search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎன் நேரு"

    • தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள்.
    • பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

    திருச்சி:

    திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் அமைக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

    தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிற நிலை வந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெறுவார்கள்.

    மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறுகிறார்கள் அவ்வாறு எல்லாம் நடக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை பெறும்.

    தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள். சேலத்தில் வெற்றி பெறப்போவது செல்வ கணபதி தான்.

    பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • அமைச்சர் மேடை அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. அதற்காக 100 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு பந்தல் அமைக்கும் பணி, உணவருந்தும் இடம், கட்சி நிர்வாகிகள் அமருமிடம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்குமிடம், மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது.


    தினமும் காலை மாலை இரு வேலையும் அமைச்சர் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென அமைச்சர் புல்லட் வண்டியைதானே ஓட்டி சென்று பணிகளை சுற்றி பார்வையிட்டார் அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது.
    • 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அமருவதற்கான பந்தல், தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே .என். நேரு ஆய்வு செய்து பந்தல் அமைப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தற்போது மாநாட்டு முகப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருவதற்கான பாதை, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமருமிடம் , உணவருந்துமிடம், கட்சி தொண்டர்கள் உணவு அருந்தும் இடம் மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் உருவ சிலைகள் அமைக்கும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். மாநாட்டிற்காக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தும் இடமும் தயாராகி வருகிறது. பந்தல் உள் பகுதியில் திரைச் சேலைகளால் அலங்காரம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மேலும் மாநாட்டை சுற்றிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    அமைச்சர் நேருவுடன் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் .ஆர் . சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் டி .எம். செல்வகணபதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.
    • தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

    இருப்பினும், சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.

    இந்நிலையில், மழை நீர் விரைவில் அகற்றப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    செய்தியளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்," சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

    சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

    • பிற மாவட்டங்களிலும் மழை வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சென்னையில் மெட்ரோ ரெயில் பணி, மின்சார தொழில்நுட்ப பணி, மெட்ரோ குடிநீர் பணி என மூன்றும் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோட்டிக் பிரசார வாகனத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

    தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிய நிலையில் சென்னையில் 30-ந் தேதிக்குள் வெள்ள தடுப்பு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க திட்டப்பட்டு இருந்தது . ஆனால் கடந்த 50 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்வதால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்து ஒரு வாரத்திற்குள் அந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் யாருக்கும் ஏதேனும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அதற்கேற்றார் போல் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதே போன்று பிற மாவட்டங்களிலும் மழை வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கேயும் அதிக அளவில் தண்ணீர் தேங்காமல் இருக்கப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நின்றால் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது கணுக்கால் அளவு தண்ணீர் நின்றால் கூட தண்ணீர் நிற்கிறது என்கிறார்கள். அதுவும் அடுத்த அரைமணி நேரத்தில் வடிந்து விடுகிறது.

    சென்னையில் மெட்ரோ ரெயில் பணி, மின்சார தொழில்நுட்ப பணி, மெட்ரோ குடிநீர் பணி என மூன்றும் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது. மழைக்காலம் முடியும் வரை எங்கேயும் சாலைகளை தோண்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சி பொறுத்த அளவில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு செய்யும் பணி இன்னும் 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளது. கடந்த 7 வருடமாக எதுவுமே செய்யவில்லை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 2 வருடத்தில் சாலை, மின்விளக்கு, குடிநீர் இணைப்புகள் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

    குடமுருட்டி பகுதியில் இருந்து பஞ்சப்பூர் வரை கோரையாறு கரையை பலப்படுத்துவதற்கு ரூ. 330 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் நீர்வளத்துறை சார்பில் அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ளது. அதனால் எங்கேயும் கரைகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

      கோவை:

      நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

      அமைச்சர் உதயநிதியை மிரட்டிய அயோத்தி சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் செய்ய முடியுமா? தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என அமைச்சர் உதயநிதி பதில் சொல்லிவிட்டார்.

      நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம். இவர்கள் புதிதாக ஆரம்பித்து ள்ளார்கள்.

      பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். பெயரை எப்படி மாற்றினாலும் நாங்கள் எப்போதும் போல மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம்.

      ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடக்காத காரியம். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார்.
      • ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது.

      தஞ்சாவூர்:

      தஞ்சை மாநகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ் நிலையம், பல்நோக்கு கட்டிட அரங்கம் உள்பட பல்வேறு பணிகள் ரூ .140 கோடி மதிப்பில் கட்டி முடிவடைந்துள்ளன.

      இந்தத் திட்ட பணிகளை வருகிற 27-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தநிலையில் இன்று விழா நடைபெறும் இடத்தை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

      வரும் 26-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார். அன்று நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2 பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

      அதற்கு மறுநாள் 27ஆம் தேதி நவீன கருவிகளை கொண்டு விவசாயம் செய்வற்கான விவசாய கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மதியம் தஞ்சாவூருக்கு வருகிறார். பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலைய வளாகம், பல்நோக்கு மையக் கட்டிட அரங்கம், பழைய திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம், வல்லம் குவாரி சாலைக்கு தமிழ் சாலை என பெயர் சூட்டுதல் உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவடைந்த பல்வேறு திட்ட பணிகளை மாலை 5 மணி அளவில் திறந்து வைக்கிறார். மொத்தம் ரூ.140 கோடி மதிப்பில் முடிவடைந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

      தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும். டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவுக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்றைய தினம் அணைக்கு 4500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய உரிய தண்ணீரை பெற முதலமைச்சர் உத்தரவின் பேரில் டெல்லிக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சென்று சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார்.

      மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார். ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது. 24 மாதத்திற்குள் பணிகள் முடிவடைய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே பணிகள் முடிவடைந்து விடும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
      • விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

      சென்னை:

      மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 11, வார்டு - 143, நொளம்பூர் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.

      விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மேயர் பிரியா ராஜன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணிகள் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, 11- வது மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் , ஒன்றிய செயலாளர் அ.ம. துரை வீரமணி, எஸ்.பத்மபிரியா, கவுன்சிலர் வ.செல்வகுமார் , வி. ராஜேஷ், எஸ்.மணி, கே.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகப்படுத்தப்படும்.
      • மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.

      தஞ்சாவூர்:

      தஞ்சை உள்பட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.

      பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

      கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 7 முதல் 10 நாட்கள் ஆகும். தூர்வாரும் பணி இதுவரை 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 4 கி.மீ. வரை மட்டுமே தூர்வார வேண்டி உள்ளது. தண்ணீர் சென்றடைவதற்குள் 100 சதவீதப் பணிகள் முடிவடைந்து விடும்.

      இந்தப் பாசனத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.08 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 805 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரத்து 750 ஏக்கரிலும், கடலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 976 ஏக்கரிலும் என மொத்தம் 3.42 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகப்படுத்தப்படும்.

      மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து, எதிர்நோக்கு மழை, கர்நாடகாவில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன.
      • வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

      திண்டுக்கல்:

      திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

      திண்டுக்கல்லில் விடுபட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் நகருக்கு கூடுதலாக 18 எம்.எல்.டி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.131 கோடி மதிப்பில் பழைய பைப் லைன்கள் அகற்றப்பட்டு புதிய பைப்லைன்கள் அமைக்கப்பட உள்ளது.

      இதன்மூலம் 20 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், தேனி மாவட்ட குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

      • நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
      • சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.

      தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாத பதிலுரையில் இன்று தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

      நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

      ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

      இவை அனைத்தும் முதலமைச்சரின் அனுமதி பெற்று, முயற்சிகள மேற்கொள்ளப்படும்.

      இதேபோல், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

      சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.

      2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என முடிவெடுக்கப்படும்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      • நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார்.
      • திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார்.

      திருச்சி:

      திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவுக்கு, கருப்புக் கொடி காட்டியதாகக் கூறி அமைச்சரின் ஆதரவாளா்கள் திருச்சி சிவா எம்.பி.யின் வீட்டில் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். திருச்சி சிவாவின் கார், வீட்டு வாசலில் இருந்த பொருட்களை நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      இந்நிலையில், எம்.பி. திருச்சி சிவாவை அமைச்சர் கே.என்.நேரு இன்று சந்தித்து பேசினார். திருச்சி எஸ்.பி.ஐ காலணியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவாவை அமைச்சர் சந்தித்து பேசினார்.

      இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருச்சி சிவா கூறியதாவது:

      நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதல் அமைச்சரின் மனம் சங்கடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார். இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.

      கே.என்.நேரு கூறுகையில், 'திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார். திருச்சி சிவா வீட்டில் எனக்கு தெரியாமல் நடக்கக் கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டது. இருவரும் மனம் விட்டு பேசிவிட்டோம். இனி இதுபோன்று நடக்காது' என தெரிவித்துள்ளார்.

      ×