search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspetcion"

    • ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
    • சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பணித்தளத்தில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.பின்னர் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இதில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,திருப்பூர் தெற்கு தாசில்தார்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

    இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி,மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூா் மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 88.46 சதவீதமாகும்.
    • அடுத்த ஆண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 357 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 14,804 மாணவா்கள், 14, 827 மாணவிகள் என மொத்தம் 29,631 போ் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா்.

    இதில்12,459 மாணவா்கள், 13,753 மாணவிகள் என மொத்தம் 26,212 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.இதில், மாணவா்கள் 84.16 சதவீதம், மாணவிகள் 92.76 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.திருப்பூா் மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 88.46 சதவீதமாகும்.

    மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 128 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. திருப்பூா் கல்வி மாவட்டமானது மாநில அளவில் 30 வது இடத்தைப் பிடித்தது. முதலிடத்தில் இருந்து 30 வது இடத்துக்கு சரிவடைந்தது. திருப்பூா் மாவட்டமானது கடந்த 2018 ம் ஆண்டு 10-ம்வகுப்பு பொதுத் தோ்வில் 97.18 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 7 -வது இடத்தைப் பிடித்திருந்தது. இதைத் தொடா்ந்து, 2019 ஆம் ஆண்டில் 98.53 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தது. இந்நிலையில் கொரோனா தொற்றால் 2020, 2021 ம் ஆண்டில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போதைய பொதுத்தோ்வில் 10-ம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி விகிதமானது கடந்த 2019 ம் ஆண்டைக்காட்டிலும் 10.07 சதவீதம் சரிவடைந்துள்ளதுடன் மாநில அளவில் 29 இடங்கள் பின்தங்கி 30-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

    இது குறித்து கலெக்டர் எஸ்.வினீத் கூறியதாவது :-

    10-ம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் 30 வது இடமும், பிளஸ்- 2 பொதுத் தோ்வில் மாநில அளவில் 7 -வது இடத்தையும் திருப்பூா் பிடித்துள்ளது. 10-ம்வகுப்பு பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது தொடா்பாக பள்ளிகள் வாரியாக ஆய்வுகள் நடத்தப்படும். இதன் பின்னா் அடுத்த ஆண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

    ×