search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டப்பணிகள்"

    • ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    நாகர்கோவில்:

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூத்தூர், நடைக்காவு, சூழால், வாவறை, முஞ்சிறை, பைங்கு ளம், விலாத்துறை ஆகிய

    ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய சுகாதார கட்டிடம் அமைக்கும் பணியையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியையும், 15-வது நிதிக்குழு 2023-24 திட்டத்தின் கீழ் தூத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகில் பவர் பிளாக் அமைத்தல் ஆகிய பணிகளையும், நடைக்காவு ஊராட்சி க்குட்பட்ட வாழனூர் பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பில் காஞ்சிரக்கோடு முதல் சாத்தன்கோடு வரையுள்ள கால்வாய்களை துர்வாரும் பணியையும், சூலால் ஊராட்சிக்குட்பட்ட சட்டமன்ற உறு ப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.24.70 லட்சம் மதிப்பில் வெங்கஞ்சி அரசுதொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து, வாவறை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2022-23-ன் கீழ் ரூ.13.25 லட்சம் மதிப்பில் மணலி முதல் பள்ளிக்கல் வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், முஞ்சிறை ஊராட்சிக்குட்ப்பட்ட பார்த்திவபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.13.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளும்,

    பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் குரங்கினார்விளை முதல் முள்ளகிரிவிளை வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், விலாத்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் தையல் எந்திர அறை கட்டும் பணி யினையும், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், நெல்லிகாவிளை பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், டேவிட், ஊராட்சி மன்ற தலைவர்கள் லைலா (தூத்தூர்), மெற்றில்டா, உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டனர்.

    கோபாலபுரம் ஊராட்சி யில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித்திட்டம், கூடங்குளம் அனல் மின் நிலைய சமூகபொறுப்பு நிதியின் கீழ் ரூ.12.80 லட்சம், ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் ரூ.5.80 லட்சம் ஆக மொத்தம் ரூ.18.60 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி குழந்தை கள் மையத்தினை அவர்கள் பார்வையிட்டனர்.

    ேமலும் காரீப் முன் பருவத்திற்கான பயிற்சி பெற்ற விவசாயியின் நிலத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரில், ஊடு பயிராக பயிரிடப்பட்ட உளுந்து மற்றும் துவரை பயிர்களை ஆய்வுசெய்தனர்.ராமனுஜபுரம் ஊராட்சியில் கொண்டிசெட்டி ஊரணியில் ரூ.13.96 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மற்றும் குளியல் படித்து றையை பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
    • 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.25.6 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.25.6 லட்சம் மதிப்பில் வெங்கிட்டாபுரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், மற்றும் நாசுவம்பாளையம் அருகே உள்ள சுகாதார வளாகம் கட்டுதல், வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலக முன்பகுதி தரைத்தளத்திற்க்கு பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அமைக்கப்படும் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.பி பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், அதிமுக., தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.24 லட்சம் மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
    • துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 வார்டு எண்.23 தாகூர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர்கள் ஓய்வு அறை, வார்டு எண்.24 செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் வீதி, ராஜாஜி நடுநிலைப் பள்ளியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    இவற்றை வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் பிரவீன்குமார், எம்.எல்.ஏ. கோ.தளபதி ஆகியோர் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து மண்டலம் 2 வார்டு எண்.27 செல்லூர் அகிம்சாபுரம் சிவகாமி தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு மைய கட்டிடம், வார்டு எண்.35 அண்ணாநகர் நியூ எல்.ஐ.ஜி.காலனி சிறுவர் பூங்காவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகியவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர்சி வசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா அமைச்சர் நேரில் ஆய்வு
    • படகு இல்லத்தை சுற்றிலும் தொங்கு பாலம், ஜிப் சைக்கிளிங், பங்கீ ஜம்பிங், ரோலா் கோஸ்டா்போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன

    ஊட்டி, 

    ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன் நேரடியாக ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே இங்குள்ள சுற்றுலாத் தலங்களை பயணிகள் மேலும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு வளா்ச்சிப் பணிகளை மேம்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடமாக படகு இல்லம் உள்ளது. எனவே அங்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் பல்வேறு பொழுதுபோக்கு சாகச சுற்றுலாவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக தற்போது படகு இல்லத்தை சுற்றி உள்ள பகுதியில் மாபெரும் ஊஞ்சல், தொங்கு பாலம், ஜிப் சைக்கிளிங், பங்கீ ஜம்பிங், ரோலா் கோஸ்டா், குடில்கள், மர வீடு, வாகன நிறுத்தம் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் குணேஸ்வரன், உதவி செயற்பொறியாளா் குணசேகரன், ஊட்டி படகு இல்ல மேலாளா் சாம்சன் கனகராஜ், உதவி சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

    திருப்பூர்,ஆக.13-

    திருப்பூா் மாவட்டம் பல்லடம், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியங்கள், சாமளாபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக சாமளாபுரம் பேரூராட்சி, பல்லடம் மற்றும் பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றும் வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், குடிநீா் விநியோகம், சாலை வசதி, தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • ராமநாதபுரத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • இதில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 17, 18-ந்தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பேசுகையில், முதல்-அமைச்சர் வருகிற 18-ந்தேதி மண்டபத்தில் நடைபெற உள்ள மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    இதில் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மீன்வளத்துறை மற்றும் பிற துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தொடர்புடைய துறைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், வளர்ச்சி முகமை முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) அபிதா ஹனிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கினார்.
    • திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி, ஜோத்தியம்பட்டி ஊராட்சி, கொக்கம்பாளையம் ஊராட்சி மற்றும் நந்த வனம்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கினார். காங்கேயம் வட்டம் ஊதியூர் மற்றும் வட சின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் கலைஞர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி வெங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் அறை கட்டடத்தினையும், வெங்கிபாளையத்தில் ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் வடிகால்அமைக்கும் பணிகளையும், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீ ழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் ஜோத்தியம்பட்டி ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டடத்தினையும், என மொத்தம் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    சூரிய நல்லூர் ஊராட்சி, வெங்கிபாளையம் நால்ரோடு பகுதியில் கலைஞர்மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கியும், காங்கேயம் வட்டம், ஊதியூர் மற்றும் வட சின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், செங்கோடம்பாளையத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஷ்குமார், சுரேஷ்குமார், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • திருச்சுழி தொகுதியில் ரூ. 10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • காரியாபட்டி ஒன்றியத்திலும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் குச்சம் பட்டி புதூரில் நெடுஞ் சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 18 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் திருச்சுழி - காரியாபட்டி சாலையில் இருந்து குச்சம்பட்டி புதூர் குண்டாற்றில் 10 தூண்களுடன் கூடிய சுமார் 9 கண்கள் கொண்ட புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அதே போன்று திருச்சுழி ஒன்றியம் வடக்கு நத்தம் சாலையில் ரூ.2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.மேலும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பையூர் கிராமத்தில் சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப் பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அரும்பணி யையும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அடிக் கல் நாட்டி தொடங்கி வைத் தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை யும், மக்களை தேடி மருத்து வம் திட்டத்தின் கீழ் பயன் பெறும் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் அமைச்சர் தங்கம் தென்ன ரசு வழங்கினார்.

    காரியாபட்டி ஒன்றியத் தில் சுமார் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்ட பணி களையும் தொடங்கி வைத் தார். இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமை தாங்கினார். நெடுஞ்சா லைத்துறை கோட்டப்பொ றியாளர் முரளிதர், அருப்புக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் கணேசன், நெடுஞ்சா லைத்துறை ஊரக சாலை உதவி பொறியாளர் வெங்கடேஷ், திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுத் தம்பி, நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர்போஸ்த் தேவர், தங்க தமிழ்வாணன், நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது
    • இந்த தகவலை நகராட்சி தலைவர் சகுந்தலா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம் பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் பல கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    ரூ.3 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை, ரூ.1.கோடியே 50 லட்சம் மதிப்பில் வார்டுகளில் போர்வெல் அமைத்தல், ரூ.4 கோடி மதிப்பில் தார்சாலை, ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைத்தல், ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள், சலவை தொழிலாளர்களின் வசதிக்காக 10 லட்சம் மதிப்பில் நீர்நிலை தொட்டி அமைத்தல், உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் ரூ. 8 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்கள் பொழுதுபோக்கிற்காக ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. உசிலம்பட்டி நகராட்சிக்கு ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கி தந்த முதல்வரின் நடவடிக்கை யால் உசிலம்பட்டி பகுதி புதிய உயரத்தை தொட்டுள்ளதாக நகராட்சி தலைவர் சகுந்தலா தெரிவித்தார்.

    • வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஏழா யிரம்பண்ணை கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்த இடத்தினையும், ஏழாயிரம் பண்ணையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை பார்வையிட்டார். பின்னர் மாணவர்களின் கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து, சங்கரபாண்டியபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கரபாண்டியபுரம் கிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.

    இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், வட்டாட்சியர் ரங்க நாதன், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான ஊரக வளர்ச்சி துறை பணிகள் குறித்தஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து பேசுகையில்,

    பொது மக்களிடம் வரி வசூல் செய்யும் போது ரொக்கமாக பெறாமல் ஆன்-லைன் முறையில் வசூல் செய்ய வேண்டும். தனிநபர் வீடு கட்டும் திட்டத்தில் பணிகள் தாமதம் இன்றி விரைவில் முடிக்க வேண்டும்.குளங்கள் சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மயானங்கள் கட்டும் பணிகளை அந்தந்த நிதி ஒதுக்கீடு காலத்திற்குள் முடிக்க வேண்டும், என்றார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், மண்டபம் பி.டி.ஓ., க்கள் முரளிதரன், நடராஜன், பங்கேற்றனர்.

    ×