search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayawati"

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காததால் மாயாவதிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே அணியாக போட்டியிட திட்டமிடப்பட்டது.

    ஆனால் மாயாவதியும், அகிலேசும் காங்கிரசை தங்கள் அணியில் சேர்க்க விரும்பவில்லை. இரு கட்சிகளும் தனியாக போட்டியிட்டாலே பெரும்பாலான இடங்களை கைப்பற்ற முடியும் என்று அவர்கள் இருவரும் கருதினார்கள்.

    எனவே காங்கிரசை கண்டு கொள்ளாமல் கூட்டணியில் இருந்து கழற்றி விட்டனர். காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் அணிகள் எதிர்பார்த்தபடி அங்கு வெற்றி அடையவில்லை.

    மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 64 இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றியது. 10 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 5 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வென்றது.

    சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இது படுதோல்வியாக கருதப்படுகிறது.

    இந்த அணி மட்டும் காங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் அங்கு தேர்தல் முடிவு மாறி இருக்கும் என்று இப்போது புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மாநிலத்தில் 6.3 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. அதிக இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சிக்கு 49.56 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு 38.62 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன.

    காங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் இந்த அணிக்கு 44.92 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கும். இதன் மூலம் மேலும் பல தொகுதிகள் இந்த அணிக்கு வந்திருக்கும். அதை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சிகள் கோட்டைவிட்டு விட்டன.

     


    காங்கிரஸ் ஓட்டை பிரித்ததால் 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. பாரபங்கி, பதான், பாந்தா, பஸ்தி, தாராக்ரா, மீரட், சுல்தான்பூர், சாந்த்கபீர்நகர், மச்லிசார், பிரோசாபாத் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் ஓட்டையும், பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி ஓட்டுக்களையும் கூட்டினால் பாரதிய ஜனதாவை விட அதிகமாக உள்ளது.

    ஆனால் இந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் பாரதிய ஜனதாவின் இந்த வெற்றியை தடுத்திருக்க முடியும்.

    பாரபங்கி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் உபேந்திராசிங் ராவத் 1 லட்சத்து 10 ஆயிரத்து 140 ஓட்டுகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். புனியாவின் மகன் தனுச் 1 லட்சத்து 59 ஆயிரத்து 611 ஓட்டுக்கள் வாங்கினார். இங்கு 3 கட்சிகளும் கூட்டணி சேர்ந்திருந்தால் அவை வெற்றி பெற்றிருக்கும்.

    பதான் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் சங்கமித்ரா மவுரியா 5 லட்சத்து 11 ஆயிரத்து 352 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். சமாஜ்வாடி வேட்பாளர் தர்மேந்திர யாதவ் 4 லட்சத்து 92 ஆயிரத்து 898 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் இக்பால்சர்வாணிக்கு 51 ஆயிரத்து 947 ஓட்டுகள் கிடைத்திருந்தன. இங்கும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.

    பாந்தா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷியாம சரன் குப்தா 4 லட்சத்து 18 ஆயிரத்து 988 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். பா.ஜ.க. வேட்பாளர் ஆர்.கே. சிங் 4 லட்சத்து 77 ஆயிரத்து 926 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் பால்குமார் பட்டேல் 75 ஆயிரத்து 438 ஓட்டுக்கள் பெற்றார். இங்கும் 3 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால் 16,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். இப்படி பல தொகுதிகளில் இதே நிலை நிலவுகிறது.

    பகுஜன் சமாஜ் கட்சி திடீரென பல்டி அடித்துள்ளதால் சோனியா -மாயாவதி சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் உத்தரபிரதேசம் சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

    இதைத் தொடர்ந்து மாயாவதி இன்று (திங்கட்கிழமை) சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேச முடிவு செய்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. 8 கருத்து கணிப்புகளில் 7-ல் பாரதீய ஜனதாதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மாயாவதி மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் டெல்லிக்கு செல்லும் முடிவை தவிர்த்தார்.

    தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேவைப்பட்டால் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கலாம் என்று அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. இதனால் சோனியா- மாயாவதி சந்திப்பு தள்ளி போய் உள்ளது.

    இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர் சத்தீஸ் சந்திரமிஸ்ரா கூறுகையில், “டெல்லியில் இன்று எங்கள் கட்சி தலைவர் மாயாவதிக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை. டெல்லியில் யாரையும் சந்தித்து பேசும் திட்டமும் இல்லை. அவர் லக்னோவில்தான் இருக்கிறார்” என்றார்.

    மாயாவதி திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டதால் சந்திரபாபு நாயுடு முயற்சிகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாயாவதியை போனில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தெரிய வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே காங்கிரஸ் கட்சியை மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ராகுலின் செயல்பாடுகளில் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். என்றாலும் உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தனக்கு ஆதரவாக மாற்ற முடியும் என்று நினைத்தார்.

    ஆனால் கருத்து கணிப்புகளில் அவருக்கு சாதகமான வகையில் அதிக வெற்றி கிடைக்கும் என்று கூறப்படவில்லை. எனவே 23-ந்தேதி வரை காத்திருக்க அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வருமாறு சோனியா அழைப்பு விடுத்து இருந்தார். அந்த அழைப்பை ஏற்று டெல்லி செல்ல போவதாக பல்வேறு கட்சி தலைவர்களும் அறிவித்து இருந்தனர்.


    பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஓரணியாக ஜனாதிபதியை 23-ந்தேதி இரவே சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளால் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    எனவே 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி சந்திக்க எந்த திட்டமும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
    லக்னோ:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

    வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், டெல்லியில் இன்று மாயாவதி எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க மாட்டார் என பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அவருக்கு டெல்லியில் இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்புகளோ இல்லை என்றும், லக்னோவில்தான் இருப்பார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் மிஷ்ரா கூறியுள்ளார்.



    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வரும் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் லக்னோவில் மாயாவதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    இந்திரா காந்தியை போல பிரதமர் மோடி தோற்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவர் பாரதிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.

    இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நடந்தது போல இப்போது வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

     


    உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏமாற்றி விட்டனர். கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர்.

    பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நிகழ்ந்தது இப்போது வாரணாசிதொகுதியில் மீண்டும் நிகழுமா?

    குஜராத்தின் வளர்ச்சியை போல கிழக்கு உத்தரபிரதேசத்தின் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் தூண்டி விடுகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சரத்பவார் ஆகியோரை சந்தித்த ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    லக்னோ:

    பாரதிய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவை எதிர்க்கும் மாநில கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளன.

    இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில கட்சிகள் அனைத்தையும் காங்கிரசுடன் கை கோர்க்க வைக்க கடந்த மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இடையில் அவரது பேச்சுவார்த்தையில் சற்று தொய்வு ஏற்பட்டது.

    தற்போது அவர் மீண்டும் தனது வியூகத்தை தீவிரப்படுத்த தொடங்கி இருக்கிறார். நேற்று அவர் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினார். பிறகு ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் திரள செய்ய வேண்டும் என்ற இலக்குடன் சந்திரபாபு நாயுடு முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுகள் வெளியானதும் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    மாநில கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் தங்கள் அணிக்கு உடனடியாக வரும்? என்றும் அவர்கள் ஆலோசித்தனர். அதன் அடிப்படையில் அடுத்தக் கட்டமாக எந்தெந்த தலைவர்களை சந்தித்து பேச வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.



    ராகுலை சந்தித்த பின்னர் இன்று பிற்பகல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். இன்று மாலை லக்னோ வந்த அவர் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.



    அடுத்தகட்டமாக, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசினார். மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திரபாபு நாயுடு விரைவில் சந்திக்க உள்ளார்.
    காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க இன்று காலை ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவை எதிர்க்கும் மாநில கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளன.

    இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில கட்சிகள் அனைத்தையும் காங்கிரசுடன் கை கோர்க்க வைக்க கடந்த மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இடையில் அவரது பேச்சுவார்த்தையில் சற்று தொய்வு ஏற்பட்டது.

    தற்போது அவர் மீண்டும் தனது வியூகத்தை தீவிரப்படுத்த தொடங்கி இருக்கிறார். நேற்று அவர் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினார். பிறகு ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுகள் வெளியானதும் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    மாநில கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் தங்கள் அணிக்கு உடனடியாக வரும் என்றும் அவர்கள் ஆலோசித்தனர். அதன் அடிப்படையில் அடுத்தக் கட்டமாக எந்தெந்த தலைவர்களை சந்தித்து பேச வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.


    இன்று பிற்பகல் பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். அகிலேஷ் யாதவ், மம்தாபானர்ஜி ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் திரள செய்ய வேண்டும் என்ற இலக்குடன் சந்திரபாபு நாயுடு முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    மாநில அரசியலில் எதிரியாக உள்ள தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவையும் அவர் அழைத்து உள்ளார். இதன் மூலம் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு சந்திரபாபு நாயுடு அனைத்து வகையிலும் தன்னை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிகிறது.

    மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
    லக்னோ:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். 



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் மம்தா பானர்ஜியை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர்.
    நாட்டின் பிரதமராக இருப்பவர் அநீதி இழைப்பது அவரது பதவிக்கு பொருத்தமாக இருக்காது.

    மேற்கு வங்காளத்தில் இன்று இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. ஏனென்றால் மாலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டங்கள் நடைபெற உள்ளது. தடைவிதிக்க வேண்டும் என முடிவெடுத்த தேர்தல் ஆணையம், அதை காலை 10 மணி முதலே அறிவித்திருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தலை முன்னிட்டு சாலைகளில் பேரணிகள், மத தலங்களில் வழிபாடுகள் உள்ளிட்டவற்றுக்கு அரசியல் கட்சிகள் பெரிய தொகைகளை செலவிட்டு வருகின்றன. எனவே தேர்தல் ஆணையம் இந்த செலவையும் வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும்.



    பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்ட வேட்பாளர்கள் மத வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்வது போன்ற காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்.இதுகுறித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு இது கடைசி தேர்தல். இத்தேர்தலில் பா.ஜ.க. அரசு நிச்சயம் தோற்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
    மாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, அரசியல் ஆதாயத்துக்காக தன் மனைவியை கைவிட்டவர் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியிருந்தார். அதனால் அவருக்கு பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-



    சகோதரி மாயாவதி, பிரதமர் ஆவதில் உறுதியாக இருக்கிறார். அவரது ஆட்சிமுறை, நன்னெறி, பேச்சுத்திறன் ஆகியவை இதுவரை இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டன. மோடி பற்றிய அவரது தனிப்பட்ட தாக்குதல், அவர் பொது வாழ்க்கைக்கே தகுதியற்றவர் என்பதை வெளிக்காட்டி விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் மாயாவதி கட்சி வேட்பாளர்களும், அவரது கூட்டணி கட்சி வேட்பாளர்களும் தோல்வி முகத்தில் உள்ளனர். அதனால் அவர் அரசியல் மன அழுத்தத்தில் இருக்கிறார். அவர் பலவீனமாக உள்ளார். அவரது நினைவு மங்கிவிட்டது. இவையெல்லாம் அவரது அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.

    அவருக்கு அரசியல் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. கண்ணியம், வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடிப்பதுதான் அரசியல் ஊட்டச்சத்து சாப்பிடுவதற்கு சமம்.

    கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினால், அரசியல் ஆரோக்கியம் மேம்படாது. அவர் தனது நினைவுகளை புதுப்பிக்க வேண்டும்.

    மோடி, அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர். ஆனால், மாயாவதி தலித்துகளுக்காக எதுவுமே செய்யவில்லை. வரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் அதிகரிக்கும். தேர்தல் தோல்விக்கு பிறகு அது உச்சத்தை தொட்டு விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மோடி தனது மனைவியை தவிக்கவிட்டு ஓடியதுபோல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ? என பாஜகவினர் மனைவிகள் அஞ்சுவதாக மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பாஜகவில் இருக்கும் தங்களது கணவர்கள் பிரதமர் மோடியை நெருங்கும்போது அவர்களின் மனைவிகள் எல்லாம் அச்சப்படுவதாக எனக்கு தெரியவந்துள்ளது. மோடியை போலவே தங்களது கணவர்களும் நம்மை கைவிட்டு ஓடிப் போவார்களோ? என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.



    அரசியல் ஆதாயத்திற்காக கட்டிய மனைவியை கைவிட்ட மோடி மற்றவர்களின் சகோதரிகளுக்கும் மனைவிகளுக்கும் எப்படி மதிப்பளிப்பார்?

    எனவே, இதைப்போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டில் உள்ள பெண்கள் மோடியை போன்றவர்களுக்கு வாக்களிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இதுவே மோடியால் கைவிடப்பட்ட அவரது மனைவிக்கு நாம் செய்கின்ற மரியாதையாக இருக்கும்.

     தனது செய்தி குறிப்பில் மாயாவதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மிரட்டல் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati
    லக்னோ:

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பியான ஜோதிராதித்ய சிந்தியா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லோகேந்திர சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் திடீரென தேர்தலில் இருந்து விலகியதுடன், காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி மீது மாயாவதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதில் பாஜகவுக்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. குணா மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை காங்கிரஸ் அரசு கட்டாயப்படுத்தி, வாபஸ் பெற வைத்துள்ளது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி தனது சொந்த சின்னத்தில் தேர்தலை சந்தித்து காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும். அத்துடன், மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்.

    உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றாலும், பகுஜன் சமாஜ் கட்சி- சமாஜ்வாடி கூட்டணி வெற்றி பெறக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் சாதி மனப்பான்மை, குறுகிய மனப்பான்மை மற்றும் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

    குணா தொகுதியில் மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Mayawati
    உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் மகா கூட்டணி தேசத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார். #LokSabhaElections2019 #Modi #ModiCampaign
    கன்னாஜ்:

    உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்துகொண்டு, கன்னாஜ், எட்டாவா, பரூக்காபாத் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை சேர்ந்து அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த சந்தர்ப்பவாதிகள் அனைவரும் சேர்ந்து எதற்கும் உதவாத அரசைத்தான் அமைக்க  விரும்புகிறார்கள். இவர்களின் மந்திரம் முழுவதுமே சாதியைப் பற்றிப்பேசி, சாமானிய மக்களிடம் கொள்ளையடிப்பதுதான்.

    உண்மையில் சந்தர்ப்பவாதிகள் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி மிகப்பெரிய ஊழல் கூட்டணி. இவர்களின் நோக்கமே மக்களுக்கு பயன்தராத அரசை உருவாக்குவதுதான். எவ்வளவுதான் எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்தாலும் அவர்களால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது. எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள ஊழல் கூட்டணி தலைவர்கள் தங்களின் வாரிசுகளின் நலன்கள் குறித்துதான் நினைக்கிறார்களே தவிர, தேசத்தின் நலன் குறித்து கவலைப்படவில்லை. பாலகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் இவர்கள், பயங்கரவாதிகளுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்.

    கன்னாஜ் தொகுதியில் அம்பேத்கரை அவமதித்த சமாஜ்வாடி கட்சிக்காக பகுஜன் சமாஜ் கட்சி ஓட்டு கேட்கிறது. ஆட்சிக்கு வருவதற்காகவும் மோடியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும் பெகன்ஜி (மாயாவதி) மகிழ்ச்சியுடன் வாக்கு கேட்கிறார். 


    இவ்வாறு அவர் பேசினார்.

    4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. வரும் 29-ம் தேதி வாக்குப்பதிவு நடைபற உள்ளது. கன்னாஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #Modi #ModiCampaign
    ×