search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor Stores"

    • வழக்கமாக மது வாங்க வரும் மது பிரியர்கள் கடை அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்‌.
    • கடந்த தேர்தலின் போது மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கி வருகின்றனர்.

    தொண்டர்கள் மது பாட்டில் வழங்கினால் மட்டுமே பிரசாரத்திற்கு வர முடியும் என கராராக கூறி விடுகின்றனர்.

    பிரசாரத்திற்காக மதுபானங்களை வாங்கி அள்ளி சென்று விடுகின்றனர். இதனால் மதியத்திற்குள் மதுபாட்டில்கள் விற்று தீர்ந்து விடுகின்றன.

    குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் விற்பனை இலக்கை எட்டியவுடன் மதியத்திற்கு மேல் கடை ஊழியர்கள் மது கடையை அடைத்து விட்டு செல்கின்றனர்.

    வழக்கமாக மது வாங்க வரும் மது பிரியர்கள் கடை அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    ஆந்திராவில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.70 கோடிக்கு மது விற்பனை ஆகிறது.

    கடந்த தேர்தலின் போது மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது. இதனால் மது கடை நடத்துபவர்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து இரவு வரை விற்பனை செய்தனர்.

    தற்போது மது கடைகள் அரசு வசம் உள்ளதால் தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகளுடன் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

    • சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது.
    • டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

    மங்கலம் :

    மங்கலம் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் இருந்து சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இது குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளதாகவும்,பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது எனக்கூறியும் இடுவாய் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக இந்த பகுதியில் இருந்து அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இடுவாய் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக்கடையை இடுவாய் பகுதியில் இருந்து மாற்றி சின்னக்காளிபாளையம் ரோட்டில் பொம்மங்காடு என்ற பகுதியில் அமையவிரு ப்பதாக தெரிகிறது. மது கடை கட்டிடத்திற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கார்டன், திருமலை கார்டன், ஜி.என். கார்டன், செந்தில்நகர், பாப்பாங்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் இடுவாய் ஊராட்சி-அண்ணாமலைகார்டன் பஸ்நிறுத்தம் அருகே பந்தல் அமைத்து ஒருநாள் மாபெரும் அடையாள உண்ணாவிரத ப்போராட்டத்தை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளனர். இதில் பொதுமக்கள் , குழந்தைகள், பெண்கள், கருப்புபேட்ஜ் அணிந்து குடியிருப்பு பகுதிக்குள் குடி எதற்கு, விளைநிலங்கள் வீணாப்போக விடமாட்டோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி உண்ணா விரதப்போ ராட்டத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து உண்ணாவிரதப்போ ராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது; சின்னக்காளிபாளையம் அதிகளவில் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு வெங்காயம், புகையிலை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால் பிளாஸ்டிக் கவர்கள், மதுபாட்டில்கள், போன்றவற்றால் விவசாய நிலங்கள் பாழ்படும்.மேலும் அண்ணாமலை கார்டன், திருமலைகார்டன், ஜி.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடுவாய் பகுதியில் இருந்து சின்னக்காளிபாளையம் செல்லும் ரோட்டில் பொம்மங்காடு பகுதியில் மதுக்கடை அமைக்க மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகளை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

    • புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர்.
    • இதனை தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

    பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தவாறு அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் முயற்சியால் 1000 பாப்ஸ்கோ தொழிலாளர்களின் வங்கி கணக்கில் 3 மாதம் சம்பளம் செலுத்தப்பட்டது.இதனையடுத்து உறுதி அளித்தவாறு தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்த அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமாரை ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் சேது செல்வம், மற்றும் ஊழியர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

    அப்போது, பாப்ஸ்கோவில் உள்ள 33 மதுபான கடை உரிமங்களை டெண்டர் முறையில் ஏலம் விட்டு 2 மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வ தென்றும், ஊழியர்கள் ஊதியம் பட்டுவாடா செய்வது, அனைத்து கடன்களையும் தீர்ப்பது என அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் உறுதி அளித்தார்.

    • கடலூர் மாவட்டத்திலிருந்து தென் பெண்ணையாற்றில் நீந்தி இங்கு வந்து மதுபிரியர்கள் மது குடித்து விட்டு செல்கிறார்கள்.
    • பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் 11 மதுக்கடை மற்றும் சாராயக்கடைகள் இருந்து வருகிறது.

    புதுச்சேரியின் நெற்கள ஞ்சியமாக விளங்கும் பாகூர் பகுதி தற்போது மது பார்களின் களஞ்சியமாக மாறியுள்ளது. கடலூர் மாவட்டத்தை ஒட்டி பாகூர் பகுதி இருந்து வருவதால், கடலூர் பகுதி மது பிரியர்களுக்கு ஏதுவாக மதுக்கடைகள், சாராயக்கடை. கள்ளுக்கடைகள் ஏராளமாக இங்கு உள்ளன.

    கடலூர் மாவட்டத்திலிருந்து தென் பெண்ணையாற்றில் நீந்தி இங்கு வந்து மதுபிரியர்கள் மது குடித்து விட்டு செல்கிறார்கள்.

    இங்குள்ள மதுக்கடைகளை நகைக்கடை போல அலங்கரித்து, மது பிரியர்களை உற்சாகப்படுத்திய உள்ளனர்.

    மேலும் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களை அறிவித்து விருகின்றனர். குறிப்பாக பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் 11 மதுக்கடை மற்றும் சாராயக்கடைகள் இருந்து வருகிறது.

    எவ்வளவு கடைகள் வந்தாலும் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனால் பல சிறு, சிறு திண்பண்டம் கடைகள் உருவாகி வருகிறது. தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறைந்த விலையில் புதுவை பகுதியில் மது கிடைப்பதாலும் பலவகையான மது கிடைப்பதாலும் கூட்டாளிகளுடன் மது வாங்கி விலை நிலத்திலும் காலிமனை பிரிவிலும் குடித்துவிட்டு அங்கேயே பாட்டிலை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.

    இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் நன்கு விளைந்த நிலங்களை மனைக்காக விற்பது அல்லது விவசாயத்தை நிறுத்தி காலி நிலமாக வைத்துள்ளனர்.

    • இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கும், குடியிருப்போர்களுக்கும் இடையூறாக குடியிருப்புக்குமத்தியில் புதிதாக மதுபான கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது,
    • புதுஆற்று இரு கரையிலும் தேவையான அளவில் மிள்விளக்குகள் பொருத்த வேண்டும்

    தஞ்சாவூர்:

    தஞ்சை சாந்தபிள்ளை கேட் கல்லணைக்கால்வாய் மேல்கரையில் அனைத்தி ந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாதர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

    இதற்கு கிளை தலைவர் அம்பிகா தலைமை தாங்கினார். செயலாளர் சரஸ்வதி, பொரு ளாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி சங்க கொடியேற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கும், குடியிருப்போர்களுக்கும் இடையூறாக குடியிருப்புக்குமத்தியில் புதிதாக மதுபான கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது, புதுஆற்று இரு கரையிலும் தேவையான அளவில் மிள்விளக்குகள் பொருத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாநகர செயலாளர் வசந்தி, மாநகர தலைவர் புனிதா, மாநகர பொருளாளர் பைந்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×