search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MP"

    • மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை 2ம் இடத்தை பெற்றுள்ளது.
    • பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள பிற மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் வந்து செல்கின்றனர். மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

    பழமையான இந்த மருத்துவமனையில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது பொது மக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யலாம், பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர். மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

    இந்த ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், மருத்துவமனை நிலைய அலுவலர் செல்வம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார்.
    • திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி அடுத்த அம்மாபாளையத்தில், கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார். அவரிடம், கண்டக்டர் அவிநாசி, தெக்கலுாருக்குள் பஸ் செல்லாது என கூறி இறங்க சொன்னார். செல்வி இறங்குவதற்குள் அஜாக்கிரதையாக டிரைவர் பஸ்ஸை நகர்த்தியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த செல்வி பலியானார். பல்வேறு சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் பஸ்ஸை இயக்கிய கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் படி கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அவிநாசி வந்த நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடம், பொதுமக்கள் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அதில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் கோவையிலிருந்து செல்லும் பஸ்களும், சேலம், ஈரோடு, திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் பயணிகளை இறக்கி, ஏற்றி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.பி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

    • ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது. அதற்காக, அம்பா சமுத்திரம் சாலையில் உள்ள வேன் நிறுத்துமிடம் பகுதியில், மாற்று இடத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


    இதையடுத்து, சிலை அமைப்புக் குழு சார்பில், அதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    சிலை அமைப்பு குழுத் தலைவர் ஜாண்ரவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஞான திரவியம், எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா, முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, கே.ஆர்.பி. பிரபாகரன், தொழிலதிபர் டி.பி.வி.கருணாகர ராஜா, நெல்லை மண்டல வியா பாரிகள் பேரமைப்பு சங்கத் தலைவர் டி.பி.வி.வைகுண்ட ராஜா, தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், காங்கிரஸ் வடசென்னை- கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ். திரவியம், தொழிலதிபர்கள் மாரிதுரை, செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி போஸ், யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், பா.ஜ.க. அன்புராஜ், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் பழனிசங்கர், மாவட்டச் செயலாளர் கணபதி,

    பனங்காட்டு படை கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்தன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா, திமுக நகரச் செயலாளர் நெல்சன், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், நகரத் தலைவர் தாமஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா,சுந்தரம், சுபாஷ், சமக.நகர செயலாளர் ஜெயபாலன் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சுரேஷ் சொக்கலிங்கம் மயில்,சிலை அமைப்புக் குழு அலெக்ராஜா, நிக்சன், செந்தில், அருமைராஜ், தமிழரசன், ஆசீர் சாம்சன், குமார், சதன்ராஜ், அமரா வதி ஜெகன், ஜெயபால், தங்க ராஜ், மார்க்கெட் சைமன், ரமேஷ் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். பர்வீன்ராஜ் நன்றி கூறினார்.

    • பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-
    • கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-

    கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.

    கொள்முதல் மையங்கள் உணவு தானியங்களை விலைக்கு வாங்கும்பொழுது இழப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஒரு கவலைக்குரிய செய்தி ஆகும். துரதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மழைக் காலங்களில் ஆயிரக்கணக்கில் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் குவிக்கப் பட்டுள்ளன.

    கொள்முதல் மையங்களில் குறைந்த செலவில் கொட்டகைகளை நிறுவுவதன் மூலம் இத்தகைய இழப்பை எளிதில் தவிர்க்கலாம். இதன் மூலம் அரசுக்கு அதிக நிதிச்சுமை இல்லாமல் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும்.

    எனவே,கொள்முதல் மையங்களில் சேமிப்பு வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு மூலம் கிடங்குகளையும் குளிர்பதனக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான். .
    • மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆர்.நடராஜன் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீராணம்பாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை பாா்வையிட்டு,பெண் தொழிலாளா்களிடம் பணிகள், ஊதியம் மற்றும் அவா்களது குறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

    அப்போது அவா் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறாா்கள் என்பதை அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் தொடக்கியுள்ளேன்.

    இடுவாய் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் மறுக்கப்படாமல் வழங்குவதுடன், நிா்ணயிக்கப்பட்ட ஊதியமும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான்.

    அதே வேளையில் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.அதேபோல மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.ஆகவே வரும் மக்களவை கூட்டத்தொடரில் 100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை, மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்படும் என்றாா்.  

    • அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது.
    • ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் கோவை எம்.பி. நடராஜன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கேத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கேத்தனூர் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் மருத்துவ படிப்பு படிக்க தனி இட ஒதுக்கீடு மற்றும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு கல்லூரி மேல்படிப்புக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பால் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர் அப்பள்ளிகளில் இருந்து தங்களது குழந்தைகளை விடுவித்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதனால் அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். அதே போல் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தொகையை உயர்த்தி வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார், ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால், ஒன்றிய கவுன்சிலர்கள் ஸ்ரீ பிரியா புருஷோத்தமன்,லோகு பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.

    • ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
    • சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பணித்தளத்தில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.பின்னர் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இதில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,திருப்பூர் தெற்கு தாசில்தார்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

    இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி,மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிக்கு இடவசதி, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடவசதி, ஆய்வுகூடம் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
    • பள்ளி தலைமையாசிரியர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது

     வீரபாண்டி :

    திருப்பூர் மாநாகராட்சி 54வது வார்டு மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கு இடவசதி, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடவசதி, ஆய்வுகூடம் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. பின்பு பள்ளி தலைமையாசிரியர் சார்பில் ஒரு மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி1927ம் ஆண்டு தொடக்கபள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 1984ல் நடுநிலைப்பள்ளியாகவும் 2002ல் நடுநிலைப்பள்ளியாகவும் 2010ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. தற்பொழுது 1932 மாணவ மாணவிகள் உள்ளார்கள். கல்வி கற்பதற்கு 42 வகுப்பாறைகள் தேவைப்படுகிறது.ஆனால் 20 வகுப்பறைகள் மட்டுமே இருக்கிறது. மேலும் அறிவியல் ஆய்வு கூடமும் தேவைப்படுகிறது. மேலும் 22 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் மாணவ மாணவிகள் வகுப்பறையின்றி வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்று வருகிறார்கள்.

    மேலும் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் வருவாய் துறை மூலம் பெறப்பட்ட தகவலின்டி சுமார் 10ஏக்கர் நிலம் உள்ளது.இந்த இடம் பல்லடம் தாலுக்கா அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது.இந்த இடங்கள் பள்ளியிலிருந்து 1கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் அதன் அருகில் சுமார் 5 ஏக்கர் நிலம் பலவஞ்சிபாளையம் காளிகுமாரசுவாமி கோவிலின் டிரஸ்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தினை மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுவில் சொல்லப்பட்ட இடத்திற்கான ஆதாரங்களை கேட்டார். ஆதாரம் இருந்தால் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் பேசுவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி மண்டல தலைவர் பத்மநாபன்மற்றும் 54 -வது உறுப்பினர் சி. அருணாச்சலம், மற்றும் 53-வது உறுப்பினர் மணிமேகலை ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  

    • அரசு நிதிநிலை அறிக்கையில் அவினாசி நகரில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் கோரிக்கையை தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
    • நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி சொன்ன பொய்கள் அம்பலமாகும் என்று ஆ.ராசா எம்.பி., பரபரப்பு குற்றச்சாட்டு,

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையம் அருகில் வணிகவளாகம் அமைப்பதற்கு பூமிபூஜை நடந்தது இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து அவினாசி இஸ்மாயில் வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்து பேசுகையில், இந்த ஆண்டு அரசு நிதிநிலை அறிக்கையில் அவினாசி நகரில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் கோரிக்கையை தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இந்த வணிக வளாகம் தரைதளத்துடன் 2 மாடிகள் அமைய உள்ள இந்த வணிக வளாகத்தில் 36 கடைகள் வர உள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

    இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அக்னி பாத்திட்டத்தின் ஒரு முகம்தான் மக்களுக்கு தெரிந்துள்ளது. கோரமுகம் வேறுவிதமானது.அது விரைவில் வெளிவரும். அதை முறியடிக்க கூடிய அனைத்து ஆற்றலும் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது.விரைவில் அது பற்றி நாடாளுமன்றத்தில் எப்படிப்பட்ட நிலைப்பாடு எடுப்போம் என்பதை முதல்வர் அறிவுறுத்துவார்.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை எவ்வளவு, சராசரியாக வளரும் நாடுகளில் என்ன விலை, இந்தியாவில் என்ன விலை என்பதை வெப்சைட்டில் தேடிப்பார்த்தால் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி சொன்ன பொய்கள் அம்பலமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல.பத்மநாபன், அவினாசி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, அவினாசி நகர செயலாளர் கே.சி.பொன்னுசாமி, பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி, செயற்குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • செங்காந்தள் விதைகள் கிலோ 3 ஆயிரத்துக்கும் அதிகமாக விலைக்கு வாங்கப்பட்டது.
    • இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.

    தாராபுரம்

    திருப்பூர் மாவட்டம் மூலனூர்,தாராபுரம், வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக பரப்பளவில் செங்காந்தள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உற்பத்தியாகும் விதைகள் மூலம் முக்கிய உயிர் காக்கும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்த அதிக அளவில் கொள்முதல் செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப படுகிறது.

    இதனால் செங்காந்தள் விதைகள் கிலோ 3 ஆயிரத்துக்கும் அதிகமாக விலைக்கு வாங்கப்பட்டது. இடைத் தரகர்களின் ஆதிக்கத்தால் கடந்த இரு ஆண்டுகளாக 1500 ரூபாய்க்கு வாங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    செங்காந்தள் சாகுபடியை மத்திய அரசு மூலிகை பயிர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் விதைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்தநிலையில் விதைக்கான விலை நிர்ணயம் மற்றும் மூலிகை பயிர் பட்டியலில் செங்காந்தளை சேர்க்க வலியுறுத்தி சேலம் திண்டுக்கல் ஈரோடு பொள்ளாச்சி ஆகிய 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்,தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலும் பரவலாகவும் ஏனைய 12 மாவட்டங்களிலும் பயிரிடப்படும் பத்தாயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்படும் கண்வலி விதை விவசாயிகள் சீரான விலை இன்றி இடைத்தரகர்களால் தொடர்ந்து ஏமாறும் நிலை நீடித்து வருகிறது.

    ஆகவே, கண்வலி விதைக்கு நிரந்தர விலை நிர்ணயம் தேவை என்பதை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் மூலனூரில்,ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தலைமையில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு செங்காந்தள் விதை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கீழ்க்கண்ட கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன் வைக்கப்பட்டன. அவை கண்வலி விதை விவசாயத்தை அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிக்க வேண்டும். மேலும், வங்கிகள் மூலம் பொருளீட்டுக்கடன் பெறவும், பயிர் காப்பீடு செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கண்வலி விதைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 2,500 என நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.ஆண்டு தோறும் விவசாய பிரதிநிதிகள், வேளாண் துறை அலுவலர்கள், நிறுவனங்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தி, அதில் உற்பத்தி மற்றும் செலவினங்களை பொறுத்து விலை நிர்ணயம் செய்து, ஆண்டு முழுவதும் ஒரே விலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

    தேவையான நிதியை ஒதுக்கி ஒன்றிய அரசும், மாநில அரசும் அரசே கொள் முதல் செய்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளிடம் உள்ள கண்வலி விதையை இருப்பு வைத்துக் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் கடன் கொடுக்கவும், இரண்டுக்கு மேல் வைத்திருந்தால் குறைந்த வட்டியில் வைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ரூ.200 கோடி நிதியை கூட்டுறவு துறைக்கு ஒதுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து செங்காந்தள் விவசாயி பழ.ரகுபதி கூறுகையில், கடந்த பத்தாண்டு களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தமிழ்நாடு செங்காந்தள் விதை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக போராடி வருகிறோம். வேளாண் துறையில் இருந்தும், வருவாய் துறையில் இருந்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்பி வருகிறார்கள்.

    கடந்த 2020 இல் அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக இது குறித்து பேசியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக விவசாய பிரதிநிதிகளை அழைத்து வேளாண் துறையினர் முழு தகவல்களையும் திரட்டி கண்வலி விதை சாகுபடியை அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிக்க, அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு கடந்த நவம்பர் 2020 ல் மத்திய அரசுக்கு அனுப்பியும் உள்ளது. ஆனால் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறினார்.

    ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வரும் கூட்டத்தொடரில் இந்த சிக்கல்கள் குறித்து பேசி உரிய தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூட்டத்தில் உறுதியளித்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் இருந்து 13 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ததாகவும் அதில் 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
    புது டெல்லி:

    பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி. இடங்கள் காலியாகின்றன. இந்த 57 எம்.பி. இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் வரும் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் தற்போது மேல்சபை எம்.பி.க்களாக உள்ள டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (மூவரும்  தி.மு.க.) எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீத கிருஷ்ணன், ஏ.விஜயகுமார் (மூன்று பேரும் அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலம்  கடந்த 29-ந்தேதியுடன் நிறைவுபெற்றது.

    தமிழகத்தில் இருந்து இந்த 6 பேருக்கு பதில் புதிதாக 6 பேரை தேர்வு செய்ய ஜுன் 10-ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் 4 மேல்சபை எம்.பி. பதவிகளை பெற முடியும். அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அ.தி.மு.க.வில் இருந்து 2 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். 

    இந்நிலையில் தி.மு.கவுக்கு உள்ள 4 இடங்களில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர். கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. சார்பில்  சி.வி சண்முகம், தர்மர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். 

    இந்நிலையில் இந்த மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து 13 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ததாகவும் அதில் 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து மோடி 2-வது முறையாக இன்று பதவியேற்கிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட கோலாகல விழாவில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    மோடியுடன் மந்திரிகளும் பதவியேற்கிறார்கள். 50-60 பேர் வரை அவரது மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மந்திரி சபையில் இடம் பெற்ற ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், நிதின்தோமர், ஜே.பி.நட்டா, ஹர்ஸ்வர்தன், பாபுல் சுப்ரியோ ஆகியோர் மீண்டும் மத்திய மந்திரிகளாக பதவியேற்கிறார்கள்.

    உடல்நலம் சரியில்லாததால் அருண்ஜெட்லி மீண்டும் மந்திரியாக விரும்பவில்லை. இதை அவர் மோடியிடம் உறுதிப்படுத்தினார்.



    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழ்நாட்டில் மோசமான தோல்வியை தழுவியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தேனி தொகுதியில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரை பிரதமர் அலுவலகத்துக்கு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

    தமிழக பா.ஜனதாவுக்கு மற்றொரு இடம் ஒதுக்கப்படலாம் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
    ×