என் மலர்
செய்திகள்

2 குழந்தைகளின் தாயை கற்பழித்த கம்யூனிஸ்டு செயலாளர் கைது
பாலக்காடு அருகே செல்போனில் படம் பிடித்து மிரட்டி 2 குழந்தைகளின் தாயை கற்பழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொடக்காடு பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருப்பவர் விஜேஷ் (வயது 28).
இவரது வீடு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது அதை நோட்டமிட்ட விஜேஷ் வீடு புகுந்து அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்துவிட்டார்.
மேலும் அந்த பெண்ணை அவர் ஆபாசமாக செல்போனில் படம்பிடித்து வைத்துக்கொண்டார். அந்த ஆபாச காட்சியை காட்டி மிரட்டி கடந்த 6 மாதமாக அந்த பெண்ணை விஜேஷ் கற்பழித்து வந்துள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான பணமும் பறித்து உள்ளார்.
தொடர்ந்து அவரது தொந்தரவு அதிகமானதால் அந்த பெண் அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜேஷ் செல்போனில் இருந்த ஆபாச காட்சிகளை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பினார். இது பற்றி அந்த பெண்ணிடம் கூறி தனக்கு பணம் தராவிட்டால் அந்த காட்சிகளை பேஸ்புக்கில் பரவவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்துபோன அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பாலக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய செல்போனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொடக்காடு பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருப்பவர் விஜேஷ் (வயது 28).
இவரது வீடு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது அதை நோட்டமிட்ட விஜேஷ் வீடு புகுந்து அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்துவிட்டார்.
மேலும் அந்த பெண்ணை அவர் ஆபாசமாக செல்போனில் படம்பிடித்து வைத்துக்கொண்டார். அந்த ஆபாச காட்சியை காட்டி மிரட்டி கடந்த 6 மாதமாக அந்த பெண்ணை விஜேஷ் கற்பழித்து வந்துள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான பணமும் பறித்து உள்ளார்.
தொடர்ந்து அவரது தொந்தரவு அதிகமானதால் அந்த பெண் அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜேஷ் செல்போனில் இருந்த ஆபாச காட்சிகளை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பினார். இது பற்றி அந்த பெண்ணிடம் கூறி தனக்கு பணம் தராவிட்டால் அந்த காட்சிகளை பேஸ்புக்கில் பரவவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்துபோன அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பாலக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய செல்போனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
Next Story






