் வலுவாக வந்தார். மாற்றம் என்று கூறியவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால் பின்னடைவை சந்தித்தார்.

    சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்றவர்களாலும் வெல்ல முடியவில்லை. எனவே விஜய் அரசியலுக்கு வந்தால் நின்று சண்டை போடவேண்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவோம். விஜய் கனவு வெல்ல எனது வாழ்த்துக்கள். கட்சி தொடங்கி உடனே வென்றால் அது புரட்சிதான்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் நாள் விரைவில் வரும்.
    • நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி.

    சேலம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கைக்கு கப்பல் பயணம் அறிவித்த அன்றே தெரியும், அந்த கப்பல் பயணிக்க போவதில்லை என்று. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இலங்கை ராணுவமே தமிழக மீனவர்கள் மீது சுடுகிறது, வலைகளை அறுத்து எறிகிறது. சொல்ல முடியாத சித்ரவதைகளை செய்து வருகிறது. இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் எதுவும் கண்டுகொள்வதில்லை.

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் நாள் விரைவில் வரும். அப்போது மீனவர்கள் மீது கை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம். ஏனென்றால் அவர்களுக்கே தெரியும், கொன்று விடுவார்கள் என பயம் ஏற்படும். கர்நாடகம் தண்ணீர் கொடுக்க மறுப்பதால் தி.மு.க. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட்டு கூட இல்லை என்று கூறி கூட்டணியை விட்டு விலக்கி இருக்க வேண்டும்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அந்த பயத்திலேயே தி.மு.க. அரசு லியோ படத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளது. மத்தியில் பா.ஜனதா கட்சி இருப்பதால் அண்ணாமலையின் பேச்சு மதிக்கப்படுகிறது. இல்லாவிடில் அவரது பேச்சு எடுபடாது. நாம் தமிழர் கட்சி மக்களுடன் தான் மிகப்பெரிய கூட்டணி வைத்துள்ளது. மக்களை நம்பி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.

    கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. அழைத்து பேசும்போது கூட, இரு கட்சிகளுக்கும் கொள்கை முடிவு வெவ்வேறாக இருப்பதால் முடியாது என்று கூறிவிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட மாட்டார். அப்படி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் களம் இறங்குவேன். அவரிடம் நிறைய கேள்விகள் கேட்பேன். ஓட்டுக்காக பணம் கொடுப்பதை ஒழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது.
    • 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை.

    நாமக்கல்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது. மக்களை நம்பி தான் நான் இருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வெற்றி பெறுவோம். கல்வி, மருத்துவம், தண்ணீர் என எல்லாற்றையும் விற்றுவிட்ட நிலையில், தற்போது குழந்தைகளை விற்று வருகின்றனர். மூளைச்சாவு என்ற நோயை உருவாக்கி, மனிதனின் உடல் உறுப்புகளை விற்கின்றனர்.

    ஒழுகும் பள்ளிகளை சீரமைக்க முடியாத அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து சமாதி கட்டுகிறது. தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் எனக் கூறி வருகிறார். ஆனால் ஆசிரியர்கள், செவிலியர்கள் எதற்காக போராட்டம் நடத்துகின்றனர்?. மகளிர் உரிமை தொகைக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி தமிழக அரசு செலவு செய்கிறது. யாருடைய பணத்தை செலவு செய்கிறார்கள்?. 60 ஆண்டுகளாக, திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.

    'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை. நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்திற்கு, இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பிரச்சனைதான். காரணம், நடிகர் விஜய் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வருவார் என்பதால் தான் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அவர் நடிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்ய முடியும். தேவையில்லாமல் நடிகர் விஜயை சீண்டி விட்டீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி சீமானால் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது.
    • கூட்டணி விஷயத்தில் சீமான் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருக்கும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்க அதிரடியாக காய் நகர்த்தி வருகிறது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த தோழமை கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு புதிதாக மெகா கூட்டணியை அமைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த கூட்டணியில் புதிய கட்சியாக சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சீமானிடம் விரைவில் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு இழுக்க அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளன.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் ஆர்வமாக உள்ளன. அந்த வகையில் சீமானின் நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

    இதுபற்றி நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது, "எங்களுக்கு கூட்டணி அழைப்பு வந்தது உண்மை தான் என்று தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் தனித்து போட்டியிடும் முடிவில் உறுதியாகவே இருக்கிறோம். ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்தார்.

    நாம் தமிழர் கட்சி சீமானால் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலுமே அந்த கட்சி தனித்தே போட்டியிட்டுள்ளது. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றுள்ளனர்.

    2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3-வது இடம் கிடைத்தது. 170-க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதித்திருந்தனர். உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வெற்றியும் பெற்றிருந்தனர்.

    நாம் தமிழர் கட்சயின் இந்த வாக்கு சதவீதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 10 சதவீதத்தை தாண்ட வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இதை மனதில் வைத்துதான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமானை அ.தி.மு.க. கூட்டணிக்கு இழுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆனால் நாம் தமிழர் கட்சிகள் கூட்டணி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு பிரிவினர் கூட்டணி அமைக்கலாம் என்றும், இன்னொரு பிரிவினர் கூட்டணி வேண்டாம் என்கிற கருத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் கூட்டணி விஷயத்தில் சீமான் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருக்கும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்த்து ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதே பாணியில் தற்போது சீமானை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வெற்றி பெற்று விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டிருப்பதாக அ.தி.மு.க.வின் தெரிவித்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் பலன் அளிக்குமா? அ.தி.மு.க. கூட்டணியில் சீமான் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை 40 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
    • சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    காவிரியில் கர்நாடகா உரிய தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை 40 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் வக்கீல் ஸ்ரீதர் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    • உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை.
    • சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா ?

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். வீரலட்சுமிக்கு எதிராக சீமான் பல முறை கருத்துகளை முன்வைத்தார்.

    இது இருவரிடையே கருத்து மோதலை ஏற்படுத்தியது. அவ்வபோது வீரலட்சுமியும் வீடியோக்களை வெளியிட்டு சீமானுக்கு எதிராக பேசி வருகிறார்.

    இந்நிலையில், கணவர் கணேசனுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி சீமானுக்கு வீரலட்சுமி சவால் விட்டுள்ளார். மேலும், பாக்ஸிங் போடுவதற்கான இடத்தையும், நேரத்தையும் அறிவித்து வீடியோ ஒன்றையும் வீரலட்சுமி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களே.. ஊடகவியாளர் மத்தியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் என்னை பெண் என்றும் பாராமல் ஒழிங்கினமாக பேசி வருகிறீர்கள். நீங்கள் பேசும் பேச்சுகளை பொது வாழ்வில் உள்ள ஒரு பெண்ணாக நான் பொறுத்துக் கொண்டு கடந்து செல்வேன். ஆனால், உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை.

    எனது கணவர் உங்களை செல்போனில் தொடர்புக் கொண்டபோது அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் தொடர்புக் கொண்டபோது சீமானிடம் தனக்கு உங்களுடன் பாக்ஸிங் செய்ய ஆசையாக இருக்கிறது. உங்களால் என் எதிரில் நிற்க முடியுமா என்று கேட்டார். ஆனால் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.

    சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா?  ஆனால், ஊடகவியளரிடம் தைரியம் இருந்தால் நேரில் வந்து நிற்க சொல்லுங்கள் என்று எனது கணவரை கூறியிருக்கிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை சுமார் ஒரு மணி நேரம் கேள்வி கேட்டு பேசியவர் எனது கணவர்.

    அது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போது நின்றுக் கொண்டிருக்கும் இடம் திருவள்ளுவர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மைதானம் இது. இங்குதான் பாக்சிங் செய்வதற்கு இடம் ஏற்பாடு செய்துள்ளேன். 2024ம் ஆண்டு தை மாதத்தில் வரும் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் சண்டை நடக்க போகிறது.

    இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம் என இதில் எது வேண்டுமென்றாலும் செய்யலாம். அனைத்தையும் சமாளிக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். இதில் தோற்பவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன பந்தயம் என்பது குறித்து போட்டியின் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
    • புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன்.

    திருவள்ளூர்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். இந்த நிலையில் அவர் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் வீரலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், நடிகை புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன். வீரலட்சுமி யார் என சீமானுக்கு தெரியாதா? சீமானுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட்டம் இருக்கிறது என்றார்.

    ×