search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேத்தனூர்"

    • 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா,ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விட்டுள்ளார்.

    அந்தச் சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.இந்தநிலையில் வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்துகேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    நேற்று கேத்தனூரில் வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கி நிர்வாகம் தரப்பில் மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளனர் என தெரிவித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்குவந்தது. இதையடுத்து நேற்று மாலை கேத்தனூர் வங்கிக் கிளையில், பாரத் ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் புவனேஸ்வரி, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, உள்ளிட்ட அதிகாரிகள், வங்கி நகை மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், நகை மீட்பு இயக்கத்தினர், விவசாயிகள்பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் நகை மோசடியால் பாதிக்கப்பட்ட 584 பேருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டது. வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்களின் கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும் என்றும், வங்கியில் இருந்து நகை திருப்பி எடுத்தவர்களுக்கு, அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். 31ந் தேதி திங்கள்கிழமை முதல் டோக்கன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இத்தொகையை பெற ஆதார் கார்டு, இரண்டு போட்டோ, வங்கி ரசீது நகல் கொண்டு வர வேண்டும் என்று வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுத்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்திற்கும், பல்லடம் வருவாய் துறைக்கும், காவல் துறைக்கும் கேத்தனூர் வங்கி நகை மீட்பு இயக்கம் நன்றியை தெரிவித்துள்ளது.

    • அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது.
    • ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் கோவை எம்.பி. நடராஜன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கேத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கேத்தனூர் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் மருத்துவ படிப்பு படிக்க தனி இட ஒதுக்கீடு மற்றும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு கல்லூரி மேல்படிப்புக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பால் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர் அப்பள்ளிகளில் இருந்து தங்களது குழந்தைகளை விடுவித்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதனால் அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். அதே போல் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தொகையை உயர்த்தி வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார், ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால், ஒன்றிய கவுன்சிலர்கள் ஸ்ரீ பிரியா புருஷோத்தமன்,லோகு பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.

    • கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்..
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் (வயது57) என்பவர் வாடிக்கையாளர்களின் நகைகளை மோசடி செய்தார்.இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி அதிகாரிகள் தரப்பில், இழப்பீடு குறித்த தகவல்களை உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம் இன்னும் பதில் கிடைக்கவில்லை, வரும் ஜூலை30க்குள் இழப்பீடு குறித்த உறுதியான தகவல்கள் அளிக்கப்படும் என வங்கியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனை ஆட்சேபித்த வாடிக்கையாளர்கள் இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடந்தும் இழப்பீடு குறித்து எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உயரதிகாரிகளிடம் பேசுகிறோம், பேசுகிறோம் என்று காலதாமதம் செய்கின்றனர்.

    எனவே உடனடி நடவடிக்கை எடுத்து இழப்பீடு குறித்து அறிவிக்க வேண்டும். 584 பேருக்கு சமரச பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் அடகு வைத்த நகைகளை திருப்பிய 84 பேருக்கும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். நகை மோசடி பிரச்சனை தீரும் வரை வங்கி மேலாளரை இடமாற்றம் செய்யக்கூடாது. வரும் 30-ந்தேதிக்குள் இழப்பீடு குறித்த உறுதியான தேதியை அறிவிக்க வேண்டும் என வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் ( வயது 57) என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா, ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விடுவாராம்.

    அந்த சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்தநிலையில் வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்து வரும் ஜூலை.13ந்தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் நடைபெற்ற வங்கி மோசடியில் இழப்பீடு குறித்து இதுவரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. வங்கி நிர்வாகம் தொடர்ந்து இழப்பீடு குறித்து முறையான அறிவிப்புகளை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டி வங்கிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வருகிற 13 ந்தேதி காலை 10 மணிக்கு கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும். பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இப்படிக்கு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற பிறகு அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடு இருந்தது
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் (57) என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா,ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விடுவாராம். அந்தச் சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் நகைகடன் பெற்று விட்டு , திரும்பவும் நகைக்கடனை அடைத்துவிட்டு நகையை மீட்டு பார்த்தபோது அதில் அளவு குறைபாடு இருந்தது கண்டு சில விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புதிதாக நகை வாங்கும்போது குறிப்பிட்டிருந்த எடையும், கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற பிறகு அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என வங்கி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மோசடியால் பாதிக்கப்பட்ட 504 வாடிக்கையாளர்களிடம் சமரசத் தீர்வு ஏற்பட்டுள்ளது. 30 வாடிக்கையாளர்களிடம் இழப்பீடு வழங்குவதில் உடன்பாடு ஏற்படவில்லை, மேலும் 50 வாடிக்கையாளர்களிடம் சமரச பேச்சு நடத்த வேண்டியுள்ளது. உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கேத்தனூர் வங்கி நகை மீட்பு இயக்கத்தினர் கூறுகையில், வங்கியில் நடைபெற்ற நகை மோசடியால், வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளோம். விரைவாக இழப்பீடு வழங்க பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் இழப்பீடு குறித்து அறிவிக்க வேண்டும். தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
    • வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர்(57) வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பா–ளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நகை மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவா–ர்த்தை நடைபெற்றது கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 20-ம் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் கூறியதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை இந்த நிலையில் நேற்று 4 ம் முறையாக கேத்தனூர் எஸ்.பி.ஐ. வங்கியில் பேச்சுவார்த்தை நடைபெ–ற்றது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,கிளை மேலாளர் சுதாதேவி, வங்கி வழக்கறிஞர்கள், வாவிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலாமணி மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொ–ண்டனர். இதில் வங்கியில் நகை இழந்தவர்கள் கொடுத்த மனுவின் மீது விசாரணை செய்யப்பட்டு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மொத்தம் பெறப்பட்ட 574 மனுக்களில் 400 மனுக்கள் நகை மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீடு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது போக நகைகளை இன்னும் மதிப்பீடு மதிப்பீடு செய்யாமல் உள்ள 174 வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அழைத்து அவர்கள் நகையையும் மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த மனுக்களில் இழப்பீடு தொகை திருப்தியில்லாத 32 வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பி அவர்கள் ஒப்புக் கொள்கின்ற நகை மதிப்பீட்டை நிர்ணயம் செய்யவேண்டும்.நகை மோசடி நடந்த நாளிலிருந்து மார்ச்சிலிருந்நு இன்று வரை வங்கியில் உள்ள நகைகளுக்கு வட்டி வசூலிக்க கூடாது 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கவேண்டும். காலதாமதம் செய்தால் போராட்டம் நடத்தப்படும் வாடிக்கையாளர்கள் தரப்பில் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். முன்னதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வங்கி நிர்வாகத்திடம் உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    ×