search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மா.சுப்பிரமணியன்"

    • 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா மற்றும் மருத்துவத்துறையில் ரூ.3.63 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18 வயது மேல் நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    புற்றுநோய் 4 நிலைகள் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் 2 நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். 4 மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தலைமை மருத்துவமனை என 1,397 மருத்துவ கட்டமைப்பு மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறவுள்ளது.

    இதற்கு அடுத்த படியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சின்ன மின்கசிவு காரணமாக தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மருத்துவ கழிவு எரிப்பது சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்த கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழை, சளி, காய்ச்சல் பாதிப்பு கருதி தான் கோவை மாவட்ட கலெக்டர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார்.

    ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதை நிரப்ப 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக ரூ.220 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-க்குள் காசநோய், தொழுநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்று வருகிறோம். அதை போலவே புற்று நோய் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டும் 38 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு இல்லை.
    • உயிரிழப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உயிர்சேதம் எதுவுமில்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்துள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதில் தீக்காயத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். 2021-ல் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டும் 38 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு இல்லை.

    இரண்டு ஆண்டுகளாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் உயிரிழப்பு இல்லாமல் தடுக்க தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவ மனைகளில் மொத்தம் 750 படுக்கைகளும் சிறப்பு தீக்காயம் வார்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் மட்டும் லேசான தீக்காயங்களுடன் 15 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். தமிழகம் முழுவதும் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்போ உயிர்சேதமோ ஏற்படவில்லை. உயிரிழப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது.

    இதற்கு முக்கிய காரணம் விழிப்புணர்வுதான். காவல்துறை, தீயணைப்புத் துறை மாசு கட்டுபாட்டு வாரியம், சேவை துறைகள், பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமலைகோவில் சாலை வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் தென்காசி வந்தார். வந்த உடன் வழக்கம்போல் தனது பாணியில் காலையிலேயே நடைபயிற்சி மேற்கொண்டார்.

    மேலகரம் அடுத்துள்ள மின்நகர் காசிமேஜர்புரம், இலஞ்சி திருமலைகோவில் சாலை வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.

    • நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    சென்னை :

    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் முத்துச்செல்வன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம், 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் 24 மணி நேர சேவை மூலம் 'நீட்' தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பதற்கு ஆலோசனை வழங்கும் விதமாக தொடங்கி வைக்கப்பட்டது. 40 மன நல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    2022-ம் ஆண்டில் 60 மனநல ஆலோசகர்களை கொண்டு இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆண்டில் (2023) நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 தொடங்கப்பட்டு கூடுதலாக 20 மனநல ஆலோசகர்கள் மற்றும் 2 மனநல மருத்துவர்களை கொண்டு வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் '104' மருத்துவ உதவி தகவல் மையம் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நோக்கத்தின்படி, இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய 1,44,516 பேருக்கு மே 18-ந்தேதி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை 54,374 மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அதில் 177 பேர் அதிக மனநல அழுத்தத்தில் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களிடம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

    நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 68,823 தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளின் விவரங்கள் நீட் தேர்வு நிர்வாகத்திடம் கேட்கப்பட்டு உள்ளது.

    அவர்களின் விவரங்கள் கிடைத்தவுடன் அந்த மாணவர்களை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இதுமட்டுமன்றி நீட் தேர்வு முடிவில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் பிரபஞ்சன் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.

    மத்திய அரசு 15 சதவீதத்துக்கான கலந்தாய்வு நடத்தி முடித்தவுடன்தான் தமிழ்நாடு அரசு மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 15 சதவீதம் மற்றும் 85 சதவீத மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக வழங்கினால், கடந்தாண்டு ஏற்பட்ட காலதாமதத்தையும் தவிர்த்து உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விரைந்து முடிக்கப்படும்.

    மேலும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தேர்வுக் குழு செயலாளர் ஆகியோரிடம் அடுத்த வாரமே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கும் பணியை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் காலதாமதம் இன்றி உடனடியாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்படும்.

    மேலும், இந்த ஆண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 450 இளங்கலை மருத்துவ படிப்பு இடங்களும், அரசு புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியில் 50 பல் மருத்துவ இடங்களும், கே.கே.நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 50 இளங்கலை மருத்துவ இடங்கள் என மொத்தம் 550 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 600 படுக்கைகளுடன் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட இருக்கிறது.
    • மொத்தம் 1,170 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் உள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.127 கோடியில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் மருத்துவ சேவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குனர் சாந்திமலர் வரவேற்றார்.

    புதிய கட்டிடத்தில் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- தமிழகத்தில் 11 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கல்லூரிகளில் மருத்துவ சேவை தொடங்கப்படாமல் இருந்தது. அதற்கான கட்டுமான பணிகளை தமிழக அரசின் சார்பில் கூடுதல் நிதியை ஒதுக்கி பணிகளை நிறைவுபடுத்தியதால் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் மருத்துவ சேவைகள் தொடங்கி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.நாமக்கல், ஊட்டி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட உள்ளது. 2, 3 மாதங்களில் அந்த பகுதிகளில் 500 மற்றும் 600 படுக்கைகளுடன் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட இருக்கிறது.

    இந்த மருத்துவமனை 500 படுக்கைகளுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மொத்தம் 1,170 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் உள்ளது. நாளொன்றுக்கு புறநோயாளிகளின் எண்ணிக்கை 2,700 பேர், உள்நோயாளிகளாக 700 பேர் வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.98 கோடியே 88 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைகளில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது.

    திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என்று அரசிடம் அமைச்சர், எம்.எல்.ஏ. ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ஆண்டுக்கு 100 பேர் பயிற்சி முடிக்கும் வகையில் ஏற்படுத்த கூறினார்கள். இதுதொடர்பாக மத்திய மந்திரியிடம் வலியுறுத்தினோம். 30 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க கோரினோம். 11 இடங்களில் புதிதாக செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் அமைய உள்ளது. திருப்பூரில் 100 மாணவியர் சேர்க்கையுடன் செவிலியர் பயிற்சி கல்லூரி மிக விரைவில் அமைய உள்ளது. அந்த கல்லூரிக்கு ரூ.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை என்பது பாராட்டுக்குரியது. வருமுன்காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை எளிதில் கிடைத்து வருகிறது. திருப்பூரில் பொதுமக்கள் பங்களிப்புடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நிதி உதவி அளித்து வருகிறார்கள். விரைவில் அரசின் பங்களிப்பு நிதியுடன் ரூ.30 கோடியில் நவீன கருவிகள் வாங்கப்பட உள்ளது' என்றார்.அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார–கள். முடிவில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் நன்றி கூறினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ம.தி.மு.க. அவைத்தலைவரான சு.துரைசாமி, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) தலைமை பொறியாளர் இளஞ்செழியன், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்ட நிர்வாகி திலகராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • மருத்துவ வல்லுநர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.

    கோவை,

    கோவை பீளமேடு அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், 2023-24 ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    இதில் மருத்துவ வல்லுநர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் முனைவர்.ப. செந்தில்குமார், தேசிய நலவாழ்வு இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் உமா, தமிழ்நாடு மருத்துவ சேவை கழக இயக்குனர் அரவிந்த், மருத்துவ பணியாளர் தேர்வு கழக தலைவர் கிலாட்ஸன் புஷ்பராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் (பொறுப்பு) மோகன் குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் சாந்தி மலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர்.ஹரி சுந்தரி மற்றும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தொண்டு நிறுவனத்தினர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் 565 மாணவர்களின் படிப்பு கட்டணத்தை அரசே ஏற்கும்.
    • அரசு ஒதுக்கீட்டில் 200 இடங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில், எம்பிபிஎஸ் படிப்புக்கு 459 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 106 இடங்கள் என ஆக மொத்தம் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த மாணவர்களுக்கு மருத்துவ ஆணைகளை வழங்கும் நிகழ்வு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பிற்கான ஆணையினை வழங்கினார். பின்னர் பேசிய அவர்; இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    'சிஎம்சி மருத்துவ கல்லூரியில் 50 இடங்கள், தனலட்சுமி, வெங்கடேஸ்வராவில் தலா 75 அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டில் 565 மாணவர்கள் சேர உள்ளனர். 7.5 % இட ஒதுக்கீட்டில் சேரும் 565 மாணவர்களின் படிப்பு கட்டணத்தை அரசே ஏற்கும். மருத்துவ படிப்பில் கூடுதலாக 200 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். மொத்த இடங்கள் 10,825-ஆக உயர்ந்துள்ளன. மருத்துவ படிப்புக்கான பாடநூல்கள் அடங்கிய மடிக்கணினிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • இன்புளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை.

    தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. சென்னையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில், அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்த சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் இதுவரை சுமார் 1044 நபர்களுக்கு இன்புளூயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டதில், தற்போது 364 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காய்ச்சல் அறிகுறியுள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் படியும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இன்புளூயன்ஸா காய்ச்சல் காரணமாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கான அவசியம் இல்லை. பதற்றம் அடைய வேண்டிய சூழல் தற்போது இல்லை. இதற்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் 365 நாட்களும் குழந்தைகள் படிக்காமல் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் வந்து விடும்.

    எனவே தலைவர்கள் அறிக்கைகள் விடும்போது நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து, அறிக்கை விட வேண்டும். அதன் பாதிப்புகளை வைத்து பேட்டிகளின் மூலம் அறிக்கைகளின் மூலம் மக்களை பதற்றமடையச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு அலைபேசி உதவி எண்.
    • மன நலன் காக்கும் மனம் திட்டம் அனைத்து கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

    அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான மன நலன் காக்கும் மனம் திட்டத்தினை சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுவாக மனிதர்கள் உடல்நலத்தை பேணுவதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், மனநலத்தை பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்று சொல்லலாம். உடலும் மனமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமான ஆக்கப்பூர்வமான வாழ்வை நாம் வாழ முடியும்.

    கல்லூரி மாணவர்களை பொருத்தவரை கல்வி மற்றும் வாழ்க்கை சார்ந்த பல்வேறு சவால்களை சந்திக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அச்சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகின்றனர். சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். இந்த வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலத்தை, அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், கூடுதலான நற்பலன்களை தரும். ​

    எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் துவங்கப்பட்டு 'மனநல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டுள்ளது. ​

    இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத்துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், மற்றும் அனைத்து வருட மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ​இத்திட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மனநல நல்லாதரவு மன்றங்களின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மனநலம் பேணும் வகையிலும் மனநல மேம்பாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்படும். பின்னர் இத்தகைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொண்ட மனநல தூதுவர்கள் மூலமாக கல்லூரிகளிலுள்ள இதர ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

    கூடுதலாக, மாணவர்களின் நலவாழ்விற்கான வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிய புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் மாணவர்களின் கலைத்திறன், கற்பனைத்திறன் உள்ளிட்ட அனைத்துவகை தனித்திறன்களை கண்டறிந்து, தனித்திறன் மேம்பாட்டிற்கான வழி வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    ​உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இத்திட்டம் முதல் கட்டமாக மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

    மனநல பிரச்சனைகள் வராமல் தடுப்பதும் மாணவர்களின் மனநல மேம்பாட்டினை உறுதி செய்து நிறைவான மாணவ பருவத்தை வாழ்ந்திட மாணவர்களை தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று 61,202 பயனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    • பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 9,02,253 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 12,62,089 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 61,202 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 2,98,634 பயனாளிகளுக்கும் மற்றும் 9,02,253 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.49% முதல் தவணையாகவும் 91.09% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 35 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 22 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். மாநிலத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மருதமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதனை நிரப்ப வேண்டும் என மனு வைக்கப்பட்டுள்ளது.
    • அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததாக தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் கூறியுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவ பத்மநாதன் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசியில் தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிற துணை இயக்குனர் மருத்துவ அலுவலகம் போதிய இட வசதி இல்லாமலும் மருத்துவ அலுவலர்கள் அமர்வதற்கு கூட இடமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதால் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் அலுவலகத்தை தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு வடபுறம் இருக்கிற இடத்தில் அமைக்க வேண்டும் என்ற துணை இயக்குனர் அலுவலக ஒப்புதலுடன் கூடிய கோரிக்கை மனுவை வழங்கினார்.

    அதேபோல ஆலங்குளம் ஒன்றியம் மருதமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றும், பெண் மருத்துவர் இல்லை, அலுவலக உதவியாளர் பல்நோக்கு உதவியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதனை நிரப்ப வேண்டும் என்றும் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சுதாகர் கொடுத்த கோரிக்கை மனு மற்றும் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் இயங்கி வருகிற அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை. கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி சுந்தரபாண்டியபுரம் பேரூர் செயலாளர் பண்டாரம், பேரூராட்சி தலைவர் காளியம்மாள் செல்வகுமார் கொடுத்த மனுவையும் சேர்த்து அமைச்சரிடம் வழங்கினார்.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள் வதாக தெரிவித்ததாக தி.மு.க. மாவ ட்ட பொறுப் பாளர் சிவ பத்மநாதன் கூறியுள்ளார்.

    ×