search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marxist Communist Party"

    2017-18ம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு ரூ.1000 கோடி வருவாய் கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது ஆண்டு வருவாய் கணக்கை காட்டவில்லை. #BJP #Congress #ElectionCommission
    புதுடெல்லி:

    தேசிய மற்றும் மாநில கட்சிகள் ஆண்டுதோறும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்துக்கு கணக்கு தெரிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் 2017-18ம் ஆண்டில் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு வருவாய் பெற்றன என்ற விபரம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. சமீபத்தில் தனது வருவாய் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதில் 2017-18ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு ரு.1000 கோடிக்கு வருமானம் கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள வருமானத்தில் பெரும்பகுதி பங்குகள் வெளியிடப்பட்டு திரட்டப்பட்டுள்ளது. பங்குகள் வெளியிட்டதின் மூலம் மட்டும் பா.ஜ.க.வுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் 222 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

    தேர்தல் பங்குகளை வெளியிட்டதின் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.210 கோடி வந்துள்ளது.

    மாயாவதி தலைமையில் இயங்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானம் ரூ.681 கோடியில் இருந்து ரூ.717 கோடியாக உயர்ந்துள்ளது.



    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆண்டு வருவாய் ரூ.262 கோடியில் இருந்து ரூ.291 கோடியாக அதிகரித்துள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு வருவாய் ரூ.104 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தா மற்றும் கட்டணம் மூலம் இந்த வருவாய் கிடைத்து இருப்பதாக கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. இந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு வருவாய் 40 சதவீதம் குறைந்துள்ளது.

    இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட 32 மாநில கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளின் ஆண்டு வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு 2017-18ம் ஆண்டில் எவ்வளவு பணம் கிடைத்தது என்று தெரியவில்லை. இன்னமும் காங்கிரஸ் கட்சி தனது ஆண்டு வருவாய் கணக்கை காட்டவில்லை. சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இன்னமும் கணக்கு காட்டவில்லை. #BJP #Congress
    பாலக்காடு அருகே செல்போனில் படம் பிடித்து மிரட்டி 2 குழந்தைகளின் தாயை கற்பழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொடக்காடு பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருப்பவர் விஜேஷ் (வயது 28).

    இவரது வீடு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது அதை நோட்டமிட்ட விஜேஷ் வீடு புகுந்து அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்துவிட்டார்.

    மேலும் அந்த பெண்ணை அவர் ஆபாசமாக செல்போனில் படம்பிடித்து வைத்துக்கொண்டார். அந்த ஆபாச காட்சியை காட்டி மிரட்டி கடந்த 6 மாதமாக அந்த பெண்ணை விஜேஷ் கற்பழித்து வந்துள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான பணமும் பறித்து உள்ளார்.

    தொடர்ந்து அவரது தொந்தரவு அதிகமானதால் அந்த பெண் அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜேஷ் செல்போனில் இருந்த ஆபாச காட்சிகளை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பினார். இது பற்றி அந்த பெண்ணிடம் கூறி தனக்கு பணம் தராவிட்டால் அந்த காட்சிகளை பேஸ்புக்கில் பரவவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்துபோன அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பாலக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய செல்போனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    மதுரையில் சாலை அமைக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மதுரையில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் சாலை வசதிகள் இல்லாததால், அவதியடைந்து வருகின்றனர்.

    மழை காலங்களில் மேலும் சாலைகள் சேதமடைந்து தண்ணீர் தேக்கும் குளங்களாக மாறி விடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

    மதுரை காளவாசல், செல்லூர், பழங்காநத்தம், பெரியார், காமராஜர் சாலை, தவிட்டு சந்தை, வில்லாபுரம், அவனியாபுரம், அண்ணாநகர், கே.கே.நகர் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலுமே சாலைகள் மோசமாக உள்ளன.

    செல்லூர் மார்க்கெட், அகிம்சாபுரம் மெயின் ரோடு, ஜான்சிராணிபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகள் போடுவதற்காக 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை சாலைகள் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் ஜல்லி கற்கள் ரோட்டில் சிதறி கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் நடக்க முடியாமல் அவதியடைகின்றனர். சாலை மேலும் சேதமடைந்து காணப்படுகின்றன.

    இதை கண்டித்தும் சாலை அமைக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    வீடுகள் வழங்கும் விவகாரம் தொடர்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி காந்திமார்க்கெட் அருகே கல்மந்தை காலனி உள்ளது. இந்த காலனியில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியம் மூலம்  64 நிரந்தர வீடுகள் கட்டித்தரப்பட்டன. மேலும் அப்பகுதியில் 130 தற்காலிக குடியிருப்புகள் அமைத்து  194 குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர்.

    இந்நிலையில் குடிசை மாற்று வாரியம் இந்த வீடுகளை அகற்றிவிட்டு ரூ.34 கோடி மதிப்பில் 182 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள்  கட்ட உள்ளது. எனவே இப்பகுதியில் குடியிருப்பவர்களை வீடுகளை காலி செய்ய  6 மாத கால அவகாசம் கொடுத்தது. 

    அதன் பேரில் காலிசெய்த வீட்டு உரிமையாளர்களுக்கு, புது வீடுகளை வழங்குவதற்காக அவர்கள் வீட்டின் முன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்  கொண்டனர். அதன் பிறகு  கடந்த 2 மாதங்களுக்கு பின்  வீடுகள் இடிக்கப்பட்டன.

    இதேபோல் செங்குளம்  காலனி மற்றும் ஜெயில் பேட்டை பகுதியில் வீட்டை காலி செய்த போது  அப்பகுதி மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

    அதேபோல் இப்பகுதி மக்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்,இப்பகுதியில் வசித்த 194 குடும்பங்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் டோக்கன் வழங்கவேண்டும், மேலும் போலியான முறையில் வீடு வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு  நடைபெறுவதாக தகவல்கள் பரவுகிறது. 

    எனவே இதில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு முன்பு இப்பகுதியில் வசித்தவர்களுக்கு வீடு வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 12-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர்  ராஜா, செயற்குழு ஜெயபால்,  ராமர் மற்றும் மணிமாறன் மற்றும் கல்மந்தை காலனி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை தாங்கினார். இதில் சிறிது தூரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். அப்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    ஜெயங்கொண்டத்தில் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உட்கோட்டை கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ரமேஷ், முத்துசாமி, குருநாதன், தியாகராஜன்,  காமராஜ், மீனா ஆகியோர்முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில்  மாவட்டசெய லாளர் மணிவேல்,ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகாராசன், இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் கோரிக்கைகள் பற்றி  பேசினார். 

    கூட்டத்தில் உட்கோட்டை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக  நிரப்ப வேண்டும், ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் திட்டங்களை கைவிடக்கோரியும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முதல் கட்ட நிதியாக ரூ.32 ஆயிரத்து500 யை  மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலனிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில்  நிர்வாகிகள் புகழேந்தி, மனோகரன், கெங்காசலம், இளைய பெருமாள், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
       
    இடைக்கட்டு கிளை செயலாளர் அன்பழகன் வரவேற்றார். முடிவில் புகழேந்தி நன்றி கூறினார்.
    வரம்பு மீறி செயல்படும் புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு மார்க்சிஸ்டு கம்யூ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவதற்கு பட்ஜெட்டிற்கான கோப்புகளை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவரும் கவர்னர் கிரண்பேடியின் அடாவடி செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. 

    புதுவையில் பொருளாதார மந்தம், வேலையின்மை, கடன் சுமை என அசாதாரன சூழ்நிலை ஏற்ப்பட்டு வரும் நிலையில் செயல் மக்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ளது.

    மத்திய பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மாநில கவர்னர்களை தனது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. இதனால் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுகின்றன. மாநில கவர்னர்களின் அத்துமீறிய செயல்பாடுகளால் கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

    புதுவையிலும் கவர்னர் மக்கள் ஆட்சியை புறந்தள்ளி போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் தன்னிச்சையாக வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார் தற்போது நடப்பாண்டிற்க்கான மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்க்கு உரியதாகும்.

    மேலும் கவர்னர் தன்னிச்சையாக 3.பா.ஜனதா தலைவர்களை நியமன உறுப்பினர்களாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அவசர அவசகரமாக இரவில் பதவி பிரமானமும் செய்து வைத்தார். இத்தகைய கீழ்த்தரமான அரசியல் மற்றும் ஜனநாயக படுகொலை செயல் புதுவையில் எப்போதும் நடந்ததில்லை.

    மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டு கவர்னர் மூலமாக மத்திய அரசிடம் அனுமதி பெறுவது தான் சட்டமும், நடைமுறையும் மரபுமாக இருந்து வருகிறது.

    ஆகவே, புதுவை காங்கிரஸ் அரசு மாநிலத்தின் உரிமை, மக்களாட்சியின் அதிகாரத்தை பாதுகாத்திட நியமன உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் உறுதியாக சட்டபடியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

    புதுவை மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரம், சுதந்திரமான, ஜனநாயக பூர்வமான செயல்பாடுகளுக்கு மாநில அந்தஸ்து பெறுவது தான் நிரந்தர தீர்வாகும். ஆகவே புதுவை மாநிலத்தின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாத்திட மாநில அந்தஸ்து பெறுவதற்கான முயற்ச்சியில் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை எதிர்ப்பது தொடர்பாக விவசாயிகள் சங்கம் அறிவித்த கறுப்பு கொடி போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துள்ளது. #GreenWayRoad
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழிச் சாலை என்ற பெயரில புதிதாக ஒரு சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    சாலைக்காக விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உட்பட இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

    ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், அரசு போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவி மிரட்டுவது, அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத அணுகு முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாளை (26-ந் தேதி) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னை வரையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழி சாலைத் திட்டம் ஒன்றை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த முற்பட்டுள்ளன. இதனால் ஐந்து மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளை நிலங்களும் குடியிருப்புகளும் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்படுபவர்களின் கருத்தை அறியாமலும், ஒப்புதலை பெறாமலும், பயமுறுத்தி பலவந்தப்படுத்தி நிலங்களைப் பறிப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது. மறுப்பு தெரிவிக்கும் மக்களை பொய் வழக்கு போட்டு கைது செய்கிறது. இந்த அடக்குமுறையைக் கண்டித்தும் நிலப்பறிப்பை எதிர்த்தும் 5 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி அறவழியில் போராடுவதென்று முடிவு செய்துள்ளனர். நாளை (26-ந்தேதி) நடைபெறும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GreenWayRoad
    ஆண்டிப்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்தனர். ஒன்றிய செயலாளர் ராமர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கடமலைக்குண்டு பகுதி யில் ஒன்றிய செயலாளர் மணவாளன் தலைமையில் மறியல் செய்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைதானார்கள்.

    போடியில் தேவர் சிலை முன்பு துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்தனர். இவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

    பழனி ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது தமிழக முதல்வர் பதவி விலக கோரி கோ‌ஷமிட்டனர்.

    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கன்னிவாடி பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் பழனிசாமி பதவி விலக கோரி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரை:

    தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    போலீசாரின் அராஜக செயலை கண்டித்து அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் போராட்டம், மறியல்கள் நடத்தி வருகின்றனர்.

    மதுரை பழங்காநத்தத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் ஆகியோர் பேசினர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழுவை ரத்து செய்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

    இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கீழையூரில் பூட்டி கிடக்கும் அரசு மருத்துவமனையை உடனே திறக்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூரில் பூட்டி கிடக்கும் அரசு மருத்துவமனையை உடனே திறக்க வலியுறுத்தியும், கீழையூர் ஊராட்சியில் உடனே 100 நாள் வேலையை தொடங்க கோரியும் கீழையூர் கடைத்தெரு நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், மாதர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் மல்கோத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பக்கிரிசாமி, ராஜேந்திரன், பன்னீர்செல்வம், தவமணி, செல்வராஜ், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்த தகவலறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிமணி, கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப் பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×