search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mallikarjun Kharge"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார்.
    • ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் எங்கு போட்டியிடுவார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    ஆனால் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்றாலும் உத்தரபிரதேசத்துக்கு செல்ல விரும்பாத அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடவே ஆர்வம் காட்டி உள்ளார்.

    சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் இந்த தடவை அந்த தொகுதியில் போட்டியிட அவர் விரும்பவில்லை.

    அதற்கு பதில் அவர் பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக முடிவு செய்துள்ளார். ராஜஸ்தான் அல்லது இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்சபை எம்.பி.யாக தேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

    முன்னதாக பிரியங்கா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி உயிரிழந்த அந்த தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

    அவரை தமிழகத்துக்கு கொண்டுவர காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவில் போட்டியிடுவதால் பிரியங்காவும் தென் இந்தியாவுக்கு வர சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    ராகுல், பிரியங்கா தென் இந்திய மாநிலங்களில் கவனம் செலுத்தும்பட்சத்தில் வட மாநிலங்களில் காங்கிரசுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறி விட்டது.
    • விவசாயிகளை எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    டெல்லியை நோக்கி விவசாயிகள் நடத்தும் பேரணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறி விட்டது. தலைநகருக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முள்வேலி, டிரோன்களில் இருந்து கண்ணீர் புகை, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள் எல்லாம் ஏற்பாடு செய்துள்ளது.

    சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரலை நசுக்கியுள்ளது. விவசாயிகளை எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 750 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

    நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். தலைவணங்கவும் மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.
    • இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ஜெயந்த் சவுத்ரி தலைமையில் ராஷ்டீரிய லோக்தள் (ஆர்எல்டி) கட்சி இயங்கி வருகிறது.

    மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனான ஜெயந்த் சவுத்ரிக்கு உத்தரபிரதேசத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜாட்யின மக்களின் ஆதரவு உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து ராஷ்டீரிய லோக்தள் கட்சி செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.


    சமீபத்தில் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஜெயந்த் சவுத்ரி நன்றி தெரிவித்தார். இதையடுத்து அவரது ராஷ்டீரிய லோக்தள் கட்சி அணிமாறும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜெயந்த் சவுத்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் பா.ஜ.க. தலைமையிலான அணியில் சேர முடிவு செய்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஜெயந்த் சவுத்ரிக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. எனவே அந்த தொகுதிகளில் சிலவற்றை அவரது கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கும் என்று தெரிகிறது.

    • பஞ்சாப்பில் பா.ஜனதாவிடம் தனித்து போட்டியிடுகிறது.
    • 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிளை கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். அதை தொடர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் அதில் இருந்து விலகி பா.ஜனதா அணிக்கு தாவினார்.


    இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள பாராளுமன்ற தொகுதி என 14 இடங்களிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்றும் அடுத்த 10-15 நாட்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

    இதேபோல பாஜக - சிரோமணி அகாலிதளம் இடையே இன்று  நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் பஞ்சாப்பில் பா.ஜனதாவும் தனித்து போட்டியிடும் வாய்ப்புள்ளது.

    இதனால் பஞ்சாப்பில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.

    • காங்கிரஸ்காரர்களிடம் இருந்து கட்சியைக் காப்பதற்காகவே பா.ஜ.க.விற்கு ஆதரவளித்தேன்.
    • காங்கிரஸ் கட்சியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என தேவகவுடா குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பங்கேற்றார்.

    அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , வாழ்நாளின் இறுதியில் தேவகவுடா தனது அரசியல் போக்கை மாற்றிக் கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், கார்கெவின் கருத்துக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியதாவது:

    கர்நாடக முதல் மந்திரியாக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்க வேண்டும் என நான் கூறியபோது, எனது மகன் குமாரசாமியை முதல் மந்திரியாக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் 13 மாதங்களுக்குள் குமாரசாமியை நீக்கியது யார்? கார்கே அல்ல காங்கிரஸ் தலைவர்கள்.

    என் மகன் காங்கிரசால் நீக்கப்பட்ட போதுதான், நான் என் மகனை பா.ஜ.க.வுடன் இணையுமாறு வலியுறுத்தினேன். இந்த காங்கிரஸ் கட்சி உன்னை வளர அனுமதிக்காது என்று என் மகனிடம் கூறினேன்.

    மல்லிகார்ஜூன கார்கே அவர்களே, நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக விரும்புகிறீர்களா? அதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா? எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பற்றி நன்றாகத் தெரியும்.

    சுமார் 35-40 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ள தூய்மையான மனிதர் மல்லிகார்ஜூன கார்கே. ஆனால் பிரதமர் வேட்பாளருக்காக அவரது பெயரைக் குறிப்பிட்டபோது என்ன நடந்தது? அவரது சொந்த நண்பர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    காங்கிரஸ்காரர்கள் சிலர் எனது கட்சியை அழிக்க நினைத்தபோது, கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எனது ஆதரவை பா.ஜ.க.வுக்கு வழங்க முடிவுசெய்தேன். அது ஒன்றே காரணம். தனிப்பட்ட நலனுக்காக நான் அப்படி செய்யவில்லை. இதற்கு பலனாக பிரதமர் மோடி காட்டிய அன்பும், பாசமும்தான் எனக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி பற்றி பேசுகிறார்கள்.
    • 2024-ல் பா.ஜனதாவின் அநீதியின் இருளில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான 2014-ம் ஆண்டுக்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன் மீது விவாதம் நடைபெற்ற பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

    இந்த நிலையில் பா.ஜனதா அரசின் 10 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகள் குறித்து கருப்பு அறிக்கை வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. அதன்படி நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று கருப்பு அறிக்கை வெளியிட்டார்.

    வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் துயரம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது, பெண்களுக்கு அநீதி போன்றவற்றில் அரசின் தோல்விகளை காங்கிரஸ் கருப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

    பின்னர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    வேலையில்லா திண்டாட்டத்தின் முக்கிய பிரச்சனையை நாங்கள் எழுப்புகிறோம். இதுபற்றி பா.ஜனதா ஒருபோதும் பேசுவதில்லை. ரூ.2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது மோடியின் உத்தரவாதம், ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. தற்போது புதிய உத்தரவாதங்களை கொண்டு வருகிறார்.

    விலைவாசி உயர்வு குறித்து கேட்டால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் இப்போது ஆட்சி செய்கிற கிறார்கள். என்ன செய்தார்கள் என்று பதில் சொல்ல வேண்டும்.

    கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற பா.ஜனதா அல்லாத மாநிலங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.

    விசாரணை அமைப்புகளை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. ஜனநாயகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்தை காங்கிரஸ் உறுதி செய்தது. 2024-ல் பா.ஜனதாவின் அநீதியின் இருளில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம்.

    இவ்வாறு மல்லிகார் ஜூன கார்கே கூறியுள்ளார்.

    • பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • பிரதமருக்கு மணிப்பூரை பற்றி கவலை இல்லை என்பது தெளிவாகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாஜன சபா என்ற பேரணி மற்றும் கூட்டம் திருச்சூரில் நடந்தது. கேரள மாநிலம் முழுவதும் உள்ள 25,177 வாக்குச்சாவடிகளின் பிரதி நிதிகள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே பங்கேற்றார்.

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அரசால் தொடங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றனர். தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து செயல்படும் பொருளாதாரத்தை அவர் கற்பனை செய்தார்.

    ஆனால் இன்று மோடி தலைமையிலான அரசு அனைத்து பொதுத்துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கிறது. பொதுத்துறைகள் நலிவடைந்தால் அதை மீட்டுக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் பொதுத்துறையை அழித்து தனியார் துறையை பலப்படுத்துவதில் மோடி மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

    பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோடி அரசின் கொள்கைகள் சிறுபான்மையினர் மற்றும் பெண்களை அதிகமாக பாதித்துள்ளது. மோடியின் அரசு மாநில அரசுகளை துன்புறுத்துவது மட்டுமின்றி, ஏழை மக்களையும் பெண்களையும் நசுக்குகிறது.

    மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்கொடுமைகள் பலமடங்கு அதிகரித்துள்ளது. உதாரணத்துக்கு ஒவ்வொரு மணி நேரமும் பெண்களுக்கு எதிராக 51 குற்றங்கள் பதிவாகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மத்திய அரசு பாதுகாக்கிறது.

    மணிப்பூரில் நடந்த கற்பழிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நாட்டை அவமானப்படுத்தி உள்ளன. அங்கு 9 மாதங்களாக நடந்துவரும் வன்முறைகளுக்கு பிறகும், நிலைமையை தணிப்பதிலும், வடகிழக்கு மாநிலத்தில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கான சூழலை மீண்டும் ஏற்படுத்துவதிலும் பாரதிய ஜனதா அரசு தோல்வியடைந்துள்ளது.

    பிரதமருக்கு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும், தேர்தல் பேரணிகளில் உரையாற்றவும், ஒருநாள் விட்டு ஒருநாள் உரை நிகழ்த்தவும் நேரம் உள்ளது. ஆனால் மணிப்பூர் பிரச்சினையை தீர்க்க நேரமில்லை.

    லட்சத்திவில் விடுமுறைக்காகவும், படங்களை கிளிக் செய்யவும் நேரம் இருக்கிறது. ஆனால் மணிப்பூர் மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அவருக்கு நேரம் இல்லை. இதன்மூலம் பிரதமருக்கு மணிப்பூரை பற்றி கவலை இல்லை என்பது தெளிவாகிறது.

    காங்கிரஸ் கட்சி இருந்த போதெல்லாம் உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம், சமூகநலம், கல்வி மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் இருந்துள்ளது. ஜனநாயகம், அரசியல் சாசனம் மற்றும் அனைத்து மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க காங்கிரஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

    கேரள மக்கள் எப்போதுமே கொள்கைகள், ஏழைகளின் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அரசியல மைப்புக்காக நிற்கிறார்கள். எனவே கேரளாவை வென்றால் இந்தியாவை வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும்.
    • எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது.- காங்கிரஸ் எம்.பி.

    பாராளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் அலுவல் பணி இன்று தொடங்கியது.

    மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் பேசும்போது "நாட்டை பிரிப்பது (தனிநாடு கோரிக்கை) பற்றி யார் பேசினாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அது எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் அனைவரும் ஒன்று. ஒன்றாக இருப்போம்" இவ்வாறு தெரிவித்தார்.

    முன்னதாக நேற்று,

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் குமார் இடைக்கால பட்ஜெட்டில் தென்மாநிலங்கள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது.

    "வரும் நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனில், இந்தி மொழி பேசும் பகுதியினர் நம் மீது திணித்துள்ள சூழ்நிலை காரணமாக தனிநாடு கோரிக்கையை முன்வைக்க நேரிடும்," என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில்தான் தனது கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் கூட மல்லிகார்ஜூன கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிப்.13-ந்தேதி சென்னை வருகிறார்.
    • இரு தலைவர்கள் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்) சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் பிரமாண்ட காங்கிரஸ் கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார மற்றும் பூத் கமிட்டிகள் வரையிலான நிர்வாகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றும் கார்கே தேர்தலுக்காக காங்கிரசாரை முடுக்கி விடுவார் என்று கூறப்படுகிறது.

    சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் முதல்கட்டமாக பேசி உள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் பேசிய பிறகு மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தை நடைபெறும்.

    கார்கே வருவதற்குள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டால் கார்கே முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருக்கிறது.
    • அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு 48 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ள போதிலும், ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், ஜெ.எம்.எம். கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பாய் சோரனுக்கு ஆதரவாக நிற்கும் வீடியோவை பதிவிட்டு ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிப்பது போன்று இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், "81 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 41 பேரின் ஆதரவே போதுமானது. ஆனால் 48 பேரின் ஆதரவை கொண்ட சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்கும் செயல் அரசியலமைப்பை அவமதிப்பதோடு, பொது ஆணையை மறுப்பதற்கு சமம். ஆளுநர்களால் இந்திய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்படுகிறது," என்று மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்தலில் வாக்களிக்க இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு என்றார்.
    • இதன்பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது என கார்கே தெரிவித்தார்.

    புவனேஷ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் காங்கிரஸ் கட்சியின், முதல் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் தெலுங்கானாவில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, பல மாநிலங்களில் நடக்க இருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கான தேதியை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது, சர்வாதிகாரம் மட்டுமே இருக்கும்.

    அமலாக்கத்துறை அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புகிறது. அவர்கள் அனைவரையும் சீண்டிப் பார்க்கின்றனர். பயத்தின் காரணமாக சிலர் நட்பை பிரிகின்றனர், சிலர் கட்சியை பிரிகின்றனர், சிலர் கூட்டணியில் இருந்து பிரிகின்றனர்.

    தேர்தலில் வாக்களிக்க இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு, இதன்பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது. ஜனநாயகத்தைக் காப்பது மக்களின் பணியாகும் என தெரிவித்தார்.

    • அஸ்ஸாமில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, பல தடைகளும், பிரச்னைகளும் உருவானது.
    • ஜாதி மத பிரிவினைகளை தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோள்.

    இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் என்ற பெயரில் மணிப்பூரில் இரண்டாவது யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி, தற்போது மேற்குவங்கத்தை அடைந்துள்ளார். அஸ்ஸாமில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, பல தடைகளும், பிரச்னைகளும் உருவானது. அதனைத்தொடர்ந்து

    மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள இந்த நடைப்பயணத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்க வேண்டி முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்றே எழுதியுள்ளார்.

    அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "அஸ்ஸாம் மாநில நடைப்பயணத்தின் போது பல பிரச்னைகளை சந்தித்த நிலையில், சில தவறான ஆட்களால் நடைப்பயணத்தில் தீங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நடைப்பயணம் பாதுகாப்பான முறையில் நடப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறேன்" என கூறியிருந்தார்.

    பாஜக உருவாக்கியுள்ள ஜாதி மத பிரிவினைகளை தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோள் என குறிப்பிட்ட, கார்கே நாட்டில் பலவீனமாக இருப்பவர்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதிகளை பெற்று தருவதே இதன் நோக்கம் என்றும் இந்த அரசியலற்ற முயற்சி பலகோடி இந்திய மக்களை ஈர்த்துள்ளது எனவும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். 

    ×