search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ma Subramanian"

    • ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.
    • 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பை இலவசமாக பரிசோதித்து கொள்ள முடியும்.

    சென்னை:

    சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை ரூ.2 கோடி செலவில் அனைத்து நகர்புற, ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் 5,09,664 பேர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 83,430 பேர் துணை சுகாதார நிலையங்களிலும் என மொத்தம் 5,93,094 பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது நகர்புறங்களில் செயல்படுத்தும் வகையில் பரிசோதனைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய வசதியை தொடங்கி வைத்தார்.

    30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பை இலவசமாக பரிசோதித்து கொள்ள முடியும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டுபிடிக்க ஸ்டிப் பயன்படுத்துவது போல் சிறுநீரில் இந்த ஸ்டிப்பை போட்டால் ஆல்புமின் அளவை காட்டி விடும்.

    ஆல்புமின் அதிகமாக இருந்தால் சிறுநீரகம் செயலிழப்பதாக அர்த்தம். இதை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

    சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • மாணவனுக்கு கையில் அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
    • 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

    நாங்குநேரி:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவனை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டதாக தெரிவித்தார்.

    மேலும், மாணவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    மகனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என மாணவனின் தாயார் கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த மாணவன் 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காயமடைந்த இருவரும் குணமடைந்ததும் அவர்களை பாதுகாப்பாக படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அவர்களுக்கு தேவையான கல்வியை தொடர அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை.

    மதுரை:

    மதுரை மருத்துவக் கல்லூரியில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் சங்கீதா, மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல், எம்.எல். ஏ.க்கள் கோ.தளபதி புதூர் பூமிநாதன் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் வழங்கினார்.

    தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சமையல் தேவைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பயோ கேஸ் மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்காளம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அதிகப்படியான ரத்த வங்கிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மதுரை அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் ரத்தக் கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் ரூ. 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகம் ரத்த தானம் செய்வதில் முதல் இடத்திற்கு வரும்.

    மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஜெய்கா நிறுவனத்தின் துணைத் தலைவரை இதுதொடர்பாக சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி இருக்கிறோம்.

    மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும். 2028-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் போது அப்போதைய தமிழகத்தை ஆண்ட அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யவில்லை.

    தமிழகத்தில் 8713 சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    சென்னை:

    மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 11, வார்டு - 143, நொளம்பூர் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மேயர் பிரியா ராஜன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணிகள் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, 11- வது மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் , ஒன்றிய செயலாளர் அ.ம. துரை வீரமணி, எஸ்.பத்மபிரியா, கவுன்சிலர் வ.செல்வகுமார் , வி. ராஜேஷ், எஸ்.மணி, கே.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இயற்கையாக இருக்க வேண்டிய எடையை விட பாதி அளவே இருந்துள்ளது.
    • தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

    சென்னை:

    ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் (32). இவரது மனைவி அஜிஷா. இவர்களது 1 1/2 வயது குழந்தை முகமது மகிர்.

    இந்த குழந்தைக்கு தலையில் நீர் கட்டியதால் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி இருந்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தலையில் ஆபரேசன் நடந்துள்ளது.

    இதையடுத்து குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் போடப்பட்டதும் கை கருத்துள்ளது. டாக்டர்கள் பரிசோதித்ததில் கை ரத்த ஓட்டம் இல்லாமல் அழுகிப்போனதால் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கை அகற்றப்பட்டது. செவிலியரின் கவனக்குறைவால் தான் கை அகற்றப்பட வேண்டியதாயிற்று என்று புகார் கூறினார்கள்.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இயற்கையாக இருக்க வேண்டிய எடையை விட பாதி அளவே இருந்துள்ளது. மருத்துவ துறையின் கவனக்குறைவால் பிரச்சினை ஏற்பட்டதா? என்று கண்டறிய 3 டாக்டர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் விசாரித்து வருகிறார்கள். இந்த குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் கிடைத்துவிடும். கவனக்குறைவு இருந்தது தெரியவந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. பொதுமக்களும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    டெங்கு வரவே வராது என்று சொல்ல முடியாது. பதற்றம் அடைய வேண்டியதில்லை. கடந்த 2017-ம் ஆண்டு டெங்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது தமிழகத்தில் மிகவும் குறைந்துவிட்டது. இறப்புகள் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது.
    • கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதுபற்றி டீன் ஏற்கனவே பெற்றோரிடம் விளக்கமாக கூறி இருக்கிறார். தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    டாக்டர்களோ, செவிலியர்களோ குழந்தைகளை காப்பாற்றத்தான் போராடுவார்கள். தவறுதலாக ஊசி போட வாய்ப்பு குறைவு. ஒருவேளை கவனக்குறைவாக இருந்தார்களா என்று விசாரிப்பதற்காக 3 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு விசாரித்து அறிக்கை தரும். கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • பரிசோதனையில் 4 ஆயிரத்து 56 நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    சென்னை :

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் கடந்த 24-ந்தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டுள்ளனர்.

    இந்த மருத்துவ முகாமில் 35 ஆயிரத்து 138 பேர் சித்தா மற்றும் இந்திய மருத்துவத்திற்காக பதிவு செய்து பரிசோதனை செய்து கொண்டனர்.

    இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பரிசோதித்து நோய் கண்டறியப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

    * மருத்துவ முகாமில் வினியோகிக்கப்பட்ட மருந்துகளின் செலவு தொகை ரூ.42 லட்சத்து 31 ஆயிரத்து 404 ஆகும்.

    * நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்காக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 48 பேர் பரிசோதித்து கொண்டனர்.

    * நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று 14 ஆயிரத்து 471 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 4 ஆயிரத்து 56 நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    * ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 19 ஆயிரத்து 217 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 5 ஆயிரத்து 576 ரத்த அழுத்த நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    * நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 8 ஆயிரத்து 333 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் இந்த 2 நோய்களினாலும் 2 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    * கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 7 ஆயிரத்து 849 பேர் மேற்கொண்டனர். இதில் 762 பேருக்கு கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.

    * மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 8 ஆயிரத்து 712 பேர் மேற்கொண்டனர். இதில் 1,176 பேருக்கு மார்பக புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.

    * ரத்த சோகை கண்டறியும் பரிசோதனையை 44 ஆயிரத்து 165 பேர் செய்துகொண்டனர். இதில் 5 ஆயிரத்து 492 பேருக்கு ரத்த சோகை இருப்பது தெரிய வந்தது.

    * சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 553 பேர் செய்து கொண்டனர். இதில் 785 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    * ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 658 பேர் மேற்கொண்டனர். இதில் 1,299 பேருக்கு ரத்த கொழுப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.

    * 12 ஆயிரத்து 817 பேர் காசநோய் பரிசோதனை மேற்கொண்டனர். சளி பரிசோதனைக்கான 4 ஆயிரத்து 366 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 289 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * 12 ஆயிரத்து 591 பேர் தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 133 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேல் பரிசோதனையில் 14 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

    * கொரோனா பரிசோதனை 936 பேர் செய்து கொண்டனர்.

    * பல் பரிசோதனையை 13 ஆயிரத்து 685 பேர் மேற்கொண்டனர். இதில் 1,565 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * இ.சி.ஜி. பரிசோதனையை 14 ஆயிரத்து 894 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 1,238 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * 'எக்கோ' பரிசோதனையை 7 ஆயிரத்து 20 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 715 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 13 ஆயிரத்து 125 பேர் பதிவு செய்து கொண்டனர்.

    * தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 852 பேர் கண் கண்ணாடி பெற்றனர்.

    இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

    • ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
    • எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சென்னை:

    அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் அறை எண். 435-ல் தற்போது செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார்.

    எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன்.

    இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • கொரோனா காலத்தில் சித்தா கொரோனா மருத்துவ மையம் உருவாக்கப்பட்டு பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

    சென்னை :

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாநகரில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா பயிற்சி மேற்கொண்டார். இதேபோல, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கமிஷனர் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோரும் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ மையங்கள், பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகள் என 178 இடங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி, ஓமியோபதி போன்ற 5 வகையான மருத்துவ முறைகளுக்கும் கல்லூரிகள் செயல்படுகின்றது. கொரோனா பேரிடர் காலத்தில் சித்தா கொரோனா மருத்துவ மையம் உருவாக்கப்பட்டு பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் 36 பூங்காக்களில் யோகா மேடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்கின்ற வகையில் முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பினார். ஆனால், கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. தொடர்ச்சியாக கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினாலும், இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக கவர்னர்தான் இருக்க வேண்டும் என்றும், துணை வேந்தர்களை கவர்னர்தான் நியமிக்க வேண்டும் என்றும் பதில் கூறி வருகின்றனர்.

    குஜராத், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சூழ்நிலை வந்தபோது மாநில முதல்-அமைச்சரே துணை வேந்தர்களை நியமித்து கொள்ளலாம் என்று சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டது.

    தமிழ்நாட்டு மக்களிடம் சித்த மருத்துவத்திற்கு நிறைய ஆதரவு இருப்பதால், இங்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கவர்னர் ஒப்புதல் அளித்தால் இந்தியாவிலேயே முதல் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைந்தது என்கின்ற பெருமை கிடைக்கும்

    அனைத்து துறைகளிலும் சிறப்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். அந்த வகையில் வரும் 24-ந் தேதி அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 30 துறைகளை ஒருங்கிணைத்து பெரிய அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அன்றைய தினம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சார்பாக 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. காலை முதல் மாலை 5 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • செந்தில்பாலாஜிக்கு ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்த செலவில் விரும்பும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கோர்ட்டு அனுமதித்தது.

    இந்த நிலையில் இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருக்கு உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மருத்துவர்கள் எடுத்துள்ளார்கள். ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும். அதன் பிறகு தான் ஆபரேசன் செய்ய முடியும். இல்லாவிட்டால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி விடும். எனவே ஆபரேசன் நடைபெற இன்னும் 4 அல்லது 5 நாட்கள் ஆகலாம் என்றார்.

    பின்னர் அவரிடம் எய்ம்ஸ் மருத்துவ குழு வருவதாக கூறப்படுவது பற்றி கேட்டதற்கு கோர்ட்டில் வக்கீல் இளங்கோ தாராளமாக எய்ம்ஸ் மருத்துவ குழு வந்து பரிசோதித்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தாராளமாக அவர்களும் வந்து பரிசோதிக்கட்டும் என்றார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மூத்த டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான எங்கள் நிபுணர்கள் குழு அவரை பரிசோதித்தது.

    ஆரம்ப கால 'கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராப்ட்' அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கிய அறுவை சிகிச்சை நிபுணர், அவர் மயக்க மருந்துக்கான உடற்தகுதியை மதிப்பிடுவதற்கு மேலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்படும்.

    தற்போது இதய கண்காணிப்புடன் ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    சென்னை :

    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் முத்துச்செல்வன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம், 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் 24 மணி நேர சேவை மூலம் 'நீட்' தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பதற்கு ஆலோசனை வழங்கும் விதமாக தொடங்கி வைக்கப்பட்டது. 40 மன நல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    2022-ம் ஆண்டில் 60 மனநல ஆலோசகர்களை கொண்டு இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆண்டில் (2023) நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 தொடங்கப்பட்டு கூடுதலாக 20 மனநல ஆலோசகர்கள் மற்றும் 2 மனநல மருத்துவர்களை கொண்டு வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் '104' மருத்துவ உதவி தகவல் மையம் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நோக்கத்தின்படி, இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய 1,44,516 பேருக்கு மே 18-ந்தேதி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை 54,374 மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அதில் 177 பேர் அதிக மனநல அழுத்தத்தில் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களிடம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

    நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 68,823 தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளின் விவரங்கள் நீட் தேர்வு நிர்வாகத்திடம் கேட்கப்பட்டு உள்ளது.

    அவர்களின் விவரங்கள் கிடைத்தவுடன் அந்த மாணவர்களை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இதுமட்டுமன்றி நீட் தேர்வு முடிவில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் பிரபஞ்சன் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.

    மத்திய அரசு 15 சதவீதத்துக்கான கலந்தாய்வு நடத்தி முடித்தவுடன்தான் தமிழ்நாடு அரசு மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 15 சதவீதம் மற்றும் 85 சதவீத மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக வழங்கினால், கடந்தாண்டு ஏற்பட்ட காலதாமதத்தையும் தவிர்த்து உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விரைந்து முடிக்கப்படும்.

    மேலும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தேர்வுக் குழு செயலாளர் ஆகியோரிடம் அடுத்த வாரமே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கும் பணியை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் காலதாமதம் இன்றி உடனடியாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்படும்.

    மேலும், இந்த ஆண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 450 இளங்கலை மருத்துவ படிப்பு இடங்களும், அரசு புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியில் 50 பல் மருத்துவ இடங்களும், கே.கே.நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 50 இளங்கலை மருத்துவ இடங்கள் என மொத்தம் 550 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
    • 104 சேவை மையத்தில் பயிற்சி பெற்ற 20 மனநல ஆலோசகர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 104 சேவை மையத்தில், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்திமலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் சண்முகக்கனி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த சேவை மையத்தில் பயிற்சி பெற்ற 20 மனநல ஆலோசகர்கள் பணி அமர்த்தப்பட்டு 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

    அதிக மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களை கண்டறிந்து மாவட்ட மனநலக்குழு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் குழு இணைந்து அந்த மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்தக்குழு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

    தொடர்ச்சியாக 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×