என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் இந்த மாத இறுதியில் பிரசாரம் தொடக்கம்
- பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்களில் பேச உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
- நாம் தமிழர் கட்சி கடந்த 6 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தீவிரமாகி வருகிறது.
தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் 20 பெண் வேட்பாளர்களை சீமான் நிறுத்துகிறார். 31 தொகுதிகளுக்கு சீமான் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார்.
தென்சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழ்செல்வி நிறுத்தப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக டாக்டர் களஞ்சியம் சிவக்குமார் போட்டியிடுகிறார். திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக ஜெகதீஸ் சுந்தர் நிறுத்தப்பட்டுள்ளார்.
மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான தேர்வும் இந்த மாத இறுதியில் முடிவாகிறது.
இதையடுத்து சென்னையில் இருந்து சீமான் இந்த மாத இறுதியில் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
தமிழகம்-புதுவையில் போட்டியிடும் 40 பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் அவர் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் வகையில் பிரசாரம் செய்கிறார்.
பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்களில் பேச உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
நாம் தமிழர் கட்சி கடந்த 6 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த சின்னம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தை நாம் தமிழர் கட்சி நாடியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கட்சி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்