என் மலர்

    நீங்கள் தேடியது "Jaitley"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, அரசியல் ஆதாயத்துக்காக தன் மனைவியை கைவிட்டவர் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியிருந்தார். அதனால் அவருக்கு பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-



    சகோதரி மாயாவதி, பிரதமர் ஆவதில் உறுதியாக இருக்கிறார். அவரது ஆட்சிமுறை, நன்னெறி, பேச்சுத்திறன் ஆகியவை இதுவரை இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டன. மோடி பற்றிய அவரது தனிப்பட்ட தாக்குதல், அவர் பொது வாழ்க்கைக்கே தகுதியற்றவர் என்பதை வெளிக்காட்டி விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் மாயாவதி கட்சி வேட்பாளர்களும், அவரது கூட்டணி கட்சி வேட்பாளர்களும் தோல்வி முகத்தில் உள்ளனர். அதனால் அவர் அரசியல் மன அழுத்தத்தில் இருக்கிறார். அவர் பலவீனமாக உள்ளார். அவரது நினைவு மங்கிவிட்டது. இவையெல்லாம் அவரது அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.

    அவருக்கு அரசியல் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. கண்ணியம், வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடிப்பதுதான் அரசியல் ஊட்டச்சத்து சாப்பிடுவதற்கு சமம்.

    கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினால், அரசியல் ஆரோக்கியம் மேம்படாது. அவர் தனது நினைவுகளை புதுப்பிக்க வேண்டும்.

    மோடி, அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர். ஆனால், மாயாவதி தலித்துகளுக்காக எதுவுமே செய்யவில்லை. வரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் அதிகரிக்கும். தேர்தல் தோல்விக்கு பிறகு அது உச்சத்தை தொட்டு விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மத்திய-மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பயன் கிடைத்திருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #NoteBan #ArunJaitley #Demonetisation
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கம் போன்றவற்றை ஒழிப்பதற்காக, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் மேற்கொண்டது.

    பா.ஜனதா அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மிகப்பெரும் தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில் பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அதன் பயன்களை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவர் கூறியிருந்ததாவது:-



    பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், இதனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதாகவும் தவறான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

    அதிக அளவிலான பணத்தை கைப்பற்றுவது, இந்த நடவடிக்கையின் அங்கம் அல்ல. மாறாக அவற்றை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் சேர்த்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சம் ஆகும். குறிப்பாக பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் பரிமாற்றமாக மாறுவது முக்கியமாகும்.

    அந்தவகையில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் பணப்பரிமாற்றம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. இத்தகைய முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தால் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது.

    அதன்படி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 64 லட்சத்தில் (ஜி.எஸ்.டி.க்கு முன்) இருந்து 1.20 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சரக்கு மற்றும் சேவைகளின் உண்மையான நுகர்வுத்தன்மை அதிகரித்து, வரித்தளம் தற்போது அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் மறைமுக வரியும் அதிகரித்து உள்ளது.

    இது மத்திய-மாநில அரசுகளுக்கு மிகுந்த பயனை அளித்து இருக்கிறது. குறிப்பாக ஜி.எஸ்.டி.க்கு பிறகு ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் வரிவிதிப்பில் 14 சதவீதம் நிச்சய வளர்ச்சியை கண்டிருக்கின்றன.

    குறைவான வரி செலுத்துவோருக்கு ரூ.97 ஆயிரம் கோடி மற்றும் ஜி.எஸ்.டி. பங்களிப்போருக்கு ரூ.80 ஆயிரம் கோடி என ஆண்டுதோறும் வரிச்சலுகை வழங்கப்பட்ட பிறகும், வரி வசூல் அதிகரித்து இருக்கிறது. இதைப்போல நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகும் வரி வசூல் அதிகரித்து இருக்கிறது. வரித்தளம் விரிவடைந்து உள்ளது.

    இந்த தொகையை உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காகவும், பல்வேறு சமூக துறைகளிலுமே மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இப்படி பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டதால் 13 கோடி தொழில் முனைவோர் முத்ரா கடன்களை பெற்று இருக்கின்றனர். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டதுடன், ஒரு பதவி-ஒரே ஓய்வூதிய திட்டமும் இறுதியில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
    ×