search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumarasamy"

    பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Mandyabus #kumarasamy
    மண்டியா :

    மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து மண்டியாவுக்கு கடந்த 24-ந் தேதி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அந்த பஸ் கனகனமரடி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்- மந்திரி சித்தராமையா, மந்திரிகள் டி.சி.தம்மண்ணா, புட்டராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாண்டவபுரா தாலுகா கனகனமரடி பகுதியில் கால்வாயில் பஸ் பாய்ந்து 30 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது. இறந்தவர்களின் குடும்பத்தினர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு இருக்க மாட்டார்கள்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன். அதன்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mandyabus #kumarasamy
    6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்ததே குமாரசாமியின் சாதனை என்றும், விவசாயிகளின் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #Kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா  ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

    குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதங்கள் ஆகிறது. இதில் அவர் மக்களுக்கு கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் தான் அவரது சாதனை ஆகும். இந்த 6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்துக் கொண்டதே அவரது முக்கிய சாதனை ஆகும்.

    இந்த அரசு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால், விவசாயிகள் எதற்காக தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?. இன்று (அதாவதுநேற்று) கூட மண்டியா மற்றும் கலபுரகியில் விவசாயிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு முதல்-மந்திரி குமாரசாமியே காரணம் ஆகும்.

    தனது அரசு, சூழ்நிலையால் பிறந்த குழந்தையை போன்றது ஆகும் என்று குமாரசாமியே ஏற்கனவே கூறி இருக்கிறார். இந்த சூழ்நிலையால் பிறந்த குழந்தைக்கு ஏதாவது கொள்கை, கோட்பாடு, இலக்கு இருக்க முடியுமா?.

    குமாரசாமி தனது 6 மாத ஆட்சி காலத்தில் பாதி நாட்களை கோவிலுக்கு சென்றும், மீதமுள்ள நாட்களை சொகுசு ஓட்டலிலும் கழித்துள்ளார். பொதுமக்களை குறிப்பாக விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தான் அவர் செய்த சாதனை. ஆட்சி அதிகாரம், அவரது தலைக்கு ஏறிவிட்டது. அதனால் அவர் அடிக்கடி ஆணவ போக்குடன் பேசுகிறார்.



    பிரச்சினைகள் வரும்போது, பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன் என்று குமாரசாமி பேசுகிறார். இது மக்களையும், ஜனநாயகத்தையும் அவமானப்படுத்துவது போல் ஆகும்.

    குமாரசாமி, இந்த மண்ணின் மைந்தன் என்று பேசுகிறார். விவசாயிகளின் பிரச்சினைகள் தனக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார். ஆனால் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

    செயல்படாத நிலையில் உள்ள குமாரசாமியின் செயல்பாடுகளை கண்டு காங்கிரசார் வாய் திறக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. பெண் விவசாயி ஒருவரை குமாரசாமி தரக்குறைவாக பேசுகிறார். இதன் மூலம் அவர் பெண் இனத்தை அவமதித்துவிட்டார்.

    இதற்கெல்லாம் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் தான் பொறுப்பு. வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Yeddyurappa #Kumaraswamy
    கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட எதிர்ப்பு பெருகிவரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu #TipuJayanti
    பெங்களூரு:

    கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் தெற்கு பகுதிகளை ஆண்ட திப்பு சுல்தானின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை  சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக சமீபகாலமாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

    திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், திப்பு ஜெயந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

    நாளை நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்பதாக இருந்த முதல் மந்திரி குமாரசாமி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க  குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu  #TipuJayanti 
    கர்நாடக மாநிலம் ராமநகரம் இடைத்தேர்தலில் முதல்வரின் மனைவியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். #RamanagaraBypoll #BJPCandidate
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுககும் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 

    தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள் மட்டுமே உள்ள நிலையில், ராமநகரம் தொகுதியில் முதல்வர் குமாரசாமியை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் எல்.சந்திரசேகர் திடீரென போட்டியில் இருந்து விலகினார். அத்துடன் கட்சியில் இருந்தும் விலகிய அவர், தாய்க்கட்சியான காங்கிரசுக்கே திரும்ப உள்ளதாக கூறினார். 

    இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘பாஜகவில் சேர்ந்தபோது வரவேற்று, போட்டியிட வாய்ப்பு கொடுத்த எடியூரப்பாவும் மற்ற தலைவர்களும் என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ராமநகரம் தொகுதியை அவர்கள் புறக்கணித்துவிட்டனர்’ என்றார்.

    சந்திரசேகர் விலகியதன்மூலம் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எளிதில் வெற்றி பெறும் சூழல் உருவாகி உள்ளது. அதேசமயம், கடைசி நேரத்தில் வேட்பாளர் கட்சி தாவியது பாஜகவுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

    ராமநகரம் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்ததால் அதிருப்தி அடைந்த சந்திரசேகர், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்த சில தினங்களில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்படத்தக்கது. #RamanagaraBypoll #BJPCandidate
    கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumarasamy
    பெங்களூரு :

    கர்நாடக போலீஸ் துறை சார்பில் போலீஸ் வீர வணக்க நாள் விழா பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்தும், போலீஸ் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்தும் வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் குமாரசாமி பேசியதாவது:-

    சிலர் தங்களின் சுயநலத்திற்காக இந்த சமூகத்தை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அத்தகையவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் போலீசார் பின்வாங்கக்கூடாது. இத்தகைய நடவடிக்கைக்கு மாநில அரசு முழு ஆதரவு வழங்கும். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    போலீஸ் அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும். போலீசார் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஆயினும் மாநிலத்தை காக்கும் பணியில் கர்நாடக போலீசார் சிறப்பான முறையில் செயல்படுகிறார்கள்.

    சிறப்பாக பணியாற்றுவதில் கர்நாடக போலீசார் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளனர். இதற்காக கர்நாடக அரசு சார்பிலும், மக்கள் சார்பிலும் உங்களை பாராட்டுகிறேன். கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.

    போலீசார் என்னிடம் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். போலீஸ் அதிகாரி ராகவேந்திரா அவுராத்கர் வழங்கிய அறிக்கையில் சில திட்டங்கள், போலீசாரின் மேம்பாட்டிற்காக அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது. அதுபற்றி துணை முதல்-மந்திரி பரமேஸ்வருடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

    மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டாலும், போலீசாரின் கஷ்டங்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும். கடந்த 59 ஆண்டுகளுக்கு முன்பு, சீனா மற்றும் இந்தியா இடையே போர் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு கவுரவம் அளிக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

    கர்நாடகத்தில் பணியின்போது, 416 போலீசார் மரணம் அடைந்தனர். அவர்களின் உழைப்புக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். மேலும் அவர்களின் குடும்பத்தை காக்கும் பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. ராணுவத்தினர் நாட்டை காக்கிறார்கள். போலீசார் சட்டத்தை நிலை நாட்டுகிறார்கள். அமைதியை சீர்குலைப்பவர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், சமூக விரோதிகளை போலீசார் அடக்க வேண்டும். சைபர் குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதற்கு தேவையான வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்கும்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார்.

    இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. நீலமணி ராஜூ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #kumarasamy

    விவசாய கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பீதியடைய தேவை இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார். #Kumarasamy
    பெங்களூரு :

    டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடியின் பயனை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்திருப்பதாக தவறான தகவல் பரவி வருகிறது. இது வெறும் வதந்தி யாரும் நம்ப வேண்டாம். விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பீதியடைய தேவை இல்லை.

    கடனில் சிக்கி தவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற தனியாரிடம் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. அதற்கு மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளோம். அதனால் விவசாயிகள் யாரும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம்.

    விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதில் வெற்றி பெறுவோம். கடன் தள்ளுபடி விஷயத்தில் வெளியாகும் தவறான தகவல்களை விவசாயிகள் நம்பக் கூடாது. விவசாயிகள் சரியான தகவல்களை வழங்கினால், அதன் அடிப்படையில் கடன் தொகையை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் இடைத்தரகர்கள் பயன் அடைவது தடுக்கப்படும்.

    தனியார் கடன் தள்ளுபடிக்கான சட்ட மசோதாவில் 2 சந்தேகங்களை மத்திய அரசு கேட்டது. அவற்றுக்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். இந்த சட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும். கடன் தள்ளுபடியின் பயனை விவசாயிகள் முழுமையாக பெற வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    இந்த சந்திப்பின்போது, தேவேகவுடா, பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆகியோர் உடன் இருந்தனர். #Kumarasamy
    விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வரவேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு :

    காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, காந்தியின் உருவப்படத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதுபோல, துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா, காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காந்தி பவனில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களின் தலைநகரங்களிலும் காந்திபவன் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் காந்திபவன் கட்டுவதற்கு தேவையான இடம் கிடைக்கவில்லை. அந்த மாவட்டங்களில் எங்கு இடம் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அங்கு காந்திபவன் கட்டப்படும். 30 மாவட்டங்களிலும் காந்திபவன் கட்டப்படும். நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் தனியாக வெளியே சென்று விட்டு எந்த பிரச்சினையும் இ்ல்லாமல் வீட்டிற்கு வர வேண்டும் என்பதே மகாத்மா காந்தியின் கனவாகும். அவரது கனவை கர்நாடகத்தில் நினைவாக்க நான் மிகவும் விரும்புகிறேன். மக்கள் நிம்மதியாக வாழ சட்டவிரோதமாக நடைபெறும் சம்பவங்களை தடுக்க வேண்டும். கொள்ளையர்களை அடியோடு ஒழிக்க வேண்டும். அதற்காக பெங்களூரு நகர போலீஸ் துறைக்கு நேர்மையான அதிகாரிகளை நியமித்துள்ளேன்.

    எந்த விதமான நெருக்கடிகளுக்கும் அடி பணியாமல் சுதந்திரமாக மக்களுக்காக பணியாற்றும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நான் சொன்னால் கூட நீங்கள் கேட்க வேண்டாம், நேர்மையாக பணியாற்றுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக போலீசாருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளது.



    பல கோடி ரூபாயை வைத்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் விடுதிகள் மீது போலீசார் சோதனை நடத்தி வருவதுடன், சூதாட்டத்திற்கு கடிவாளம் போட்டு வருகின்றனர். பெங்களூருவில் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் தற்போது பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. நகரின் பாதுகாப்புக்காக பல கோடி ரூபாய் செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும்.

    இதற்கு முன்பு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தடை விதித்தேன். லாட்டரி விற்பனையை தடை செய்தேன். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது புதிய மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிப்பேனா?. புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்க நான் ஆலோசிப்பதாக தகவல்கள் வருகின்றன. அது தவறானது. மாநிலத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவ்வாறு புதிய மதுக்கடைகள் திறக்க உரிமம் வழங்க வேண்டும் என்று நான் நினைத்தது கூட இல்லை. அதனால் புதிய மதுக்கடைகள் திறக்க ஒரு போதும் அனுமதி அளிக்க மாட்டேன்.

    ஜனதா தரிசனம் நிகழ்ச்சியை விருப்பம் இல்லாமல் நடத்துவதாக சிலர் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் காலையில் இருந்து இரவு வரை மக்களின் குறைகளை கேட்டு அறிவதுடன், ஏராளமான மக்களின் குறைகளை சரி செய்துள்ளேன். வேலை வாய்ப்பு முகாம் நடத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். கூட்டணி ஆட்சியில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அப்படி இருந்தும் விவசாயிகள் தற்கொலை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்யக்கூடாது என்பதாலும், விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் விவசாயக்கடனை தள்ளுபடி செய்தேன். ஒரு விவசாயி தற்கொலை செய்வதால், அவரது குடும்பமே வீதிக்்கு வந்து விடுகிறது. அதனால் எந்த ஒரு விவசாயியும் தற்கொலை செய்யும் முடிவுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy 
    கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல என்றும், குமாரசாமிக்கு ஆட்சி பறிபோய்விடுமே என்ற பயம் வந்துவிட்டது என்றும் எடியூரப்பா கூறி இருக்கிறார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஆட்சி அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற பயத்தால் முதல்-மந்திரி குமாரசாமி விரக்தி அடைந்துள்ளார். இதனால் சபாநாயகரிடம் மனு கொடுத்து, பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தில் சபாநாயகரை இழுப்பது தவறானது. காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு பா.ஜனதா எப்படி பொறுப்பாக முடியும்?.

    எங்கள் கட்சியை சேர்ந்த சுபாஷ் குத்தேதார் எம்.எல்.ஏ.வை இழுக்க குமாரசாமி முயற்சி செய்தார். கலபுரகிக்கு சென்றபோது, எங்கள் எம்.எல்.ஏ.விடம் குமாரசாமி பேசினார். ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை கூட இழுக்க முயற்சி செய்யவில்லை. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு பா.ஜனதா பொறுப்பு அல்ல. அவர்களின் உட்கட்சி பிரச்சினை தான் அதற்கு காரணமாக இருக்கும்.

    சபாநாயகரிடம் கொடுத்த புகாரில், பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் உள்ள தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பவே குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டை ஜனதா தளம்(எஸ்) கூறுகிறது.



    மாநிலத்தில் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசால் செய்ய முடியவில்லை. அதனால் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜனதா மீது புழுதி வாரி இறைக்கிறார்கள். ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இவ்வாறு குற்றம்சாட்டுகின்றன.

    மக்களின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆயினும் நாங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று பல முறை கூறி இருக்கிறோம். எதிர்க்கட்சியாக பா.ஜனதா தனது கடமையை ஆற்றி வருகிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஆனால் ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெறாதபோது, நாங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

    இந்த அரசின் பெரும்பான்மை எண்ணிக்கை குறையும்போதோ அல்லது சரியாக செயல்படாதபோதோ ஆட்சி அமைக்க உரிமை கோருவது தவறா?. குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது இந்த மாநிலத்திற்கே தெரியும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Yeddyurappa  #BJP
    பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து வரும் நிலையில் கர்நாடகத்தில் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். #PetrolDieselPrice #Karnataka
    பெங்களூரு:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    எனினும் விலையை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. இன்றும் விலை உயர்ந்தது. இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85.31 ஆகவும், டீசல் ரூ.78 ஆகவும் விற்பனையானது. மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் 90 ரூபாயைத் தாண்டியது. இப்படியே போனால் விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என தெரிகிறது. எனவே, சில மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து விலையைக் குறைக்கத் தொடங்கி உள்ளன. 

    அவ்வகையில் கர்நாடாகவில் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி ரூ.2 குறைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால், மாநில அரசு வரியைக் குறைத்து அதன்மூலம் விலையை குறைக்க முடியும் என பொதுமக்கள் விரும்பினர். எனவே, குறைந்தது 2 ரூபாய் அளவில் வரியைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என குமாரசாமி தெரிவித்தார்.

    ஏற்கனவே, ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #Karnataka
    குடகு மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்றும், நிவாரண முகாம்களிலும் வகுப்பு நடத்தப்படும் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார். #Kodaguflood #kumarasamy
    பெங்களூரு :

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்-மந்திரி குமாரசாமி அங்கு 2 நாட்கள் ஹெலிகாப்டரில் பறந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அங்கு மழை குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகிறது.

    இந்த நிலையில் குடகு மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேஷ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை குமாரசாமி நேற்று தொடர்பு கொண்டு நிவாரண பணிகள் குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். இதுபற்றி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு வெந்நீர் வழங்க கியாஸ் மூலம் சுடுநீராக்கும் சாதனம், சமையல் கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க குடகில் 5 இடங்களில் கிடங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த கிடங்குகள் மூலம் 100 வாகனங்களில் நிவாரண பொருட்களை எடுத்துச் சென்று வினியோகம் செய்யப்படுகிறது.



    பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தார்ப்பாய் மற்றும் பிளாஸ்டிக் பைகள் தேவைப்படுகிறது. இதுதவிர மற்ற பொருட்கள் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளன. குடகு மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல்-டீசல் மக்களுக்கு கிடைப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்படி உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    50 ஆயிரம் உணவுப்பொருள் தொகுப்பை மக்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 61 பள்ளிகளை தவிர மற்ற இடங்களில் பள்ளிகளை இன்று(வியாழக்கிழமை) திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி குழந்தைகளுக்கு புதிதாக 5 ஆயிரம் பாடப்புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும் அங்கேயே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை சரிசெய்யும்படி பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இனி வரும் நாட்களில் சாலைகளில் இதுபோன்ற சேதங்களை தடுக்க பாதுகாப்பு சுவர்கள், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வரும் நாட்களில் இயற்கை பேரிடர்களை தடுக்கும் வகையில் மழை நீர் எந்த பிரச்சினையும் இன்றி செல்ல திட்டமிட்டு கால்வாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்ய அதற்கான நிலத்தை அடையாளம் காணும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள், பயிர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்படும்.

    வெள்ளத்தால் நில ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்கள் வழங்கப்படும். சாலைகள் சேதம் குறித்து பறக்கும் கேமரா மூலம் ஆய்வு நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Kodaguflood #kumarasamy
    போதுமான அளவு மழை பெய்யாவிட்டால் காவிரி ஆணையம் பயனற்றுவிடும் என்று கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #karnatakacmkumarasamy #cauveryissue

    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி ஆணையம் அமைக்க ஒப்புக் கொண்டது. ஆனால் குழு அமைக்க கர்நாடக அரசு இன்னும் பிரதிநிதியை நியமிக்காமல் காலம் தாழ்த்துகிறது.

    இந்த நிலையில், மதுரை வந்த கர்நாடக முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடகா பிரதிநிதிகள் நியமிக்காதது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், ‘‘காவிரி ஆணைய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்காதது இரண்டாம் பட்சம் தான். ஆனால் போதுமான அளவு மழை பெய்யாவிட்டால் காவிரி ஆணையத்தில் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.

    இதுவே மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை காட்ட பலமான காரணமாகிவிடும். தற்போது நன்றாக மழை பெய்கிறது. எனவே கடந்த 14-ந் தேதி முதல் கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடுகிறது.

    போதுமான அளவு மழை பெய்தால், தண்ணீர் திறந்து விடுவதில் அரசு நிர்வாகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #karnatakacmkumarasamy #cauveryissue

    குமாரசாமியால் காவிரி தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை கமல்ஹாசன் உருவாக்குவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan #KamalHaasan
    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. சார்பில் பல்வேறு மாநாடுகள் நடைபெற உள்ளன. மதுரையில் மகளிரணி மாநாடு ஜூலை 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் நடைபெற வேண்டும். ஆனால் அது தமிழகத்தில் நடைபெறவில்லை. நீட் தேர்வில் டீக்கடைகாரரின் மகள் வெற்றி பெற்று இருக்கிறார். இதை நாம் மறந்து விட்டோம்.

    நீட் தேர்வினால் உயிர் இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும். 1½ லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். 4 ஆயிரம் சீட்டுகளுக்கு அரசு தயார் செய்வது போல் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர ஊக்குவிக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட நீட்டுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு உள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் வேறு துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தமிழக அரசியல்வாதிகள் திடீர் திடீரென்று அரசியல் செய்கிறார்கள். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துள்ளது. ஆனால் உயர்நீதிமன்றம் செய்தது போல் பேசுகின்றனர்.


    கர்நாடகாவில் காவிரி பிரச்சனை முடிந்த பிறகு கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்து பேசியது தவறு. குமாரசாமியால் தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை அவர் உருவாக்குகிறார். இதனால் தமிழர்களையும், தமிழக மக்களையும் இழிவு படுத்துகிறார்.

    இது தன்னால்தான் முடியும் என்பது போல் கமல்ஹாசன் செயல்படுகிறார். எஸ்.வி.சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #KamalHaasan
    ×