என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு மார்க்சிஸ்டு கம்யூ. கண்டனம்
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவதற்கு பட்ஜெட்டிற்கான கோப்புகளை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவரும் கவர்னர் கிரண்பேடியின் அடாவடி செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.
புதுவையில் பொருளாதார மந்தம், வேலையின்மை, கடன் சுமை என அசாதாரன சூழ்நிலை ஏற்ப்பட்டு வரும் நிலையில் செயல் மக்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ளது.
மத்திய பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மாநில கவர்னர்களை தனது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. இதனால் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுகின்றன. மாநில கவர்னர்களின் அத்துமீறிய செயல்பாடுகளால் கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
புதுவையிலும் கவர்னர் மக்கள் ஆட்சியை புறந்தள்ளி போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் தன்னிச்சையாக வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார் தற்போது நடப்பாண்டிற்க்கான மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்க்கு உரியதாகும்.
மேலும் கவர்னர் தன்னிச்சையாக 3.பா.ஜனதா தலைவர்களை நியமன உறுப்பினர்களாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அவசர அவசகரமாக இரவில் பதவி பிரமானமும் செய்து வைத்தார். இத்தகைய கீழ்த்தரமான அரசியல் மற்றும் ஜனநாயக படுகொலை செயல் புதுவையில் எப்போதும் நடந்ததில்லை.
மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டு கவர்னர் மூலமாக மத்திய அரசிடம் அனுமதி பெறுவது தான் சட்டமும், நடைமுறையும் மரபுமாக இருந்து வருகிறது.
ஆகவே, புதுவை காங்கிரஸ் அரசு மாநிலத்தின் உரிமை, மக்களாட்சியின் அதிகாரத்தை பாதுகாத்திட நியமன உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் உறுதியாக சட்டபடியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
புதுவை மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரம், சுதந்திரமான, ஜனநாயக பூர்வமான செயல்பாடுகளுக்கு மாநில அந்தஸ்து பெறுவது தான் நிரந்தர தீர்வாகும். ஆகவே புதுவை மாநிலத்தின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாத்திட மாநில அந்தஸ்து பெறுவதற்கான முயற்ச்சியில் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும்.
இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்