search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "makkal neethi maiyam"

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நலனுக்காக செயலாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். #kamalHassan
    சென்னை:

    கட்சியின் கட்டமைப்பினை வலுப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்களுக்கான அரசியல், மக்களுக்கான கட்சி என்கின்ற தெளிவுரையுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், தமிழர்களின் ஏற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.

    புதிய மாற்றத்தினை முன்னிறுத்தி, தெளிவாகவும் நேர்மையாகவும், தொலைநோக்குப்பார்வையுடனும் ஒவ்வொரு நகர்விலும், தமிழர்களின் பெரும் நம்பிக்கையாக வலுப்பெற்று நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனத்தினை அறிவித்திருக்கின்றோம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் வழங்கப்படுவது பதவியல்ல. அது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை அனைவருக்கும் பலமுறை பல்வேறு தருணங்களில் நான் கூறியிருக்கின்றேன். அதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றேன். எனவே அதை நினைவில் நிறுத்தி கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமையுணர்வுடன் செயலாற்றவேண்டும்.

    சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளையில் இந்த பொறுப்பினை, உங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல், மக்களின் தொண்டர்களாக, மக்கள் நலனை முன்னெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்தி செயலாற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #kamalHassan
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காத அதிகாரிகள் குறித்து அரசிடம் புகார் தெரிவிக்க போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார். #KamalHassan #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அக்கச்சிப்பட்டி, பந்துவக்கோட்டை கிராமங்களில் கஜா புயலால் பாதித்த பொதுமக்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    எங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் பாதிப்புகள் குறித்து அரசிடம் தகவல் தெரிவிப்போம். சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காமல் இருப்பது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை பாதிக்கப்பட்ட தனி ஒருவரால் ஈடு செய்ய முடியாது. அதற்கு கண்டிப்பாக பலர் உதவ வேண்டும். புயலின் போது வீடு இழந்த பொதுமக்களை, பள்ளியில் தங்கிக்கொள்ள அனுமதி அளித்த நிர்வாகிகளுக்கும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும் நன்றி.

    வகுப்புகளில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறினை ஏற்படுத்தி கூடாதென்பதற்காகத்தான் பள்ளி வளாகத்திற்குள் வராமல், வெளியே ரோட்டில் நின்று பேசி கொண்டிருக்கிறேன். எனவே பள்ளிக்குள் வராமல் இருந்ததை எவரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக வருகை தர இருந்த கமலுக்காக, பந்துவாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்புறமிருந்த போர்டிக் கோவை கட்சியினர் தற்காலிக மேடையாக மாற்றியிருந்தனர்.

    அந்த பகுதிக்கு வந்த கமல், பள்ளிக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து மாணவர்களின் படிப்புக்கு இடையூறினை ஏற்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளே செல்ல மறுத்து விட்டார். பின்னர் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி அதில் ஏறி நின்று பொதுமக்களிடம் பேசினார். #KamalHassan #GajaCyclone
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகிற 12-ந்தேதி முதல் 3 நாட்கள் சேலம், நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார். அவர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்கிறார்.

    ஏற்கனவே ஈரோடு, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மாணவ-மாணவிகளுடனும் கலந்துரையாடினார்.

    இந்த நிலையில் கமல்ஹாசன் வருகிற 12-ந்தேதி முதல் 3 நாட்கள் சேலம், நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    12-ந்தேதி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, மல்ல சமுத்திரம், இளம்பிள்ளை ஆகிய இடங்களிலும், 13-ந்தேதி ஓமலூர், மேட்டூர், கங்கவள்ளி, ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், பள்ளப்பட்டி, கோட்டை பாளையம் ஆகிய இடங்களிலும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    14-ந்தேதி நாமக்கல், மல்லூர், ராசிபுரம், புதுசத்திரம், திருச்சேங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் ஆகிய இடங்களில் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களை படித்து விட்டு மக்களிடத்திலும் சென்று அவர்களிடம் கலந்து பேசியதினால் மக்கள் நீதிமய்யம் தங்கள் கருத்தை முன்வைக்கிறது.

    அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் நாங்கள் வேண்டுவது ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் இது தொழில் துறை முன்னேற்றத்துக்கு எதிரானது அல்ல மக்களுக்கு உயிர்ச் சேதம் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு சேதம் இல்லாமல் தொழிற்சாலைகள் வர வேண்டும்.

    இப்போது விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கும் 8 லட்சம் டன் என்பதால் உலகத்தில் சட்டதிட்டங்களை மீறிய முதல் காப்பர் ஆலையாக இது இருக்கும். இந்த ஆலை தமிழகத்தில் இருந்து விடக்கூடாது என்பது தான் எனது வேண்டுகோள் முன்னேற்றத்தை என்றும் மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

    ஆனால் அது மக்களுக்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும். தனி வியாபாரியின் முன்னேற்றமாக இருக்கக் கூடாது. அது தொடர்பான மனுவை அரசு செயலாளரிடம் மக்கள் நீதி மய்யக் கட்சி நிர்வாகிகள் கொடுக்க உள்ளனர்.

    பெட்ரோல் விலையை தினம் தினம் என நிறைய நாட்கள் ஏற்றிவிட்டு கொஞ்சமாக குறைத்திருப்பதற்கு பெயர் குறைப்பது அல்ல ஏறித்தான் இருக்கிறது என்பதுதான் அதற்கான அர்த்தம். பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும். வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் இது பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விலை ஏற்றம்.



    விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான். அவர் சொன்னது போல் ஊழலுக்கு எதிரானது என்பதை அவர் ஊர்ஜிதப்படுத்தி விட்டாரேயானால் கண்டிப்பாக என்னுடைய சகோதர மனப்பான்மையுடையவர் அவர். அவரை வரவேற்கிறோம்.

    இப்போது 6000 கிராம சபைகளை தொட்டுக் கொண்டிருக்கிறோம். 12500-க்கும் மேல் கிராம சபைகள் உள்ளன. அதை தொட்டு விட்டால் அனைவருக்கும் தெரியக் கூடிய மாற்றங்களை நாம் பார்க்க முடியும். பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு இணையான பலம் கிராம சபைக்கு உண்டு என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு யாரிடம் ஒப்புதல் வாங்கினார்கள். மக்கள் இருக்கும் இடத்தில் மக்களுக்கு பாதிப்பு இருக்கும் போது அவர்களிடம் தான் பேச வேண்டும். எங்கேயோ ஒரு அலுவலகத்தில் பேப்பரை நகர்த்திவிட்டால் அது தமிழகத்துக்கான முன்னேற்றமாக இருக்காது.

    எங்களுக்கு பூத் கமிட்டி இல்லை என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் எங்களின் பூத் கமிட்டி இயங்கும் போது தெரியும். நாங்கள் ரொம்ப அழுத்தமாக, படிப்படியாக எப்படி செய்ய வேண்டுமோ அதை நியாயமாக செய்து கொண்டிருக்கிறோம். இதை பணம் கொடுத்து செய்ய நாங்கள் முயலவில்லை. எல்லாவற்றையுமே உழைப்பால், வியர்வை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான வேலை அழுத்தமாக நடந்து கொண்டிருக்கிறது.

    கன மழைக்கு முன்பு எடுத்தது போல இல்லாமல் தற்போது நல்ல படியான நடவடிக்கையை எடுக்க வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    நான்கு அமாவாசைக்குள் மக்கள் நீதி மய்யம் கட்சி காணாமல் போகும் என்று கூறிய அமைச்சர்களுக்கு கமல் ஹாசன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டி விபரம்:-

    கே:- தகாத உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பு பற்றி?

    ப:- அதை வரவேற்கிறேன். கலாச்சாரம் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும்.

    கே:- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2, 4 அமாவாசைக்குள் கமல் கட்சி காணாமல் போய்விடும் என்று கூறி இருக்கிறாரே?

    ப:- அவர்களுக்கு வைக்க வேண்டிய கெடு அதிகமாக உள்ளது. அவர்கள் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள்.

    கே:- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?

    ப:- இல்லை.

    கே:- அரசியல் ஒரு சாக்கடை என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

    ப:- மாட்டேன். ஏனென்றால் நாங்களும் அரசியலுக்கு வந்துள்ளோம்.

    கே:- மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு இல்லை என்று அமைச்சர்கள் பேசுவது?

    ப:- மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். தினமும் செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் அது தெரிந்திருக்கும்.



    கே:- சினிமா பாடல்கள் வைத்து கிண்டல் பேசுகிறார்களே?

    ப:- சினிமா பார்த்து கற்றுக்கொண்டோம் என்று ஒப்புக்கொண்டார்கள் அதுவே போதும்.

    கே:- கிராம சபை கூட்டத்திற்கான விழிப்புணர்வு எந்த அளவுக்கு உள்ளது?

    ப:- ‘மக்கள் நீதி மய்யம்’ கிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்கும். அக்டோபர் 2-ந்தேதி கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்னரே தண்டோரா இசைக்கும் கடமை அரசுக்கு உள்ளது.

    ஆனால் அது முறையாக நடத்தப்படுவது இல்லை. கிராம சபை கூட்டத்தில் வெற்றி கிடைத்ததாக நம்புகிறோம். ஆனால் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகல் எங்களுக்கு கிடைப்பதில்லை. அது கிடைக்க வேண்டும். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி கொண்டிருக்கிறது என கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan
    சென்னை:

    மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று விமான நிலையம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருக்கிறது. சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வேலையில் ஈடுபடுவோம். எனவே, இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் இல்லை.

    மேலும், தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் #KamalHaasan
    அரசியலில் தன்னுடைய எதிரி யார் என்பதை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர் அந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் பேசுகிறார். கமல் கலந்துகொண்ட நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு ஒளிபரப்பானது. இதில் கமல் கேள்வி பதில் பாணியில் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.



    கேள்வி:- “இந்தியன்-2க்கு அப்புறம் நடிக்க மாட்டீர்கள் என்று சொல்கிறார்களே?”

    பதில்:- “அவர்கள் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதை காலம்தான் அதை முடிவு செய்யும். அப்ப முழு நேர அரசியல்வாதியாக ஆக மாட்டீங்களா என்று கேட்கிறார்கள்.

    கே:- இங்கு முழு நேர அரசியல்வாதி யார்?.

    ப:- ஒருத்தரை சொல்லுங்கள் பார்க்கலாம். நான் முதலில் மனிதன் பிறகு கலைஞன். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை வேண்டும். வெள்ளைக்காரன் காலத்துல தியாகம் செஞ்சு அரசியல் செஞ்சது வேற. இப்போது அப்படி நடிக்க அவசியமில்லை. இது துறவு அல்ல.. எனக்கும் கொஞ்சம் மிஞ்சணும்’

    கே:- ‘‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சமூகத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?”

    ப:- “நம் பழைய சடங்குகளின் ஒவ்வொன்றுக்கு பின்னாலும் நிறைய காரணங்களும் நோக்கங்களும் இருந்தன. ஒவ்வொரு சடங்கிலும் ஒரு செய்தி இருக்கிறது. நேரடியாக சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மதம் வழியாக சொல்லியிருக்கிறார்கள்..

    ‘மன்னர் சொல் கேளா மக்களை வழிதிருப்ப மதம் வழி சொல்லி வைத்த மார்க்கம்தானே’ன்னு நானே சின்ன வயசுல எழுதியிருக்கேன். எனவே நிச்சயம் சம்பந்தம் இருக்கு. அதனால்தான் நீங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

    கே:- “பிடித்த போட்டியாளர் யார்?”

    ப:- ‘உங்களுக்கு பிடிச்சவங்க ஒவ்வொரு வாரமும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லையா? எப்படி சொல்ல முடியும்? இரண்டு வருடங்களாக தாங்கிக் கொண்டிருக்கும் மக்கள் தான் எனக்குப் பிடித்தவர்கள்”

    ‘எந்தவொரு விளையாட்டிலும் தன்னுடைய எதிரியார் என்பதை தேர்வு செய்தாக வேண்டும். இன்னமும் கொஞ்ச நாள்ல நானும் அதை செய்தாக வேண்டும்’ (கமல் இப்படி சொல்லிவிட்டு கேமராவைப் பார்க்க புரிந்து கொண்டு கைத்தட்டினார்கள் பார்வையாளர்கள்.) #KamalHaasan #MakkalNeethiMaiyam
    அரை நூற்றாண்டு காலம் சீரழிவு நடைபெற்றுள்ளது என்று மக்கள் நீதி மய்ய பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் ‘இது நம்மவர் படை’ என்ற கட்சி பாடல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கவிஞர் சினேகன் பாடல்களை எழுத, தாஜ்நூர் இசை அமைத்திருந்தார். இந்த பாடல் குறுந்தகட்டை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு பேசியதாவது:-

    நாம் ஒரு மாற்றத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இனிவரும் விழாக்களில் நாம் மாலைகள், பொன்னாடைகளை தவிர்ப்போம். வரும் வழியில் சில பேனர்கள் பார்த்தேன். நம் சாலைகளில் வழிமறிக்காமல், எங்கு அனுமதி இருக்கிறதோ, அங்கு மட்டுமே வைக்க வேண்டும்.

    முன்பு எல்லாமே நன்றாக இருந்தது. இப்போது எல்லாமே கெட்டுவிட்டது. மாற்றத்தை நீங்கள் தான் செய்யப்போகிறீர்கள். நான் செய்துவிடுவேன் என்று நம்பி மல்லாந்து சாய்ந்துவிடாதீர்கள். இந்த நாட்டை மாற்றும் வலிமை உங்கள் கையில் இருக்கிறது.

    ‘எப்படி சார் நீங்களெல்லாம் தாக்குப்பிடிக்க போறீங்க?, இங்கு ஓட்டுகளை மொத்தமாக பணத்தை கொடுத்து வாங்கும் விளையாட்டு நடக்கிறதே... எப்படி ஜெயிக்கப் போறீங்க’ என்று கேட்கலாம்.

    நாங்கள் பணம் வாங்கமாட்டோம் என்று சொன்னால் மட்டும் போதாது. வாங்குபவர்களுக்கு அதனால் என்னென்ன நஷ்டம் உண்டாகிறது என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும். 5 ஆயிரத்துக்கும், 10 ஆயிரத்துக்கும் ஆசைப்பட்டு நம் உரிமைகளை விட்டுத்தருவது எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை நாம் உணரவேண்டும்.

    இந்த பாடல்களே உங்கள் உற்சாகத்துக்கு தான். என் உற்சாகம் நீங்கள் சொல்லும் சேதிகளில், படும் கவலைகளில் இருந்துவரும். உங்கள் கோபம் அதில் எனக்கு தெரியவேண்டும். எனக்கும் அந்த கோபம் உண்டு. இரண்டையும் கலந்து புதிய சமையல் செய்வோம்.

    மாற்றத்தை நோக்கி என்று என்னை மட்டும் சுட்டிக்காட்டிவிடாதீர்கள். ஒரு ஆள் தேரை இழுக்கமுடியாது. மக்கள் நீதி மய்யமே நான் தான் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நான் சோர்ந்து படுத்துவிட்டால் இயக்கம் என்னாவது? என்ற பதற்றம் உங்களுக்கு வரவேண்டும்.

    இந்த கட்சி மக்களுக்காகவும், ஒரு காரணத்துக்காகவும் தொடங்கப்பட்டது. அது என்ன காரணம்? என்று அனைவருக்கும் தெரியும். அந்த காரணம், அந்த குறை நீங்கும் வகையில் இந்த கட்சி இருந்தாக வேண்டும். அரை நூற்றாண்டு காலம் நடந்திருக்கிறது இந்த சீரழிவு. இன்னும் அரை நூற்றாண்டு காலம் இந்த மக்கள் நீதி மய்யம் செழிப்புடன் இருந்தால் தான் இந்த மாற்றம் ஏற்படும். அந்த அதிசய மரம் காய்க்கும் பழத்தை திண்பது எப்போது? என்று தெரியாது. ஆனால் விதை நாம் போட்டது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் கட்சி நிதி பெறுவோம். அதற்கான கணக்கையும் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கமல்ஹாசனிடம் கட்சி நிதியாக 2 பேர் தலா ரூ.50 ஆயிரம் வழங்கினர். கட்சி உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் சி.கே.குமரவேல், கமீலா நாசர், ஸ்ரீபிரியா, தங்கவேலு, சுகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.  #KamalHaasan #MakkalNeethiMaiyam
    நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan #Twitter
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, நடத்தி வருகிறார். நாட்டில் நிகழும் அன்றாட சம்பவங்கள் குறித்தும், தன்னை பாதித்த விஷயங்கள் குறித்தும் சமூக வலைதளமான டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.



    கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டுவிட்டரில் இணைந்த கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதேசமயம், வேறு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சமூக வலைதளமான டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan  #Twitter
    கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #PinarayiVijayan #Kamalhassan
    திருவனந்தபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் கொச்சி சென்றார்.

    அங்கு பிற்பகலில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசினர்.

    ஏற்கனவே, நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

    மேலும், கட்சி தொடங்கும் முன்பு பினராயி விஜயனை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து கட்சி தொடங்கி நடத்துவதற்கான ஆலோசனைகளை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. #PinarayiVijayan #Kamalhassan
    நான் செல்லும் அனைத்து இடங்களிலும் உங்கள் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. மக்கள் நீதி மய்யம் பெரிய இயக்கமாக மாறும் என்று கமல்ஹாசன் கூறினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் இன்று 2-வது நாளாக சுற்றுப்பயணம் செய்தார். பாளை முருகன்குறிச்சி நூற்றாண்டு மண்டபம் அருகே கூடிநின்ற மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    பல காலங்கள் என்னுடன் சேவை செய்த நற்பணி மன்றத்தினர் இன்று கட்சிக்காரர்களாக மாறி வந்துள்ளீர்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பல புதிய முகங்கள் வந்திருக்கிறார்கள். உங்களுக்கு நன்றி. உங்கள் முகங்களை பார்ப்பதற்கும் மனங்களை பிடிப்பதற்கும் நான் வந்துள்ளேன். மீண்டும் வருவேன். உங்களை புரிந்து கொள்ள இந்த பயணம் உதவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து அவர் மேலப்பாளையம் சந்தை பகுதிக்கு சென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு நின்று கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சிலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்கள்.

    அவர்கள் மத்தியில் திறந்த காரில் நின்று கமல்ஹாசன் பேசியதாவது:-

    உங்களை தெரிந்துகொள்ளவே பயணம் மேற்கொண்டுள்ளேன். இது நீங்கள் நோன்பு இருக்கும் காலம் என்பதை தெரிந்து கொண்டேன். நேரம், காலம் தெரியாமல் வந்ததற்கு மன்னிக்கவும். இந்த இயக்கம் பெரிய இயக்கமாக மாறும்.

    இங்கு நிறைய இளைஞர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் பயணிக்கும் தூரம் வெகுதூரம். அடுக்கு மொழியில் பேசுவதைவிட அடுத்தவேலையை பற்றி பேசுவது முக்கியம். மக்கள் நீதி மய்யத்திற்கு நிறைய உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். அதற்காகவே செயலி உருவாக்கியுள்ளோம். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த செயலி தமிழர்களை புதிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்தவர்கள் சொல்லிக்கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நெல்லை டவுண் வாகையடிமுக்கு பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    இது சரித்திர புகழ் வாய்ந்த இடம். பெரிய தலைவர்கள் பேசிய இடம். பாரதி உலாவிய வீதி. இங்கு பேசுவது பெருமையாக உள்ளது. பெரிய அரசியல் தலைவர்கள் இங்கு வந்துள்ளார்கள். நானும் வந்துள்ளேன். இது காலத்தின் கட்டாயம். மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துசெல்ல விசிலி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது தமிழகத்தை செதுக்கும் உளி. இந்த உளி உங்கள் கையில் இன்னும் கூர்மை பெறும். நான் செல்லும் அனைத்து இடங்களிலும் உங்கள் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. இது நம்ம ஊர் என்ற மன்பான்மை வருகிறது. இங்கேயே தங்கிவிடலாம் என தோன்றுகிறது.

    யாதும் ஊரே யாவரும் கேளிர். இதுவரை நான் பணத்திற்காக வசனம் பேசினேன். இப்போது உங்கள் அன்பின் வெளிப்பாட்டை பேசி வருகிறேன். இது ஒத்திகை பார்த்து பேசுவது அல்ல. உங்களை பார்த்ததும் அன்பாக வருகிறது. உங்கள் அன்பை பார்த்து நெகிழ்ந்து போனேன். இதனால் பேச்சு வரவில்லை. இந்த அன்பிற்கு சினிமா மட்டும் காரணம் என கூறமுடியாது.

    இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து வருகிறேன். கடமையை செய்யுங்கள். ஒத்தகருத்துள்ள நிறைய பேர் உள்ளார்கள் என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தபின் புரிகிறது. 30 வருடத்திற்கு முன்பு உங்களை சந்தித்து பேசியது நினைவுக்கு வருகிறது. சாதனை என்பது சொல் அல்ல செயல். செயலை செய்வதற்கு செயலியை மக்கள் நீதி மய்யம் அறிமுகம் செய்துள்ளது. புதிய தமிழகம் படைக்கும் பொறுப்பில் பங்கேற்றுகொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×