என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நேரடியாக என்னை அழைத்து விசாரணை நடத்த வேண்டியதுதானே?
- முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம்.
- நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் 'மாலை மலர்' நிருபர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் மீது மத்திய அமைப்புகளை ஏவிவிட்டு விசாரணை நடத்துவது புதிது அல்ல. அந்த வகையில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்கு தேசிய புலனாய்வு அமைப்பை ஏவி விட்டுள்ளனர்.
முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம். சட்ட விரோதமாக பணம் வருவதாக கூறியே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற பொய்யான விஷயங்களை கூறி எங்களை மிரட்ட வேண்டும் என்கிற எண்ணத்திலேயே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றுள்ளது.
இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழர் விரோத நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனையை பார்க்கிறோம்.
நாங்கள் சரியான திசையில் பயணிப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
எங்கள் கட்சி பிள்ளைகளை தொந்தரவு செய்வதன் மூலமாக அவர்களின் அரசியல் பணிகளை முடக்கிப் போட்டுவிடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏதாவது தகவல்கள் வேண்டும் என்றால் என்னிடமே கேட்கலாம்.
நேரடியாக என்னை அழைத்து விசாரணை நடத்த வேண்டியதுதானே? அதில் என்ன தயக்கம் என்றும் தெரியவில்லை. இதுபோன்ற சோதனைகளால் நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைத்தால் அது பாரதிய ஜனதா கட்சி போடும் தப்புக்கணக்காகவே அமையும். நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்