search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political Enemy"

    அரசியலில் தன்னுடைய எதிரி யார் என்பதை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர் அந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் பேசுகிறார். கமல் கலந்துகொண்ட நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு ஒளிபரப்பானது. இதில் கமல் கேள்வி பதில் பாணியில் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.



    கேள்வி:- “இந்தியன்-2க்கு அப்புறம் நடிக்க மாட்டீர்கள் என்று சொல்கிறார்களே?”

    பதில்:- “அவர்கள் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதை காலம்தான் அதை முடிவு செய்யும். அப்ப முழு நேர அரசியல்வாதியாக ஆக மாட்டீங்களா என்று கேட்கிறார்கள்.

    கே:- இங்கு முழு நேர அரசியல்வாதி யார்?.

    ப:- ஒருத்தரை சொல்லுங்கள் பார்க்கலாம். நான் முதலில் மனிதன் பிறகு கலைஞன். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை வேண்டும். வெள்ளைக்காரன் காலத்துல தியாகம் செஞ்சு அரசியல் செஞ்சது வேற. இப்போது அப்படி நடிக்க அவசியமில்லை. இது துறவு அல்ல.. எனக்கும் கொஞ்சம் மிஞ்சணும்’

    கே:- ‘‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சமூகத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?”

    ப:- “நம் பழைய சடங்குகளின் ஒவ்வொன்றுக்கு பின்னாலும் நிறைய காரணங்களும் நோக்கங்களும் இருந்தன. ஒவ்வொரு சடங்கிலும் ஒரு செய்தி இருக்கிறது. நேரடியாக சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மதம் வழியாக சொல்லியிருக்கிறார்கள்..

    ‘மன்னர் சொல் கேளா மக்களை வழிதிருப்ப மதம் வழி சொல்லி வைத்த மார்க்கம்தானே’ன்னு நானே சின்ன வயசுல எழுதியிருக்கேன். எனவே நிச்சயம் சம்பந்தம் இருக்கு. அதனால்தான் நீங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

    கே:- “பிடித்த போட்டியாளர் யார்?”

    ப:- ‘உங்களுக்கு பிடிச்சவங்க ஒவ்வொரு வாரமும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லையா? எப்படி சொல்ல முடியும்? இரண்டு வருடங்களாக தாங்கிக் கொண்டிருக்கும் மக்கள் தான் எனக்குப் பிடித்தவர்கள்”

    ‘எந்தவொரு விளையாட்டிலும் தன்னுடைய எதிரியார் என்பதை தேர்வு செய்தாக வேண்டும். இன்னமும் கொஞ்ச நாள்ல நானும் அதை செய்தாக வேண்டும்’ (கமல் இப்படி சொல்லிவிட்டு கேமராவைப் பார்க்க புரிந்து கொண்டு கைத்தட்டினார்கள் பார்வையாளர்கள்.) #KamalHaasan #MakkalNeethiMaiyam
    ×