search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நீதி மய்யம் பெரிய இயக்கமாக மாறும் - நெல்லையில் கமல்ஹாசன் பேச்சு
    X

    மக்கள் நீதி மய்யம் பெரிய இயக்கமாக மாறும் - நெல்லையில் கமல்ஹாசன் பேச்சு

    நான் செல்லும் அனைத்து இடங்களிலும் உங்கள் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. மக்கள் நீதி மய்யம் பெரிய இயக்கமாக மாறும் என்று கமல்ஹாசன் கூறினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் இன்று 2-வது நாளாக சுற்றுப்பயணம் செய்தார். பாளை முருகன்குறிச்சி நூற்றாண்டு மண்டபம் அருகே கூடிநின்ற மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    பல காலங்கள் என்னுடன் சேவை செய்த நற்பணி மன்றத்தினர் இன்று கட்சிக்காரர்களாக மாறி வந்துள்ளீர்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பல புதிய முகங்கள் வந்திருக்கிறார்கள். உங்களுக்கு நன்றி. உங்கள் முகங்களை பார்ப்பதற்கும் மனங்களை பிடிப்பதற்கும் நான் வந்துள்ளேன். மீண்டும் வருவேன். உங்களை புரிந்து கொள்ள இந்த பயணம் உதவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து அவர் மேலப்பாளையம் சந்தை பகுதிக்கு சென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு நின்று கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சிலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்கள்.

    அவர்கள் மத்தியில் திறந்த காரில் நின்று கமல்ஹாசன் பேசியதாவது:-

    உங்களை தெரிந்துகொள்ளவே பயணம் மேற்கொண்டுள்ளேன். இது நீங்கள் நோன்பு இருக்கும் காலம் என்பதை தெரிந்து கொண்டேன். நேரம், காலம் தெரியாமல் வந்ததற்கு மன்னிக்கவும். இந்த இயக்கம் பெரிய இயக்கமாக மாறும்.

    இங்கு நிறைய இளைஞர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் பயணிக்கும் தூரம் வெகுதூரம். அடுக்கு மொழியில் பேசுவதைவிட அடுத்தவேலையை பற்றி பேசுவது முக்கியம். மக்கள் நீதி மய்யத்திற்கு நிறைய உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். அதற்காகவே செயலி உருவாக்கியுள்ளோம். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த செயலி தமிழர்களை புதிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்தவர்கள் சொல்லிக்கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நெல்லை டவுண் வாகையடிமுக்கு பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    இது சரித்திர புகழ் வாய்ந்த இடம். பெரிய தலைவர்கள் பேசிய இடம். பாரதி உலாவிய வீதி. இங்கு பேசுவது பெருமையாக உள்ளது. பெரிய அரசியல் தலைவர்கள் இங்கு வந்துள்ளார்கள். நானும் வந்துள்ளேன். இது காலத்தின் கட்டாயம். மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துசெல்ல விசிலி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது தமிழகத்தை செதுக்கும் உளி. இந்த உளி உங்கள் கையில் இன்னும் கூர்மை பெறும். நான் செல்லும் அனைத்து இடங்களிலும் உங்கள் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. இது நம்ம ஊர் என்ற மன்பான்மை வருகிறது. இங்கேயே தங்கிவிடலாம் என தோன்றுகிறது.

    யாதும் ஊரே யாவரும் கேளிர். இதுவரை நான் பணத்திற்காக வசனம் பேசினேன். இப்போது உங்கள் அன்பின் வெளிப்பாட்டை பேசி வருகிறேன். இது ஒத்திகை பார்த்து பேசுவது அல்ல. உங்களை பார்த்ததும் அன்பாக வருகிறது. உங்கள் அன்பை பார்த்து நெகிழ்ந்து போனேன். இதனால் பேச்சு வரவில்லை. இந்த அன்பிற்கு சினிமா மட்டும் காரணம் என கூறமுடியாது.

    இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து வருகிறேன். கடமையை செய்யுங்கள். ஒத்தகருத்துள்ள நிறைய பேர் உள்ளார்கள் என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தபின் புரிகிறது. 30 வருடத்திற்கு முன்பு உங்களை சந்தித்து பேசியது நினைவுக்கு வருகிறது. சாதனை என்பது சொல் அல்ல செயல். செயலை செய்வதற்கு செயலியை மக்கள் நீதி மய்யம் அறிமுகம் செய்துள்ளது. புதிய தமிழகம் படைக்கும் பொறுப்பில் பங்கேற்றுகொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×