search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iduvai"

    • சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது.
    • டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

    மங்கலம் :

    மங்கலம் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் இருந்து சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இது குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளதாகவும்,பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது எனக்கூறியும் இடுவாய் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக இந்த பகுதியில் இருந்து அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இடுவாய் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக்கடையை இடுவாய் பகுதியில் இருந்து மாற்றி சின்னக்காளிபாளையம் ரோட்டில் பொம்மங்காடு என்ற பகுதியில் அமையவிரு ப்பதாக தெரிகிறது. மது கடை கட்டிடத்திற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கார்டன், திருமலை கார்டன், ஜி.என். கார்டன், செந்தில்நகர், பாப்பாங்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் இடுவாய் ஊராட்சி-அண்ணாமலைகார்டன் பஸ்நிறுத்தம் அருகே பந்தல் அமைத்து ஒருநாள் மாபெரும் அடையாள உண்ணாவிரத ப்போராட்டத்தை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளனர். இதில் பொதுமக்கள் , குழந்தைகள், பெண்கள், கருப்புபேட்ஜ் அணிந்து குடியிருப்பு பகுதிக்குள் குடி எதற்கு, விளைநிலங்கள் வீணாப்போக விடமாட்டோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி உண்ணா விரதப்போ ராட்டத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து உண்ணாவிரதப்போ ராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது; சின்னக்காளிபாளையம் அதிகளவில் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு வெங்காயம், புகையிலை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால் பிளாஸ்டிக் கவர்கள், மதுபாட்டில்கள், போன்றவற்றால் விவசாய நிலங்கள் பாழ்படும்.மேலும் அண்ணாமலை கார்டன், திருமலைகார்டன், ஜி.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடுவாய் பகுதியில் இருந்து சின்னக்காளிபாளையம் செல்லும் ரோட்டில் பொம்மங்காடு பகுதியில் மதுக்கடை அமைக்க மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகளை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி, கண்டன உரையாற்றினர்.

    மங்கலம்  :

    திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சியில் பா.ஜ.க மற்றும் இடுவாய் ஊர்ப்பொதுமக்கள் இணைந்து இடுவாய் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சி.பி.சுப்பிரமணியம்,திருப்பூர் வடக்கு மாவட்ட தொழில் பிரிவு துணைத்தலைவர் ஐ.ஈ.டி.சி.விநாயகமூர்த்தி ,திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் தெற்கு ஒன்றியத்தின் பொதுச்செயலாளர்கள் தேன்மொழி ,சம்பத்குமார், ஓ.பி.சி அணி தெற்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் கந்தசாமி, தெற்கு ஒன்றிய இளைஞர்அணி தலைவர் ராஜ்குமார், இடுவாய் பகுதி தலைவர் செகமலையப்பன், மங்கலம் பகுதி தலைவர் ரகுபதி ,இடுவாய் பா.ஜ.௧ நிர்வாகி சின்னச்சாமி, இடுவாய் பகுதி மூத்த நிர்வாகி மு.பழனிச்சாமி, சமூக ஊடகபிரிவு மாவட்ட தலைவர் ராகேஸ்பாண்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன்,கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,மாநில மகளிரணி செயலாளர் சுதாமணி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ,கண்டன உரையாற்றினர்.

    • செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
    • காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த இடுவாய் பாரதிபுரம் பிரிவில் உள்ள செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.இந்தப் பணிகள் அனைத்து நிறைவடைந்ததைத் தொடா்ந்து கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.

    முன்னதாக 4-ந்தேதிஅதிகாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதலும், காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தீா்த்தக்குடம் எடுத்தலும், இரவு 9 மணிக்கு விமான கோபுர கலசம் நிறுவுதலும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

    • ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
    • சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பணித்தளத்தில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.பின்னர் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இதில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,திருப்பூர் தெற்கு தாசில்தார்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

    இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி,மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×