search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி இன்று சந்திப்பு இல்லை- பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம்
    X

    காங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி இன்று சந்திப்பு இல்லை- பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம்

    டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி சந்திக்க எந்த திட்டமும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
    லக்னோ:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

    வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், டெல்லியில் இன்று மாயாவதி எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க மாட்டார் என பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அவருக்கு டெல்லியில் இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்புகளோ இல்லை என்றும், லக்னோவில்தான் இருப்பார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் மிஷ்ரா கூறியுள்ளார்.



    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வரும் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் லக்னோவில் மாயாவதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×