search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை மோசடி விவகாரம் - கேத்தனூர் வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகை
    X

    போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களடிம் பேச்சுவார்த்தை நடைபெற்ற காட்சி.

    நகை மோசடி விவகாரம் - கேத்தனூர் வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகை

    • கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்..
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் (வயது57) என்பவர் வாடிக்கையாளர்களின் நகைகளை மோசடி செய்தார்.இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி அதிகாரிகள் தரப்பில், இழப்பீடு குறித்த தகவல்களை உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம் இன்னும் பதில் கிடைக்கவில்லை, வரும் ஜூலை30க்குள் இழப்பீடு குறித்த உறுதியான தகவல்கள் அளிக்கப்படும் என வங்கியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனை ஆட்சேபித்த வாடிக்கையாளர்கள் இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடந்தும் இழப்பீடு குறித்து எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உயரதிகாரிகளிடம் பேசுகிறோம், பேசுகிறோம் என்று காலதாமதம் செய்கின்றனர்.

    எனவே உடனடி நடவடிக்கை எடுத்து இழப்பீடு குறித்து அறிவிக்க வேண்டும். 584 பேருக்கு சமரச பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் அடகு வைத்த நகைகளை திருப்பிய 84 பேருக்கும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். நகை மோசடி பிரச்சனை தீரும் வரை வங்கி மேலாளரை இடமாற்றம் செய்யக்கூடாது. வரும் 30-ந்தேதிக்குள் இழப்பீடு குறித்த உறுதியான தேதியை அறிவிக்க வேண்டும் என வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×