search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naam tamilar katchi"

    • நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.
    • நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சீமான் படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

    புதுப்பேட்டை:

    பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.

    இந்த நிலையில் சீமானின் சின்னம் என்ன என்ற வாசகத்துடன் தேர்தல் ஆணையத்தை கேட்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சீமான் படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

    இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன்
    • நான் வேளாண் குடிமகன் என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன்.

    துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமை செயலகத்தில், விவசாயி சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இருக்கிறோம். அவர் பரிந்துரைப்பதாக கூறியிருக்கிறார். இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வரும். அடுத்ததாக உச்சநீதிமன்றம் செல்வேன்.

    நான் முதலில் புலி கேட்டேன். அது தேசிய விலங்கு என்று சொன்னீங்க. அடுத்து மயில் கேட்டேன். தேசிய பறவைன்னு சொன்னீங்க. ஆனால் தேசிய மலர் தாமரையை பிஜேபிக்கு எப்படி கொடுத்தீங்கன்னு கேட்டேன்.

    நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். 7 விழுக்காடு. இருப்பதிலேயே தனித்த கட்சி என்றால் திமுக, அதிமுகவிற்கு பிறகு நாங்கள் தான்.

    நீங்கள் 8 விழுக்காடு தொட வேண்டும் என்கிறீர்கள். 7 தொட்டவுடன் சின்னத்தை தூக்கி விடுகிறீர்கள்? இது தான் ஜனநாயகமா? லஞ்சம், ஊழல் செய்பவர்கள் தான் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். எப்படி ஒழியும்?

    துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன் என்று அவர் கூறியுள்ளார். எந்த சின்னமாக இருந்தாலும் நான் போட்டியிடுவேன் என்றும் எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள் சீமானுக்கு என்ன சின்னம் என்று பார்த்து தான் போடுவார்கள்.

    நான் வேளாண் குடிமகன் என்பதால் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறேன். அதையொட்டி சின்னம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் போராடுகிறேன்" என்று சீமான் தெரிவித்தார்.

    • சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் நான் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.
    • கரும்பு விவசாயி சின்னம் தராமல் என்னை முடக்க நினைக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் நான் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.

    * நான் மயில் சின்னத்தை கேட்டபோது தேசிய பறவை என கொடுக்க மறுத்தனர். ஆனால் தேசிய மலர் தாமரை பாஜகவிற்கு கொடுக்கப்பட்டது ஏன்?

    * பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்வேன்.

    * அங்கீகாரம் பெறுவதற்குள் என்னை தூக்கி எறிந்து விடுகிறீர்கள்.

    * கரும்பு விவசாயி சின்னம் தராமல் என்னை முடக்க நினைக்கிறார்கள்.

    * ஒரு இடத்தில் கூட 100 வாக்குகளுக்கு மேல் பெறாத கர்நாடக கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுத்துள்ளனர் என்று அவர் கூறினார்.

    • வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது முடிவு மக்கள் கையில் இருக்காது.
    • தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்கிறோம்.

    தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி.

    நாட்டை அரை நூற்றாண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தற்பொழுது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார். இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? தேர்தல் வரும் பொழுது அனைவர் மீதும் பாசம் வருகிறது. இவை அனைத்தும் நாடகங்கள். வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழவைக்காமல், இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார். நான் ஆட்சியில் அமர்ந்த பின்பு மீனவர்கள் மீது முடிந்தால் யாராவது தொட்டுப் பார்க்கட்டும்.

    காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, அதனால் பா.ஜ.க.விற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்கு சென்று இருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு 3 முறை எம்.எல்.ஏ சீட்டு வழங்கியது. ஆனால் பா.ஜ.க.வை பொறுத்தவரை அக்கட்சியில் சேரும்போது ஏதாவது செய்வார்கள். அதன்பின் எந்த செய்தியும் வராது.

    வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது முடிவு மக்கள் கையில் இருக்காது. பா.ஜ.க.வினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்கு பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள். நாம் தமிழர் கட்சியை கூட்டணியில் சேர பல்வேறு கட்சியில் இருந்து அழைப்பு வருகிறது. என்னிடம் ரகசியமாக பேசுகிறார்கள். நானும் அதை ரகசியமாக வைத்துள்ளேன். அதை வெளிப்படையாக கூறுவது மாண்பாக இருக்காது. வேட்பாளர் அறிவித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    வாக்கு எந்திரத்தை நமக்கு தயாரித்து தருவது ஜப்பான். ஆனால் அந்த நாட்டு தேர்தலிலேயே அதை பயன்படுத்துவதில்லை.

    நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றில் விடைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முடியும் என கூறுகிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வாக்கு எந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களே தெரிவிக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்களில் பேச உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
    • நாம் தமிழர் கட்சி கடந்த 6 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தீவிரமாகி வருகிறது.

    தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் 20 பெண் வேட்பாளர்களை சீமான் நிறுத்துகிறார். 31 தொகுதிகளுக்கு சீமான் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார்.

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழ்செல்வி நிறுத்தப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக டாக்டர் களஞ்சியம் சிவக்குமார் போட்டியிடுகிறார். திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக ஜெகதீஸ் சுந்தர் நிறுத்தப்பட்டுள்ளார்.

    மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான தேர்வும் இந்த மாத இறுதியில் முடிவாகிறது.

    இதையடுத்து சென்னையில் இருந்து சீமான் இந்த மாத இறுதியில் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

    தமிழகம்-புதுவையில் போட்டியிடும் 40 பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் அவர் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் வகையில் பிரசாரம் செய்கிறார்.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்களில் பேச உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    நாம் தமிழர் கட்சி கடந்த 6 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்த சின்னம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தை நாம் தமிழர் கட்சி நாடியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கட்சி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

    கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், தென்னகம் விஷ்ணு ஆகிய இருவரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள்.
    • பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீடு உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 30-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் 10 சிம்கார்டுகள், 4 பென் டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

    இவைகளை ஆய்வு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    இதற்கிடையே சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் மற்றும் 2 நிர்வாகிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், தென்னகம் விஷ்ணு ஆகிய இருவரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஓமலூரில் போடப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி உள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். யார்-யாருடன் அவர்கள் செல்போனில் பேசியுள்ளனர் என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் விசாரணைக்காக ஆஜராகினர்.

    இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு கொண்டு, பல நூறு கோடி நிதி சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த 2022-ல் ஓமலூர் அருகே வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட 2 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    இதில், தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுத போராட்டத்தை நடத்தவும், இதற்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகவும், இந்த ஆயுத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

    அதன் அடிப்படையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறையில் நாம் தமிழர் கட்சி தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார் (33), நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன் (40), மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் (25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூர் பொறியாளர் பாலாஜி (33) ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது.

    அதைதொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் இன்று சாட்டை துரை முருகன், இசை மதிவாணன், முருகன் ஆகியோர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலையும் சீமான் தனித்தே சந்திக்க முடிவு செய்து இருக்கிறார்.
    • வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கீடு என முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல பதட்டம் இன்றி தனியாகவே தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வருகிறது.

    நாம் தமிழர் கட்சி இது வரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளது. சட்டமன்ற, பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் கணிசமான வாக்கு சதவீதத்தை அந்த கட்சி தொடர்ந்து பெற்று வருகிறது.

    நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலையும் சீமான் தனித்தே சந்திக்க முடிவு செய்து இருக்கிறார்.

    இதன்படி வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


    அந்த வகையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்களை களம் இறக்க சீமான் முடிவு செய்துள்ளார். இதற்கான வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி நெல்லை, கன்னியாகுமரியில் பெண் வேட்பாளர்கள் களமிறங்கும் நிலையில் தென்சென்னை தொகுதிக்கும் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தென்சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியை தமிழ்ச் செல்வி போட்டியிடுகிறார். இந்த 3 வேட்பாளர்களை தவிர மேலும் 17 பெண் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    இது தொடர்பான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விரைவில் அறிவிக்க உள்ளார். மீதம் உள்ள 20 தொகுதிகளிலும் ஆண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். அவர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தல் களத்தில் இந்த முறை நாம் தமிழர் கட்சி தங்களது வாக்கு சதவீதத்தை அதிக அளவில் உயர்த்தி காட்டும் என்று அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    இது தொடர்பாக அவர் கூறும்போது, "தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வருவதே நாம் தமிழர் கட்சியின் தனித் தன்மையாக இருந்து வருகிறது. படிப்படியாக எங்களது ஓட்டு சதவீதமும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த தேர்தலில் நிச்சயம் அரசியல் களத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு எங்களது வாக்கு சதவீதம் கூடியிருக்கும். அதற்கு ஏற்ப வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டுள்ளார்.

    தமிழக மக்களும் நாங்கள் தனித்து போட்டியிடுவதையே தொடர்ந்து விரும்புகிறார்கள். அதனாலயே எங்களது வாக்கு சதவீதம் உயர்ந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாங்கள் திராவிட கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கடும் சவாலை அளிப்போம் என்றும் அவர் கூறினார்.

    • நான் வைக்கும் தத்துவம் ஈர்த்து நாம் தமிழர் கட்சிக்கு வந்தாலும் மகிழ்ச்சியே.
    • என்.ஐ.ஏ. சோதனை மூலம், தி.மு.க. பரப்பி வந்த, பா.ஜ.க.வின் பி டீம் நாம் தமிழர் என்ற கூற்று பொய்யாகி உள்ளது.

    நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி பெயரில், திராவிடம் என்பது இடம் பெறவில்லை. எனவே இந்த திராவிட கருத்தியலை, அவருக்கு முன்பாக நாம் தமிழர் கட்சி, தமிழரசு கட்சி எதிர்த்து வருகிறது.

    திராவிடம் என்பது தேவைப்படாது, அதனை கடந்து தமிழ் சமூகம் வந்து விட்டது. திராவிடம் என்று அரசியல் செய்ய முடியாது. திராவிட அரசியல் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    அதிகளவில் இளைஞர்கள் நாம் தமிழர் கட்சி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் தடையாக இருக்காது. அவர் வைக்கக்கூடிய தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் அங்கு சென்றால் மகிழ்ச்சி.

    நான் வைக்கும் தத்துவம் ஈர்த்து நாம் தமிழர் கட்சிக்கு வந்தாலும் மகிழ்ச்சியே. விஜய்யின் ரசிகர்கள் அதிகளவில் நாம் தமிழர் கட்சியில் உள்ளனர். நான் விஜய்யின் ரசிகனாக இருப்பேன். ஆனால் நாம் தமிழருக்குதான் வாக்களிப்பேன் என்று சொல்லி வருகின்றனர். இதில் எந்த குழப்பமும் இல்லை.

    தமிழக காவல்துறை செய்ய வேண்டிய வேலையை என்.ஐ.ஏ. செய்திருக்கிறார்கள் என்று எச்.ராஜா சொல்லி இருப்பது தேர்தல் நேரத்து விளையாட்டு. நாம் தமிழர் கட்சியினர் மீது வைக்கப்பட்டு உள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது என்.ஐ.ஏ.விற்கு தெரியும். இவ்வளவு நாட்கள் அமைதி காத்து விட்டு, தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு விசாரணை எதற்காக என்பதும் அனைவருக்கும் தெரியும்.

    இந்த என்.ஐ.ஏ. சோதனை மூலம், தி.மு.க. பரப்பி வந்த, பா.ஜ.க.வின் பி டீம் நாம் தமிழர் என்ற கூற்று பொய்யாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் பா.ஜனதா பூஜ்யமாக உள்ளது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். இதனை நாங்கள் முன்பிருந்தே சொல்லி வருகிறோம். ஆனால் தி.மு.க.தான் மக்களை பயமுறுத்தியது. சீமானுக்கு வாக்களித்தால் பா.ஜ.க.வுக்கு சென்று விடும் என்று முதல்வர் கூறி வந்தார். இப்போது அவரே கூறுகிறார் பா.ஜனதா பூஜ்யம் என்று.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • விஜய் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.
    • விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மண் ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அ.தி.மு.க.வின் வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. யாரும் கை வைக்க முடியாது விஜய் தன் அறிக்கையில் தி.மு.க., பா.ஜ.க. குறித்தே விமர்சனங்களை முன் வைத்துள்ளார். புதிய, நடுநிலை வாக்காளர்களின் ஓட்டு நிச்சயம் அ.தி.மு.க.வுக்கே என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது.
    • விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?.

    தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது. தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.

    விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?. என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னிடம்தான் விசாரணை செய்திருக்க வேண்டும். பிப்ரவரி 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது தானும் நேரில் சென்று ஆஜராக இருக்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியினர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.

    இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்புடையவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில்தான் தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

    • முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம்.
    • நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சீமான் 'மாலை மலர்' நிருபர் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் மீது மத்திய அமைப்புகளை ஏவிவிட்டு விசாரணை நடத்துவது புதிது அல்ல. அந்த வகையில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்கு தேசிய புலனாய்வு அமைப்பை ஏவி விட்டுள்ளனர்.

    முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம். சட்ட விரோதமாக பணம் வருவதாக கூறியே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற பொய்யான விஷயங்களை கூறி எங்களை மிரட்ட வேண்டும் என்கிற எண்ணத்திலேயே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றுள்ளது.

    இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழர் விரோத நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது.


    பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனையை பார்க்கிறோம்.

    நாங்கள் சரியான திசையில் பயணிப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

    எங்கள் கட்சி பிள்ளைகளை தொந்தரவு செய்வதன் மூலமாக அவர்களின் அரசியல் பணிகளை முடக்கிப் போட்டுவிடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏதாவது தகவல்கள் வேண்டும் என்றால் என்னிடமே கேட்கலாம்.

    நேரடியாக என்னை அழைத்து விசாரணை நடத்த வேண்டியதுதானே? அதில் என்ன தயக்கம் என்றும் தெரியவில்லை. இதுபோன்ற சோதனைகளால் நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைத்தால் அது பாரதிய ஜனதா கட்சி போடும் தப்புக்கணக்காகவே அமையும். நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    ×