search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மருத்துவ வல்லுநர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை
    X

    கோவையில் மருத்துவ வல்லுநர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை

    • புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • மருத்துவ வல்லுநர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.

    கோவை,

    கோவை பீளமேடு அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், 2023-24 ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    இதில் மருத்துவ வல்லுநர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் முனைவர்.ப. செந்தில்குமார், தேசிய நலவாழ்வு இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் உமா, தமிழ்நாடு மருத்துவ சேவை கழக இயக்குனர் அரவிந்த், மருத்துவ பணியாளர் தேர்வு கழக தலைவர் கிலாட்ஸன் புஷ்பராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் (பொறுப்பு) மோகன் குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் சாந்தி மலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர்.ஹரி சுந்தரி மற்றும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தொண்டு நிறுவனத்தினர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    Next Story
    ×